02-28-2004, 12:01 AM
<span style='font-size:30pt;line-height:100%'>தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க புலிகள் கோரிக்கை </span>
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: ஏனைய அரசியற் கட்சிகளைப் போல அதைப் பெற்றுத் தருவோம். இதைப் பெற்றுத் தருவோம் என்று ஆசைவார்த்தை கூறி மோசம் செய்ய எங்களுக்கு தெரியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக எமது உயிரைக் கூடத் தியாகம் செய்ய நாம் தயங்க மாட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தேர்தலில் புலிகள் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளிப்படையாக பேராதரவு வழங்குகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதன் மூலம்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பாராளுமன்றத்தில் தெரிவிக்க முடியும் என்பது எமது நம்பிக்கை ஆகும். அதே நேரம் இத்தேர்தல் எமது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்திக் காட்ட அருமையான வாய்ப்பாக அமைகின்றது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழரின் ஐக்கியத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டியது தமிழ்க் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.
நன்றி - வீரகேசரி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: ஏனைய அரசியற் கட்சிகளைப் போல அதைப் பெற்றுத் தருவோம். இதைப் பெற்றுத் தருவோம் என்று ஆசைவார்த்தை கூறி மோசம் செய்ய எங்களுக்கு தெரியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக எமது உயிரைக் கூடத் தியாகம் செய்ய நாம் தயங்க மாட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தேர்தலில் புலிகள் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளிப்படையாக பேராதரவு வழங்குகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதன் மூலம்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பாராளுமன்றத்தில் தெரிவிக்க முடியும் என்பது எமது நம்பிக்கை ஆகும். அதே நேரம் இத்தேர்தல் எமது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்திக் காட்ட அருமையான வாய்ப்பாக அமைகின்றது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழரின் ஐக்கியத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டியது தமிழ்க் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

