03-01-2004, 06:28 PM
உண்மை அதுதானே?! தமிழனின் சைவம் வேறு.. இன்றைய சைவம் வேறல்லவா? இதைப்பற்றி சரியான அறிவு எனக்கும் இல்லை என்பதுதானே உண்மை?! எனினும் சித்தர்கள் யார்? வீர சைவர்கள் என்போர் யார்? காளி வைரவர் போன்றவைகள் யார்? சைவம் புலால் உண்ணாதே என்கிறது. அதேவேளை காளி கோயில்களில் பலியிடுவதும்.. மீன் படைப்பதும் வேள்வி என்ற பெயரால் எப்படி வந்தன? ஆலயங்களில் அண்டாத பறைமேளம் பத்திராளி கோயில் வேள்விகளில் எப்படி ஒலி எழுப்புகின்றன? ஏன் இந்த முரண்பாடு? இவற்றை ஆராய முற்படும்போது பல உண்மைகள் தெரிய வரும் என நினைக்கிறேன்.
.

