04-30-2006, 10:57 AM
<b>அறிமுகம்:</b>
<b>இன்று அரச சபை கூடும் நாள்... மன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். ஒரு சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மன்னர் நாட்டு நிலைமை பற்றி விசாரிக்கிறார்.. காட்சி தொடர்கிறது... </b>
மன்னர்: மந்தி.. மந்தி.. சே மந்திரி நாட்டில் நிலைமைகள் எப்படி வான் பாய்கிறதா? வருசம் மும்மாரி பொழிகிறதா.?? மக்கள் வரி செலுத்துகிறார்களா..?? குறைகள் அறியப்படுகின்றனவா.? நிறைவேற்றப்படுகின்றனவா..?? (அடுக்கிக்கொண்டே போகிறார்)
மந்திரி: மன்னா சகலதும் நன்றே நடக்கிறது மக்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்... (வந்திட்டார்யா.. நாட்டில என்ன நடக்குது என்று தெரியாமல் என்ன நித்திரையே கொண்டவர்.. மழை பெய்கிறது கூட மந்திரி சொல்லித்தெரியவேண்டிக்கிடக்கு.. நல்ல மன்னர் நல்ல நாடு) மனதிற்குள் புறுபுறுக்கிறார் மந்திரி.
மன்னர்:மந்திரி ஏதாவது கூறினீர்களா??
மந்திரி: இல்லை மன்னா இல்லை உங்களை புகழ்ந்து கவி படித்தேன்.. அடுத்தவை செவிமடுத்தால் வெட்கக்கேடு அது தான் மனதிற்குள் படித்தேன்.....
<b>மன்னர் மந்திரியை முறைத்தபடி அவையுடன் சங்கமிக்கிறார்.</b>
<b>அவையில் குறை நிறை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது.. குடிமகன் வருகிறார்.. கையில் ஒரு டோச் லைட் உடனும் அதற்கு மேல் ஈரத்துணியை போற்றிய வாறு வருகிறார்.. லைட் எரிந்து கொண்டிருக்கிறது..</b>
சின்னப்பு: மன்னா வாழி நம்குலம் வாழி தமிழ் வாழி... வாழி வாழி..
மன்னர்: வாழியோடு வந்த அப்பு.. என்ன நடந்தது ஏன் தாமதம்..
சின்னப்பு: விடிவெள்ளிக்கு முதல் எழுந்து தோட்டம் சென்றிருந்தேன்.. வர தாமதம் ஆகிவிட்டது மன்னா..
சின்னாச்சி: முறைத்துப்பாத்தபடி.. நினைச்சனான் இப்படி ஏதாவது திருகுதாளம் நடக்கும் என்று.. பின்ன விட்ட விடியக்காலமை.. ஒரு தேத்தண்ணி கூடத்தராமல்.. தேடினால் ஆளைக்காணேல்ல.. என்ர தோட்டத்திற்க என்ன நடந்ததோ.. ஆள் வைச்சு தேட்டம் செய்யிறன்.. இந்த ஆள் மினைக்கட்டுப்போய் என்னத்தை புடுங்கி வைச்சிதோ.. ஆண்டவா... திட்டியபடி இருக்கிறார்...
மன்னர்: நல்லது சின்னப்பு.. நீங்கள் தோட்டம் செய்கிறீர்களா.. பாராட்ட வேண்டிய விடயம்.. அதற்காக பொறுப்பில் இருக்கும் தாங்கள் இப்படி தாமதமாய் வரலாமோ..??
சின்னப்பு: இல்லை மன்னா காலையில் இருந்து கஸ்டப்படுகிறேன்.. இந்த விளக்கை அணைக்க முடியவில்லை.. விடிகாலை விடிவெள்ளிக்குமுன் எழுந்து.. என் அன்பு நண்பன் ஆசையாய்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாக தந்த இந்த டோச்லைட்டை கொண்டு சென்றேன்..... ஆனால்..
