03-07-2004, 03:12 PM
Karavai Paranee Wrote:எல்லாம் நன்மைக்கே
நற்பெயர் எடுக்க பல நாட்கள் ஆகும்
கெட்ட பெயர் எடுக்க ஓரு விநாடி போதும்
ம் ம் எல்லாம் சரிதான்
கருணா அம்மானின் துணைவியாரும் போராளிதான் அவருடைய பக்கத்திலும் போராளிகள் இருக்கின்றார்கள். அதைப்பற்றி செய்திகள் வெளிவரவில்லையே
Quote:கருணாவின் துரோகத்தனத்தை உலகத்தமிழருக்கு அறிவிப்போம்.
அண்மைய நாட்களாக கருணா விவகாரம் பற்றிய பேச்சே ஊடகங்களின் கவனத்தை இழுத்து வைத்திருக்கிறது.
தமிழீழத்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அன்னிய சக்திகளின் தலையீடுகள் விடுதலைப்போராட்டத்தை நசுக்க கருணா போன்றோரின் சுயநலங்கள் உதவியிருக்கின்றன. இதுவே அண்மைய செய்தியாக வந்த கருணா விடயமும்.
காலத்துக்குக்காலம் இந்தச்சுயநலக்காரர்களின் சதி நடந்து கொண்டே வருகிறது. 1980இல் உமாமகேஸ்வரன் சுந்தரம் என்பவரைப்பயன்படுத்தி ஆரம்பகாலத்தில் இயங்கிய சிலதொகையிலிருந்து 13பேரை தனியாக்கிப்பிரித்து புளொட் அமைப்பை உருவாக்கினார்.
அதேபோல் ராகவன் , நிர்மலா நித்தியானந்தன் ஆகியோரின் வெளியேற்றம். அடுத்தகட்டமாக 1993இல் மாத்தையா எனப்பட்ட மகேந்திரராசா அயல்நாட்டு சக்தியின் வலையில் விழுந்து இதேபோலொரு சதியில் இறங்கி அது முளையிலே கிள்ளப்பட்டு பத்து வருடம் கழித்து இன்னொரு வலையில் கருணா என்ற முரளீதரன் சிக்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
யாரிந்தக் கருணா ? 5வருடங்களாக தாயகத்தமிழரிலிருந்து புலம்பெயர் தமிழர்களாலெல்லாம் பேசப்பட்ட தளபதி கருணா அவர்களை ஒரு உன்னதமான போராளியாக தளபதியாகவே மக்கள் நம்பியிருந்தனர். நேற்றுவரையும் இந்த நம்பிக்கை எள்ளளவும் குறையாது இருந்தமையை மறுக்க முடியவில்லை. இதுகாலவரையும் ஒரு தளபதியாக மதிக்கப்பட்டவர் இதுவரை செய்த தியாகம் என்னவென்று நோக்கிப்பார்த்தால் 25வருடகாலமாக தமிழின விடுதலையை முன்னெடுத்து இதுகாலவரையும் முன்னால் வந்து நின்ற தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கட்டிவளர்த்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் நின்று அவரது நேரடி நெறிப்படுத்தலின்படியும் போராளிகளை வழிநடாத்தினார் அவ்வளவே. மற்றப்படி உயிர்க்கொடை புரிந்தது , குருதி சிந்தியது எல்லாமே போராளிகள்தான்.
கருணா அந்நியசக்திகளின் சதிவலையில் தான் சிக்கியிருப்பதை , தமிழினத்துக்கே மாபெரும் துரோகத்தைப் புரிந்துள்ளதை மறைப்பதற்காக தன்னை தென்தமிழீழ மக்களைக்காக்கும் சக்தியாகவும் கருதிக்கொண்டு மட்டக்களப்பு மக்களே தன்பக்கம் என்ற மாயையையும் உருவாக்கியிருக்கிறார். ஆனால் தென்தமிழீழ மக்களைப்பொறுத்தவரை அந்த மக்களுக்கு நீதியை அல்ல கொடும் அநீதியே இழைத்துள்ளார். அத்து மீறிய வரியறவீட்டிலிருந்து அண்மையில் மட்டக்களப்புப்பகுதியில் இடம்பெற்ற மூன்றாந்தரப்பில் செய்த கொலைகளைச் செய்ததற்கும் காரணமானவர் இந்தக் கருணா என்ற முரளீதரனே.
