02-24-2004, 08:28 AM
thampu Wrote:Mathivathanan Wrote:[quote=thampu]History is written by the winners.போராட்டப் புத்தகம் அங்கிருந்து எழுத முடியாதய்யா.. **** இந்தாள் தப்பித் தவறி எகையோ இருந்து எழுதி வெளியிட்டபடியால் தப்பித் தவறி வந்திருக்குது.. கொஞ்சக்காலத்திலை அதுகூட இருக்காது..
~Alex Haley
காலம் காலமாக வென்றவர்களே வரலாற்றை எழுதிவருகிறார்கள்..
விழுந்தவனுக்கும் விழுத்தப்பட்டவனுக்கும் வாழ்வு இல்லாதது போல் வரலாறும் இல்லை.
இனி...
மூலத்தை வாசியாத நான் வார்த்தையாட முற்படுமுன்.......
இவ்வாறு பேசப்பட்ட புத்தகங்கள் எத்தனை தமிழில் வந்துள்ளன........
என் ஞாபகம் சரியாக இருந்தால்...
1. அருளரின் லங்கராணி 1977/78
2. கோவிந்தனின் புதியதோர் உலகம் 1984/85
3. யாழ் பல்கலைகழக ஆசிரியர்களின் முறிந்த பனை 1996/97
3. அடல் பாலசிங்கத்தின் விடுதலை வேட்கை 2001
4. ஷோபா சக்தியின் கொரில்லா 2002
5. பாலசிங்கத்தின் விடுதலை 2003
6 புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 2004
என விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களே.
நிச்சயமாக நான் ஒன்றை நம்புகின்றேன் போராட்ட வரலாற்றின் பன்முகத்தன்மையை அடுத்த சந்ததி (நாமும்) புரிந்துகொள்ள இன்னும் நூறு புத்தகங்கள் வெளிவரவேண்டும்...
Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.
~African Proverb
****தணிக்கை செய்யப்பட்டுள்ளது-இராவணன் .[/quote
யதார்த்தத்தில் பூடகமாக வாழப்பழகிக்கொண்ட நல்லவர்கள் நிறைய வாழும் புண்ணிய தேசம்.....................
நன்றி தம்பு சரியானதொரு புத்தகப்பட்டியலைத் தந்துள்ளீர்கள்.
சோபா சக்தியின் கொரில்லாப்புத்தகம் இன்னும் எனது கையில் கிட்டவில்லை.
அருளரின் லங்காராணி அற்புதமான ஒரு வரலாற்று நாவல்.யார் இந்த அருளர்(ஈரோஸ்?) என்பது கூட எனக்குத் தெரியாது.எனினும் அந்த இனக்கலவர காலம் பதிவு செய்யப்பட்டுள்ளது இஅதே போல் செங்கைஆழியானால் 24 மணி நேரம் என
மற்றைய கலவர நாட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(இந்த லங்கா ராணி புத்தகத்தை இந்தியாவிலிருந்து ஒரு நண்பரிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கிவந்து
இங்கு ஒரு நண்பரிடம் இரவல்கொடுத்து
அது காணாமல் போன பட்டியலில் இடம்பெற்றுவிட்ட சோகக் கதையும் ஒன்று என்னிடமுள்ளது)
அதேபோல் முறிந்தபனைகள் புத்தகமும் வாசித்துள்ளேன் .இந்திய இராணுவ அட்டகாசங்களைப்பற்றியும் குறிப்பாக யாழ் மருத்துவமனையில் இந்தியப்படைகள் நடந்தவிதம் பற்றி மக்கள் வாயால் எழுதப்பட்டுள்ளது.முடிந்தால் படித்துப்பாருங்கள்
வி.புலிகள் பற்றியும் அதில் உண்டு.நல்லவையும் உண்டு இடறல்களும் உண்டு.எனக்கு அவை எந்தவித கருத்து மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.
விடுதலை வேட்கை இன்னமும் முழுதாகப் படிக்க கிடைக்கவில்லை.ஒரு சில அத்தியாயங்கள் தமிழ்ப்பத்திரிகை வாயிலாகப்படித்தேன்.தயக்கமின்றி சில செய்திகளை எழுதியிருந்தார் .கட்டாயம் படிக்கவேண்டும்.புத்தக வசதி கிடைத்தால் முழுமையாகபஇ படித்துவிட்டு எழுதுகிறேன்.யாராவது படித்திருந்தால் எழுதுங்கள்.
மிüகுந்த தாக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தியபுத்தகம் இந்த ்பளொட்டிலிருந்து விலகிய
மற்றைய குழு எழுதிய புதியதோர் உலகம்.புத்தகம் நகல் எடுக்கப்பட்டு ஒற்றைகளாகவே நான் படிக்கக்கூடியதாகவிருந்தது.இன்னமும் மறக்கமுடியாத
சித்திரவதை நினைவுகளை மீட்டும் புத்தகம் இது..
பிறகு இவர்கள் எப்படி மாறினார்கள் என்பது
அடுத்த வரலாறு!


