03-11-2004, 02:17 PM
புலிகளின் உட் பிரச்சனையைப் பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயலக் கூடாது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைப் பயன்படுத்தி, தென்னிலங்கை அரசியலாளர்கள் குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயகத்தில் தோன்றியிருக்கும் தற்போதைய பிரச்சினை, அவர்களது உள்முரண்பாடு எனவும், அதனை அவர்களே தீர்த்துக்கொள்வர் என்றும் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் இதனைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனையக்கூடாது எனவும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் தற்போது தோன்றியுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி, அவர்களை அழித்துவிட வேண்டும் என்று Nஐ.வி.பி.யின் தலைவர் சோமவன்ச தெரிவித்துள்ளதை இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆனாலும், அதேநேரம் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக ஐனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவும் குழப்பமான நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா, இப்போது ஒரு நாட்டின் தலைவி என்ற வகையிலல்லாமல், கட்சித் தலைவியாகவே செயற்பட்டுவருகிறார் எனவும் இந்த மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
நன்றி - புதினம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைப் பயன்படுத்தி, தென்னிலங்கை அரசியலாளர்கள் குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயகத்தில் தோன்றியிருக்கும் தற்போதைய பிரச்சினை, அவர்களது உள்முரண்பாடு எனவும், அதனை அவர்களே தீர்த்துக்கொள்வர் என்றும் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் இதனைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனையக்கூடாது எனவும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் தற்போது தோன்றியுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி, அவர்களை அழித்துவிட வேண்டும் என்று Nஐ.வி.பி.யின் தலைவர் சோமவன்ச தெரிவித்துள்ளதை இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆனாலும், அதேநேரம் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக ஐனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவும் குழப்பமான நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா, இப்போது ஒரு நாட்டின் தலைவி என்ற வகையிலல்லாமல், கட்சித் தலைவியாகவே செயற்பட்டுவருகிறார் எனவும் இந்த மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

