Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழரின் அடையாளத்துவம்
#26
thampu Wrote:<b>வழுதி எழுப்பிய கேள்விகளுக்கு விவேகானந்தர் கூறிய புகழ் மிக்க சிறுகதை ஒன்று இங்கு மிகபொருத்தமாக இருக்குமெனக்கருதி கீழ் இணைத்துள்ளேன்......</b>

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

<b>ஆக,
இத்தால் சகலரும் அறிவது என்னவென்றால்.........
இது மதத்திற்கு மட்டுமல்ல இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் பொருந்தும்.</b>

எந்த ஒரு இனமோ மொழியோ கலாச்சாரமோ மற்றதுக்கு தாழ்ந்தது அல்ல. அவற்றை ஒப்பிட்டு பார்ப்பதே தவறு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-27-2004, 08:52 PM
[No subject] - by Eelavan - 02-28-2004, 08:00 AM
[No subject] - by tamilini - 02-29-2004, 05:20 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 10:12 PM
[No subject] - by Mathivathanan - 02-29-2004, 10:24 PM
[No subject] - by kaattu - 03-01-2004, 02:17 PM
[No subject] - by shanthy - 03-01-2004, 04:37 PM
[No subject] - by kuruvikal - 03-01-2004, 05:35 PM
[No subject] - by thampu - 03-02-2004, 12:25 AM
[No subject] - by Eelavan - 03-02-2004, 01:54 AM
[No subject] - by கெளஷிகன் - 03-02-2004, 03:59 AM
[No subject] - by vasisutha - 03-02-2004, 04:22 AM
[No subject] - by Eelavan - 03-02-2004, 07:42 AM
[No subject] - by கெளஷிகன் - 03-02-2004, 08:48 AM
[No subject] - by Ramanan - 03-02-2004, 12:00 PM
[No subject] - by kaattu - 03-02-2004, 01:36 PM
[No subject] - by adipadda_tamilan - 03-03-2004, 01:35 AM
[No subject] - by கெளஷிகன் - 03-03-2004, 12:15 PM
[No subject] - by kaattu - 03-03-2004, 01:32 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 05:00 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 05:02 PM
[No subject] - by thampu - 03-03-2004, 09:20 PM
[No subject] - by nalayiny - 03-03-2004, 09:53 PM
[No subject] - by pepsi - 03-03-2004, 10:47 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 11:06 PM
[No subject] - by anpagam - 03-03-2004, 11:19 PM
[No subject] - by thampu - 03-03-2004, 11:53 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 11:54 PM
[No subject] - by Mathan - 03-04-2004, 08:29 AM
[No subject] - by கெளஷிகன் - 03-04-2004, 09:30 AM
[No subject] - by Eelavan - 03-05-2004, 04:54 AM
[No subject] - by Mathan - 03-05-2004, 08:29 PM
[No subject] - by vasisutha - 03-05-2004, 10:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)