மக்களுக்காக தான் உழைக்கப்போவதாகவும் தமது பிரதேசத்தவர்கள் சண்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாதப்பிரிவினையைக் காரணம் காட்டித் தற்போது பிரச்சனையை உருவாக்கியிருக்கும் கருணா பாங்கொக் பேச்சுவார்த்தை முடிந்த கையோடே தனது மனைவி பிள்ளைகளை மலேசியாவுக்கு அனுப்பியதன் மர்மம் என்ன ? ஆக இவரால் நன்கு திட்டமிட்டு நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விடயமே தற்போது நடக்கின்ற சதியென்பது தெளிவாகிறது.
தென்தமிழீழ மக்களின் கரிசனையாளனாக தென்தமிழீழமக்கள் , புலம்பெயர் தமிழ் மக்கள் , தமிழீழ இதரபிரதேச மக்களையும் தன் வலைக்குள் வீழ்த்த முனைகிறார் என்பதே உண்மை. நீண்டகாலமாக கருணாவிடமிருந்த தலைமைத்துவப்போட்டியை வெளிப்படுத்தும் வகையில் தன்னிடம் மாபெரும் சக்தியுள்ளதானதொரு மாயையை உருவாக்கி மக்கள் மனதில் தானே பெரும் தலைவன் என்ற எண்ணப்பாட்டையும் உருவாக்க முனைந்துள்ளார்.
சுயநலம் கருதிய இவரது செயற்பாட்டில் ஒரு சிலர் இவர்பின்னே நிற்க ஏனைய தளபதிகள் தலைவரிடம் போய்விட்டார்கள். கருணாவின் கீழ்உள்ள போராளிகள் கருணாவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்தச் சிறைப்படுத்தப்பட்டுள்ள போராளிகளின் துப்பாக்கிகள் கருணாமீது நீட்டப்படாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. காலம் பதில் சொல்லும் வேளை அருகில் என்பதை மறக்காதிருப்போம்.
தற்போது தமிழராகிய நமது கடமை கருணாவினால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் போராளிகளை மீட்பதே. கருணாவின் தேசத்துரோகமான இச்செயலை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம் என்பதனை அனைத்துத் தமிழ்மக்களும் புரிந்து கொண்டு கருணாவின் கபடத்தனத்தை உலகறியச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
தமிழீழத்தேசியத்திற்காக 25வருடகாலமாகப்போராடிவரும் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பையும் , தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்தலில் தமிழீழத்தேசியவிடுதலைப்போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கும் நமது ஒத்துழைப்பினையும் வழங்குவோம். தமிழீழத்தேசியத்தலைவரிடம் எந்தக்காலமும் சாதிய , பிரதேசவாதம் எதுவுமே இல்லையென்பதை கருணாவிற்கும் அந்நிய சக்திகளுக்கும் தெரிவிப்போம். கருணாவின் தேசத்துரோகத்தை மானமுள்ள தமிழர் யாரும் மன்னிக்கமாட்டோம். அவரது கற்றுக்குட்டித்தனமான இச்செயலை உலகத்தமிழினத்துக்குத் தெரிவிப்போம். நமது தாயகத்துக்கான கடமைகளை தொடர்ந்து செய்வோம். 'விடுதலை என்பது சும்மாயிருக்க வந்து சேராது. சோரம்போவோரால் விடுதலைப்போராட்டப்பாதையில் இவையெல்லாம் ஒரு படிப்பினையே படிப்பினைகளிலிருந்து நிமிந்தெழுவோம். தமிழீழத்தேசியத்தலைவரை நம்புவோம். அவரது வழிகாட்டலின் வழிநடக்கும் தளபதிகளை போராளிகளை நம்புவோம். தலைவரின் காலம் நமது தேசிய விடுதலையை வென்றுவரும். நமது கடமையை பங்களிப்பை வழங்குவோம். தலைவரின் கரத்தைப்பலப்படுத்துவோம்.
கருணாவின் தேசத்துரோகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவராக பிரபல ஆய்வாளர் ஒருவரின் பின்னணியும் இருப்பதாக செய்திகள் கசிகிறது. கருணா பின்னணி ? ஆய்வாளர் விபரங்கள் விரைவில் வெளியாகும்.
- முகுந்தன் - (போராளி)
(இக்கடிதத்தினை தேவை கருதி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்படுகிறது)
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