மன்னர்:என்ன நடந்தது சின்னப்பு... அங்கு என்ன நடந்தது.. தயங்காது சொல்லுங்கள்..
சின்னப்பு: இந்த லைட்டை எப்படி போடுவது என்று சொன்ன முகத்தான்.. எப்படி அணைப்பது என்பதை சொல்லித்தரவில்லை.. போடத்தெரிந்த நான்.. தோட்டம் சென்று.. விடிந்த பின்.. அணைப்பதற்காய்.. ஊதி ஊதி களைச்சுப்போனேன்.. அதன் பின்னர்.. தண்ணி எடுத்து ஊற்றி அணைத்தேன்.. அது அணையவில்லை.. துரவிற்குள் இறங்கி நீண்டநேரமாய் தண்ணீரில மூழ்கி வைத்திருந்தேன் அப்போதும் அணையவில்லை.. அது தான் ஈரதுணியால் போத்திக்கொண்டு வந்திருக்கிறேன்.. (விம்பி வெம்பி நிற்கிறார்)
மன்னர் மந்திரியை பார்க்கிறார்.. மந்திரி சென்று அந்த விளக்கை வாங்கி பட்டனை தட்டி அணைக்கிறார்..
சின்னப்பு: ஓய் கவி.. நீர் கெட்டிக்காரன் தான்.. எப்படி மேன் அணைச்சீர். பொன்ஸ் போட்ட போட்டில.. ஏனோ தானோ என்று லைட்டை தந்து பேக்காட்டீட்டு முகம்ஸ் ஓடீட்டுது சரிவரக்கேக்க முடியல்ல.. (என்று கூறி அசடு வழிகிறார்)
<b>எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்... சின்னாச்சி மட்டும்.. தன்னை நோக்காத சின்னப்புவை நோக்கி பல்லைக்கடித்துக்கொண்டிருந்தார்.. தன் தோட்டம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற ஏக்கத்தில்... ஆனால் குடிமகனோ.. சின்னாச்சி பக்கம் திரும்புவதை தவிர்த்துக்கொண்டு தனது இருக்கையில் அமர்கிறார்.................. </b>
<b>(திடீரென சுற்றுவட்டாரத்தில் உள்ள நாய்கள் குரைக்கின்றன.. என்னாச்சு ஏதாச்சு என்று எல்லோரும் பதட்டப்பட... புலனாய் எஜமானருடன் வருகிறது.. பலத்த சத்தம்.. (என்ன என்று பாக்கிறியளா.. ஒரு நாய் குரைச்சால் தெருவில உள்ள அனைத்து நாய்களும் குரைக்கிறது வழக்கம் தானே) மண்டபம் நிறைந்த நாய்களை காவலாளிகள் கட்டுப்படுத்த.. புலனாய் மட்டும் ஆய்வாளருடன் வந்து அமர்கிறது.</b>
மன்னர்: ஆய்வாளரே என்ன ஏன் தாமதம்?? ஏதாவது புதிய செய்தி கொண்டு வந்தீரா??
டக்: ஆம் மன்னா.. புதிய செய்தி தான்.. உங்களுக்கு வயிற்றில் அடிக்கும் செய்தி..
மன்னர்: ஹா ஹா அப்படி என்ன செய்தி எனக்கு வயிற்றில் அடிக்க.. எங்கே எடுத்து விடும்... (என்ன கல்லைத்தூக்கிப்போடப்போதோ புலனாய்) மனதிற்குள் பயத்துடன் வீரமொழி பேசுகிறார்.
டக்: மன்னா உங்கள் ஆட்சிக்கு ஆபத்து.. உங்கள் அரச சபையை கலைக்க ஆட்சியை கைப்பற்ற.. சிலர் திட்டம் போட்டிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது..
