03-06-2004, 08:31 PM
<span style='font-size:25pt;line-height:100%'>பிறிதொரு ஒப்பந்தம் செய்வது பற்றி அரசாங்கத்திடம் கருணா கேட்கவில்லை - பாதுகாப்பு அமைச்சு செயலாளர் சிறில்ஹேரத்</span>
[b]<span style='color:#ff0024'>இலங்கை அரசாங்கத்துடன் தாம் பிறிதொரு உடன்படிக்கையை செய்து கொள்ள விரும்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அரசாங்கத்துக்கு அறிவிக்கவில்லை என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் புதிய யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவேண்டுமென கருணா கோரினார் எனவும் ஆனால் அவ்வாறான ஒப்பந்தத்தைச் செய்துகொள்வது பிரபாகரனுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பாதகமாகிவிடும் எனக் கருதி, அரசாங்கம் கருணாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையிலேயே கருணா மேற்கண்டவாறு கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என சிறில் ஹேரத் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதேவேளை தமக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு நோர்வே அரசாங்கத்திடம் கருணா கோரியுள்ளார் என நோர்வேயின் "வேகேய்' எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தனியான யுத்தநிறுத்த ஒப்பந்தக்கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தபின்னர் கருணா நோர்வேயிடம் மேற்படி கோரிக்கையை விடுத்தார் என அப்பத்திரிகை கூறியது.
எனினும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஊடகத்துறைப் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.</span>
நன்றி - வீரகேசரி
[b]<span style='color:#ff0024'>இலங்கை அரசாங்கத்துடன் தாம் பிறிதொரு உடன்படிக்கையை செய்து கொள்ள விரும்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அரசாங்கத்துக்கு அறிவிக்கவில்லை என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் புதிய யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவேண்டுமென கருணா கோரினார் எனவும் ஆனால் அவ்வாறான ஒப்பந்தத்தைச் செய்துகொள்வது பிரபாகரனுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பாதகமாகிவிடும் எனக் கருதி, அரசாங்கம் கருணாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையிலேயே கருணா மேற்கண்டவாறு கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என சிறில் ஹேரத் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதேவேளை தமக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு நோர்வே அரசாங்கத்திடம் கருணா கோரியுள்ளார் என நோர்வேயின் "வேகேய்' எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தனியான யுத்தநிறுத்த ஒப்பந்தக்கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தபின்னர் கருணா நோர்வேயிடம் மேற்படி கோரிக்கையை விடுத்தார் என அப்பத்திரிகை கூறியது.
எனினும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஊடகத்துறைப் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.</span>
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

