03-09-2004, 06:17 PM
பதுமன் வன்னியில் இருக்கிறார் "கொலை' செய்திக்கு திலக் ஆப்பு
திருகோணமலை மாவட்ட புலிகளின் கட்டளைத் தளபதி பதுமன் தனது பணியின் நிமித்தம் வன்னியில் உள்ளார். மிக விரைவில் அவர் திருமலை திரும்புவார் என திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.திலக் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி பதுமன் குறித்து திருமலை சம்பூரிலுள்ள புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கையிலேயே திலக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்டளைத் தளபதி பதுமன் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. இது வெறும் வதந்தியாகும். மக்கள் இது தொடர்பாக குழப்பம் அடையத் தேவை இல்லை என்றும் திலக் குறிப்பிட்டார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தேசிய தலைவரை சந்திக்கும் எமது வழமையான முறைக்கு அமைவாகவே கேணல் பதுமன் வன்னி சென்றுள்ளார். அவர் மீண்டும் திரும்பி வருவார். ஆனால் சில விஷமிகள் திட்ட மிட்டு தீய நோக்கத்துடன் கேணல் பதுமன் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பொய்யான புரளியைக் கட்டி விட்டுள்ளனர்.
இதில் எந்த விதமான உண்மையும் கிடையாது.மக்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் முகமாகவே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் திலக் கூறினார்.
நன்றி-வீரகேசரி
திருகோணமலை மாவட்ட புலிகளின் கட்டளைத் தளபதி பதுமன் தனது பணியின் நிமித்தம் வன்னியில் உள்ளார். மிக விரைவில் அவர் திருமலை திரும்புவார் என திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.திலக் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி பதுமன் குறித்து திருமலை சம்பூரிலுள்ள புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கையிலேயே திலக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்டளைத் தளபதி பதுமன் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. இது வெறும் வதந்தியாகும். மக்கள் இது தொடர்பாக குழப்பம் அடையத் தேவை இல்லை என்றும் திலக் குறிப்பிட்டார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தேசிய தலைவரை சந்திக்கும் எமது வழமையான முறைக்கு அமைவாகவே கேணல் பதுமன் வன்னி சென்றுள்ளார். அவர் மீண்டும் திரும்பி வருவார். ஆனால் சில விஷமிகள் திட்ட மிட்டு தீய நோக்கத்துடன் கேணல் பதுமன் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பொய்யான புரளியைக் கட்டி விட்டுள்ளனர்.
இதில் எந்த விதமான உண்மையும் கிடையாது.மக்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் முகமாகவே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் திலக் கூறினார்.
நன்றி-வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

