03-05-2004, 07:33 PM
புலிகளுக்கிடையில் முரண்பாடு என்ற செய்திகளில் பல்வேறு முரண்பாடு அதனை விளக்க இன்று கிளிநொச்சியில் செய்தியாளர் மாநாடு;
ரமேஷ், கௌசல்யன் பங்கு கொள்வர்
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், கிழக்கு பிராந்திய தளபதி கேணல் கருணாவுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்தே தமிழ்ச்செல்வன் இந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளது சமாதான செயலகத்தில் நடைபெறவுள்ள இச் செய்தியாளர் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் ரமேஷ், அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், கருணாவுக்குமிடையில் முரண்பாடு என்று வெளியான செய்திகளில் பல முரண்பாடுகள் காணப்படுவதனால் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவே இச் செய்தியாளர் மாநாடு நடைபெறுவதாக புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை குறித்து தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் புலிகளின் தளபதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.
நன்றி - வீரகேசரி
ரமேஷ், கௌசல்யன் பங்கு கொள்வர்
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், கிழக்கு பிராந்திய தளபதி கேணல் கருணாவுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்தே தமிழ்ச்செல்வன் இந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளது சமாதான செயலகத்தில் நடைபெறவுள்ள இச் செய்தியாளர் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் ரமேஷ், அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், கருணாவுக்குமிடையில் முரண்பாடு என்று வெளியான செய்திகளில் பல முரண்பாடுகள் காணப்படுவதனால் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவே இச் செய்தியாளர் மாநாடு நடைபெறுவதாக புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை குறித்து தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் புலிகளின் தளபதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

