03-06-2004, 03:58 PM
கருணா நீக்கத்தால் சமாதான நடவடிக்கைகளில் பாதிப்பு இல்லை: தமிழ்ச்செல்வன்
விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்டதால் சாமாதான நடவடிக்கைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்று இன்று காலை கிளிநொச்;சியில் இடம்பெற்ற ஊடகவியலாளருடனான சந்திப்பில் அரசியல்த்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
கருணாவின் நடவடிக்கை ஒரு தனிமனித செயற்பாடு.
எமது விடுதலை புலிகள் அமைப்பு தொடர்சியாக தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கீழ் கட்டுக் கோப்புடன் இருக்கின்றது. எனவே சமாதானத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை.
கருணாவின் கீழ் இருந்து செயற்பட்ட அனைத்து தளபதிகளும் எமது தேசியத் தலைவரின் தலைமையின் கீழேயே உள்ளனர்.
எதிர்வரும் பேச்;சுவார்த்தைகளில் கருணாவுக்கு பதிலாக பேச்;சுவார்த்தை தொடங்கும் போது மாற்றீடாக தலைமைப்பீடத்தால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் இணைக்கப்படுவர் என்றார்.
தேர்தல் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த தமிழ்ச்;செல்வன்,
புலிகளின் கட்டுபாட்டுப்பகுதியிலும் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இம்முறை எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடத்துவதற்காக விடுதலை புலிகளின் தலைமையகம் சகல மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் கடுமையான கட்டளை இட்டு இருப்பதாகவும் கூறினார்.
நன்றி - புதினம்
விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்டதால் சாமாதான நடவடிக்கைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்று இன்று காலை கிளிநொச்;சியில் இடம்பெற்ற ஊடகவியலாளருடனான சந்திப்பில் அரசியல்த்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
கருணாவின் நடவடிக்கை ஒரு தனிமனித செயற்பாடு.
எமது விடுதலை புலிகள் அமைப்பு தொடர்சியாக தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கீழ் கட்டுக் கோப்புடன் இருக்கின்றது. எனவே சமாதானத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை.
கருணாவின் கீழ் இருந்து செயற்பட்ட அனைத்து தளபதிகளும் எமது தேசியத் தலைவரின் தலைமையின் கீழேயே உள்ளனர்.
எதிர்வரும் பேச்;சுவார்த்தைகளில் கருணாவுக்கு பதிலாக பேச்;சுவார்த்தை தொடங்கும் போது மாற்றீடாக தலைமைப்பீடத்தால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் இணைக்கப்படுவர் என்றார்.
தேர்தல் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த தமிழ்ச்;செல்வன்,
புலிகளின் கட்டுபாட்டுப்பகுதியிலும் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இம்முறை எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடத்துவதற்காக விடுதலை புலிகளின் தலைமையகம் சகல மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் கடுமையான கட்டளை இட்டு இருப்பதாகவும் கூறினார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

