Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எம் அருமைத் தமிழ்மக்களே....!
#2
ஐ.பி.சி.யின் திண்ணை ஆய்வில் சோதிலிங்கம் அவர்கள் கூறியது போல தலைவர் வடக்குடன் போராட்டத்தை நிறுத்தியிருந்தால் 25 வருட காலம் இவ்வளவு இழுபட்டிருக்கத் தேவையில்லை.

இந்தக் கருத்தில் நியாயம் இருக்கத்தால் செய்கிறது. தமிழ் மக்களின் தீர்க்கமான பலத்தை காட்டும் இத்தருணத்தில் பிரதேசவாதத்தை தற்சமயம் எழுப்புவதன் மர்மம் என்ன? இந்தியாவின் பின்னணி இருப்பது என்பது சர்வ நிச்சயமாகிவிட்டது.

வட பகுதியில் 31 விடுதலை இயக்கங்கள் தோன்றின ஆனால் கிழக்கில் ஒரு இயக்கம்தானும் தொடங்கவில்லை. (இது எனக்கு தெரிந்தவை மட்டும். வேறு யாருக்கும் தெரிந்திருந்தால் கூறுங்கள்) தலைவர் கட்டிக்காத்த இயக்கம் இப்படியான சுயநலவாதிகளின் கையில் அகப்பட்டு பிரதேசவாதத்தைக் காட்டி தமிழ்த் தேசியவாதத்தை கொச்சைப்படுத்துவது மிக வேதனையான விடயம். இப்போது எமக்கு தேவை தமிழீழம், தமிழீழத் தேசியவாதம்.

நாம் முதலில் தமிழிழீழம் காண்பதற்கே கடினமாக இருக்கிறோம். இந்த லட்சணத்தில் பிரதேசவாதத்தை கருணா தூக்கியிருப்பது வேதனையான விடயம்.
Reply


Messages In This Thread
[No subject] - by kayanmathi - 03-09-2004, 09:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)