03-02-2004, 07:27 PM
Eelavan Wrote:B.B.C ரவூப் அரசியல் லாபத்திற்காகச் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பு பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டதற்காக அவரைப் பாராட்டத் தான் வேண்டும்
ஆனால் ஜனாதிபதி முறமை பற்றிய கூற்றுத் தான் உதைக்கிறது
எல்லாம் அரசியல் லாபம் தான் ஈழவன். நமக்கு ரவூப் ஹக்கீம் என்ன நினைக்கிறார் என்பதை விட முஸ்லீம் மக்கள் என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம்.
இதற்கு முன்னால் முஸ்லீம் காங்கிரஸ் வலுவாக இருந்து பெரும்பான்மையான முஸ்லீம் மக்களோட ஆதரவையும் பெற்றிருந்தாங்க. அந்த சமயத்தில அங்க தனி அலகு கேட்டாங்க. அப்போ அது முஸ்லீம் மக்களோட குரல். அவங்க சேர்ந்து வாழ் விருப்பம் இல்லை தனி அலகு வேணுமுன்னு கேட்டா குடுக்கத்தான் வேணும் வேறு வழியில்லை. அதுதான் நியாயமும் கூட.
இப்போ பாராளுமன்றம் கலைச்சாச்சு முஸ்லீம் காங்கிரசும் பிளவு பட்டு போயிருக்கு. இடைக்கிடை புலிகளின் தலைமையை ஏத்துக்கிறோமுன்னு சில குரலும் முஸ்லீம்கள் கிட்ட இருந்து கேக்குது. இதுல எது தான் பெரும்பான்மை முஸ்லீம்களோட குரல்? அவங்களுக்கு என்னதான் தேவை? ஒரே குழப்பமா இல்லையா? என்னதான் செய்வது? எல்லாத்துக்கும் தேர்தல் முடியும் வரைக்கும் பொறுத்திருக்கவேண்டியது தான்.
இப்போ எல்லாருமே தேர்தல் களத்தில இருக்காங்க புலிகளையும் சேர்த்து தான் சொல்லுறேன். நியாயமா தேர்தல் நடந்தா தமிழ் மக்கள் என்ன நினைக்கிறாங்க முஸ்லீம் மக்கள் என்ன நினைக்கிறாங்க எல்லாமே தெரியவந்துரும். புலிகள் அவங்களோட வேட்பாளரை களத்தில நிறுத்தி பிரச்சாரமும் செய்யிறாங்க. அவங்களோட தேர்தல் அறிக்கையில முஸ்லீம்கள், ஏக பிரதிநிதித்துவம், இடைக்கால நிர்வாகம் பத்தியும் சொல்லியிருக்காங்க. இதே மாதிரி முஸ்லீம் காங்கிரசும் அவங்களோட தனிஅலகு கோரிக்கைய தேர்தல் அறிக்கையில வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். (ஏற்கனவே வைச்சுட்டாங்களா?)
இந்த தேர்தல்ல இருந்து முஸ்லீம்கள் சம்மந்தமா சில முக்கியமான கேள்விக்கு விடை கிடைச்சுரும்
1) வட கிழக்கு முஸ்லீம்கள் புலிகளோட தலைமையை ஏத்துக்கிறாங்களா?
அப்பிடி ஏத்துக்கிறதா இருந்தா முஸ்லீம்கள் புலிகளோட வேட்பாளருக்கே வாக்களிப்பாங்க. இல்லைன்னா ஹக்கீம்க்கோ இல்லை அஷ்ரப் மனைவிக்கோ வாக்களிப்பாங்க.
2) ஏத்துக்கலைனா யார் அவங்களோட பிரதிநிதி?
ஹக்கீம்அணி, ஹிஸ்புல்லா ? அஷ்ரப் மனைவி அணி?
அப்பிடி யாரையாவது அவங்க தீர்மானிச்சாங்கன்னா அவங்களோட முஸ்லீம் மக்களோட உரிமைபத்தி பேசவேண்டியதுதான். அது தனி அலகா இருந்தாலும் சரி. வேறு வழியில்லை.
என்ன சொல்றீங்க ஈழவன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

