03-10-2004, 01:19 AM
மட்டு-அம்பாறை பிரச்சனைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தை இழுப்பதற்கு முயற்சி: முஸ்லிம் காங்கிரஸ்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தற்போது தோன்றியிருக்கும் சில பிரச்சினைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தையும் இழுப்பதற்கு சில முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக, முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குள் முஸ்லிம்களையும் சம்பந்தப்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்க இந்த முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரசின் சூரர் கவுன்சில் தலைவர், இத்தகைய சதிக்குள் தாம் சிக்கிக்கொள்ளப் போவதில்லை எனவும், முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களுடன் இணைந்து, உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கே விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் தெரவித்துள்ளார்;.
முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களுள் ஒருவரான பஷீர் சேகுதாவூத் தலைமையில் நேற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே சூரர் கவுன்சில் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களது பாதுகாப்பையும், உரிமைகளையும் ஐனாதிபதியோ, பிரதமரோ உறுதிப்படுத்திவிட முடியாது என்றும் அங்கு குறிப்பிட்ட அவர், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் Nஐ.வி.பி.யுடனும், அதற்குத் தலைமையேற்றுள்ள ஐனாதிபதியுடனும் கூட்டமைத்துள்ள முஸ்லிம் தலைவரகள் முஸ்லிம்களது உரிமைகளைப் பெற்றுத்தரப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தற்போது தோன்றியிருக்கும் சில பிரச்சினைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தையும் இழுப்பதற்கு சில முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக, முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குள் முஸ்லிம்களையும் சம்பந்தப்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்க இந்த முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரசின் சூரர் கவுன்சில் தலைவர், இத்தகைய சதிக்குள் தாம் சிக்கிக்கொள்ளப் போவதில்லை எனவும், முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களுடன் இணைந்து, உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கே விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் தெரவித்துள்ளார்;.
முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களுள் ஒருவரான பஷீர் சேகுதாவூத் தலைமையில் நேற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே சூரர் கவுன்சில் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களது பாதுகாப்பையும், உரிமைகளையும் ஐனாதிபதியோ, பிரதமரோ உறுதிப்படுத்திவிட முடியாது என்றும் அங்கு குறிப்பிட்ட அவர், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் Nஐ.வி.பி.யுடனும், அதற்குத் தலைமையேற்றுள்ள ஐனாதிபதியுடனும் கூட்டமைத்துள்ள முஸ்லிம் தலைவரகள் முஸ்லிம்களது உரிமைகளைப் பெற்றுத்தரப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

