03-04-2004, 08:18 AM
Eelavan Wrote:நண்பரே B.B.C ஒவ்வொருவர் கருத்திலோ கூற்றிலோ தங்களுக்குப் பிடித்ததை மட்டும் சிவப்பு எழுத்தில் அடையாளப்படுத்தி அதனை நோக்கி அல்லது அதனை மையமாக வைத்து வாதைடுவது உங்கள் கலை
மீண்டும் நான் அம்பாறை மாவட்ட அரசியல் பற்றிய எனது கருத்துக்களை இங்கு சேர்த்தல் தேவையில்லை அவை இன்னும் களத்திலேயே உள்ளன பாருங்கள்
நான் அப்போது சொன்னது தனி ஒரு கட்சியான மு.கா. வின் குரலை முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலாக கூறமுடியாது என்று
இந்தக் கருத்தில் கூட ரவூப் மு.கா.வின் கோட்டையான அம்பாறையில் இப்படியான கருத்தைச் சொன்னதால் அவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை கருத்தைப் பிரதிபலித்திருப்பார் என்றுதான் சொன்னேனே ஒழிய அதுதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரல் என்றோ அல்லது அப்படிச் சொன்னதற்காக அவர் புலிகளின் பக்கம் சார்ந்துவிட்டதாகவோ அவரது கூற்றை ஆதரிப்பதாகவோ சொல்லவில்லை
எனக்கு அரசியல் பிடிக்கும் B.B.C அரசியல் வாதிகளைப் பிடிப்பதில்லை அப்படி எமக்கு சார்பான கருத்துகளை மட்டும் மிகைப்படுத்தி இங்கு எழுதுவதை விட ஏதாவது கட்சியில் சேர்ந்து அவர்களுக்கு வால் அல்லது குடை பிடிக்கலாம் இது எனது தாழ்மையான கருத்து அப்படியென்று பார்த்தால் சந்திரிகா ஏன் கதிர்காமர் கூட அண்மையில் புலிகளைப் பாராட்டினார்கள் அடடா அவர்களல்லவா தமிழினப் பற்றாளர்கள்
எனக்கு பிடித்தை மட்டும் சிவப்பு எழுத்தில் போட வில்லை. உங்கள் எழுத்தில் உள்ள முரண்பாட்டைதான் சுட்டிகாட்டி இருக்கின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

