03-08-2004, 06:24 PM
அநாமதேய தகவலையடுத்தே பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறினோம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 80க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் அங்கு நிலவும் அசாதாரண சூழ் நிலையின் விளைவாக திருகோணமலை திரும்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என விடுக்கப்பட்ட அநாமதேய செய்தியைத் தொடர்ந்தே தாங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி திருகோணமலை திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை வன்னிப் பெரு நிலப்பரப்பைச் சேர்ந்த 40 பட்டதாரி மாணவர்களும் வன்னிக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதியுயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்திற்கும் தங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தின் கருத்துக்கள் அல்ல என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். இதனை முற்றாக மறுக்கின்றோம் எனவும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆறாம் திகதியிலிருந்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமையின் விளைவாக அன்றைய தினமே தாங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்
நன்றி - வீரகேசரி
மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 80க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் அங்கு நிலவும் அசாதாரண சூழ் நிலையின் விளைவாக திருகோணமலை திரும்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என விடுக்கப்பட்ட அநாமதேய செய்தியைத் தொடர்ந்தே தாங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி திருகோணமலை திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை வன்னிப் பெரு நிலப்பரப்பைச் சேர்ந்த 40 பட்டதாரி மாணவர்களும் வன்னிக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதியுயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்திற்கும் தங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தின் கருத்துக்கள் அல்ல என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். இதனை முற்றாக மறுக்கின்றோம் எனவும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆறாம் திகதியிலிருந்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமையின் விளைவாக அன்றைய தினமே தாங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

