03-10-2004, 02:32 PM
போருக்குத் தயாராகிறார் பிரபாகரன்: புலிகள் அமைப்பை கைவிட்ட கருணா புகார்
கொழும்பு, மார்ச் 10: சண்டை மேற்கொள்வது இல்லை என்று இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளபோதிலும் மறுபுறம் சண்டையை மேற்கொள்ள தயாராகி வருகிறது விடுதலைப் புலிகள் அமைப்பு என்று அதிலிருந்து விலகிய கமாண்டர் கருணா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்குப்பகுதி புலிகள் கமாண்டராக இருந்தவர் கருணா என்கிற வி. முரளீதரன்.
செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
போருக்குத் தயாராகி வருகிறார் பிரபாகரன். அதற்காகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து (எல்டிடிஈ) பிரிந்து வந்துவிட்டேன்.
இலங்கையின் வடக்குப்பகுதியான வன்னி பகுதியில் புலிகள் நிர்வாகம் 1000 துருப்புகளை அனுப்பிவைக்கும்படி எமக்கு அழைப்பு விடுத்தது. அமைதி நிலவும்போது இந்த அழைப்பு வந்துள்ளது. அப்படியெனில் போருக்குத்தான் என நான் முடிவு செய்துள்ளேன். ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்தலில் முடிவு எப்படி அமைகிறதோ அதைப்பொருத்து போரை மீண்டும் தொடங்குவது பற்றி பிரபாகரன் பரிசீலிக்கக்கூடும்.
நன்றி - தினமணி
கொழும்பு, மார்ச் 10: சண்டை மேற்கொள்வது இல்லை என்று இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளபோதிலும் மறுபுறம் சண்டையை மேற்கொள்ள தயாராகி வருகிறது விடுதலைப் புலிகள் அமைப்பு என்று அதிலிருந்து விலகிய கமாண்டர் கருணா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்குப்பகுதி புலிகள் கமாண்டராக இருந்தவர் கருணா என்கிற வி. முரளீதரன்.
செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
போருக்குத் தயாராகி வருகிறார் பிரபாகரன். அதற்காகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து (எல்டிடிஈ) பிரிந்து வந்துவிட்டேன்.
இலங்கையின் வடக்குப்பகுதியான வன்னி பகுதியில் புலிகள் நிர்வாகம் 1000 துருப்புகளை அனுப்பிவைக்கும்படி எமக்கு அழைப்பு விடுத்தது. அமைதி நிலவும்போது இந்த அழைப்பு வந்துள்ளது. அப்படியெனில் போருக்குத்தான் என நான் முடிவு செய்துள்ளேன். ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்தலில் முடிவு எப்படி அமைகிறதோ அதைப்பொருத்து போரை மீண்டும் தொடங்குவது பற்றி பிரபாகரன் பரிசீலிக்கக்கூடும்.
நன்றி - தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

