03-11-2004, 02:40 PM
கருணா நீக்கம் : அமைதி முயற்சி பாதிக்காது - பெய்ரீஸ்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இருந்து அதன் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்த கருணா நீக்கப்பட்டது அந்த இயக்கத்தின் உள் பிரச்சனை என்று கூறியுள்ள இலங்கை அமைச்சர் பெய்ரீஸ், இதனால் அமைதி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் பேராசிரியர் பெய்ரீஸ், கருணா கேட்டுக்கொண்டிருப்பதைப் போல தனி போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இலங்கை அரசு செய்து கொள்ளாது என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனையை தென் இலங்கை கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவுடன் இலங்கை அரசோ அல்லது ராணுவமோ எந்த ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், ஆனால், கருணாவிற்கு இலங்கை ராணுவத்தின் ஒரு பகுதியினர் உதவி வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதென கூறியுள்ளது.
இதற்கிடையே, இலங்கையின் கிழக்குப் பகுதியில் கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அக்குழுவினர் கூறியுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று போர் நிறுத்தத்தை கடைபிடித்துவரும் ஸ்ரீலங்கா கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
நன்றி - வெப் உலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இருந்து அதன் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்த கருணா நீக்கப்பட்டது அந்த இயக்கத்தின் உள் பிரச்சனை என்று கூறியுள்ள இலங்கை அமைச்சர் பெய்ரீஸ், இதனால் அமைதி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் பேராசிரியர் பெய்ரீஸ், கருணா கேட்டுக்கொண்டிருப்பதைப் போல தனி போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இலங்கை அரசு செய்து கொள்ளாது என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனையை தென் இலங்கை கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவுடன் இலங்கை அரசோ அல்லது ராணுவமோ எந்த ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், ஆனால், கருணாவிற்கு இலங்கை ராணுவத்தின் ஒரு பகுதியினர் உதவி வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதென கூறியுள்ளது.
இதற்கிடையே, இலங்கையின் கிழக்குப் பகுதியில் கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அக்குழுவினர் கூறியுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று போர் நிறுத்தத்தை கடைபிடித்துவரும் ஸ்ரீலங்கா கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

