06-27-2003, 10:02 AM
ஏன் பிறந்தோம் என்கிறாயா ?
இல்லை ஏன் அமைதியானோம்; என்கிறாயா ?
நிஜம்தான் இப்போதைக்கு நாங்கள்
விடை காணாத புதிர்கள் தான்..
ஆனால்
நாளையொரு நாள் விடையும்
விடுதலையும் கண்ட சுதந்திரப்
பறவைகளாய் நிச்சயம் உதிப்போம் !
அப்போது கேட்கிறேன் - நீ உன்
மௌனத்தைக்கலைத்து எமக்காக
வாழ்த்தி நிற்பதற்கு.......... -
அதுவரை
நீ மௌனமாகவேயிரு !
உன் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருந்துவிட்டுப்போகட்டும்.
மறந்து விடாதே......
நாளையொருநாள் விடுதலையின்
களிப்பில் உன்னையொருமுறை
உசுப்பிப்பார்ப்பேன் !
எனக்காக உன் மௌனத்தை
கலைப்பாய் என்று நினைக்கின்றேன்.
மௌனமாய் வீற்றிரு !
காலம் கை கூடும் வரை.
அதுவரை........
அன்போடு - வை-யா-புரியிலிருந்து ஒரு மனிதன் வையாபுரியாக !
இல்லை ஏன் அமைதியானோம்; என்கிறாயா ?
நிஜம்தான் இப்போதைக்கு நாங்கள்
விடை காணாத புதிர்கள் தான்..
ஆனால்
நாளையொரு நாள் விடையும்
விடுதலையும் கண்ட சுதந்திரப்
பறவைகளாய் நிச்சயம் உதிப்போம் !
அப்போது கேட்கிறேன் - நீ உன்
மௌனத்தைக்கலைத்து எமக்காக
வாழ்த்தி நிற்பதற்கு.......... -
அதுவரை
நீ மௌனமாகவேயிரு !
உன் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருந்துவிட்டுப்போகட்டும்.
மறந்து விடாதே......
நாளையொருநாள் விடுதலையின்
களிப்பில் உன்னையொருமுறை
உசுப்பிப்பார்ப்பேன் !
எனக்காக உன் மௌனத்தை
கலைப்பாய் என்று நினைக்கின்றேன்.
மௌனமாய் வீற்றிரு !
காலம் கை கூடும் வரை.
அதுவரை........
அன்போடு - வை-யா-புரியிலிருந்து ஒரு மனிதன் வையாபுரியாக !

