02-29-2004, 09:57 PM
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றக்கூடிய அரசில் நாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை: ரவூப் ஹக்கீம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றக்கூடிய அரசாங்கம் ஒன்றில் தாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய நீண்ட செவ்வியொன்றிலேயே, ரவூப் ஹக்கீம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தமக்கும் இடையில் பொதுவான உடன்பாடுகள் கிடையாது எனத் தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களது உரிமைகளையும், அபிலாசைகளையும் தமிழ் தேசியக் கூட்;;டமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அத்தகையவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமது கட்சி இணையக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விடயம் n;தாடர்பில் தாம் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ரவூப் ஹக்கீம், சிறீலங்கா ஐனாதிபதி அண்மைக் காலமாக எடுத்துவரும் நடவடிக்கைகள் முழுச் சமாதான முயற்சிகளையும் பாதிக்கக்கூடியன என்றும், அத்துடன், Nஐ.வி.பி.அங்கம் வகிக்கும் ஒரு கூட்டமைப்புக்குள் தாம் இடம்பெறுவது சாத்;தியமற்ற ஒன்று என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றக்கூடிய அரசாங்கம் ஒன்றில் தாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய நீண்ட செவ்வியொன்றிலேயே, ரவூப் ஹக்கீம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தமக்கும் இடையில் பொதுவான உடன்பாடுகள் கிடையாது எனத் தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களது உரிமைகளையும், அபிலாசைகளையும் தமிழ் தேசியக் கூட்;;டமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அத்தகையவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமது கட்சி இணையக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விடயம் n;தாடர்பில் தாம் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ரவூப் ஹக்கீம், சிறீலங்கா ஐனாதிபதி அண்மைக் காலமாக எடுத்துவரும் நடவடிக்கைகள் முழுச் சமாதான முயற்சிகளையும் பாதிக்கக்கூடியன என்றும், அத்துடன், Nஐ.வி.பி.அங்கம் வகிக்கும் ஒரு கூட்டமைப்புக்குள் தாம் இடம்பெறுவது சாத்;தியமற்ற ஒன்று என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