மந்திரி:: மன்னா.. இதென்ன சிறுபிள்ளைத்தனம்.. இராஜதந்திர விடயங்களை இப்படி சபையில பேசுவது.. டக்.. இதை தனிமையில் பேசிக்கொள்ளலாம்.. தற்பொழுது அமைதி காருங்கள்.. இன்று இத்தோடு அவை கலைகிறது.. என்கிறார்..
மன்னரை பயம் சூழ்ந்தது.. டக்கை அமுக்கிய மந்திரி மேல் சந்தேகம் எழ ஒருவாறு பார்க்கிறார். அவையை சுற்றி நோட்டம் விடுகிறார்.. தளபதி தல மெதுவாக நழுவிச்செல்கிறார்... மன்னரின் சந்தேகங்கள் அதிகரிக்க பயம் மனசை பிசைந்தெடுத்தது.. .. உடனடியாக அவை கலைக்கப்படுகிறது..
<i>
அவை முடிந்த கையோடு அவை உறுப்பினர்கள் சின்னாச்சியை பின்தொடர்கிறார்கள். அங்கு தனியாக ஒரு கச்சேரி நடைபெறும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில்...</i>
மன்னரையும் ஆட்சியையும் கவிழ்க்க நினைத்தவர்கள் யார் பொறுத்திருந்து அறியலாம்.... !
தொடரும்...!
<b>இன்று அரச சபை கூடும் நாள்... மன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். ஒரு சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மன்னர் நாட்டு நிலைமை பற்றி விசாரிக்கிறார்.. காட்சி தொடர்கிறது... </b>
மன்னர்: மந்தி.. மந்தி.. சே மந்திரி நாட்டில் நிலைமைகள் எப்படி வான் பாய்கிறதா? வருசம் மும்மாரி பொழிகிறதா.?? மக்கள் வரி செலுத்துகிறார்களா..?? குறைகள் அறியப்படுகின்றனவா.? நிறைவேற்றப்படுகின்றனவா..?? (அடுக்கிக்கொண்டே போகிறார்)
மந்திரி: மன்னா சகலதும் நன்றே நடக்கிறது மக்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்... (வந்திட்டார்யா.. நாட்டில என்ன நடக்குது என்று தெரியாமல் என்ன நித்திரையே கொண்டவர்.. மழை பெய்கிறது கூட மந்திரி சொல்லித்தெரியவேண்டிக்கிடக்கு.. நல்ல மன்னர் நல்ல நாடு) மனதிற்குள் புறுபுறுக்கிறார் மந்திரி.
மன்னர்:மந்திரி ஏதாவது கூறினீர்களா??
மந்திரி: இல்லை மன்னா இல்லை உங்களை புகழ்ந்து கவி படித்தேன்.. அடுத்தவை செவிமடுத்தால் வெட்கக்கேடு அது தான் மனதிற்குள் படித்தேன்.....
<b>மன்னர் மந்திரியை முறைத்தபடி அவையுடன் சங்கமிக்கிறார்.</b>
<b>அவையில் குறை நிறை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது.. குடிமகன் வருகிறார்.. கையில் ஒரு டோச் லைட் உடனும் அதற்கு மேல் ஈரத்துணியை போற்றிய வாறு வருகிறார்.. லைட் எரிந்து கொண்டிருக்கிறது..</b>
சின்னப்பு: மன்னா வாழி நம்குலம் வாழி தமிழ் வாழி... வாழி வாழி..
மன்னர்: வாழியோடு வந்த அப்பு.. என்ன நடந்தது ஏன் தாமதம்..
சின்னப்பு: விடிவெள்ளிக்கு முதல் எழுந்து தோட்டம் சென்றிருந்தேன்.. வர தாமதம் ஆகிவிட்டது மன்னா..
சின்னாச்சி: முறைத்துப்பாத்தபடி.. நினைச்சனான் இப்படி ஏதாவது திருகுதாளம் நடக்கும் என்று.. பின்ன விட்ட விடியக்காலமை.. ஒரு தேத்தண்ணி கூடத்தராமல்.. தேடினால் ஆளைக்காணேல்ல.. என்ர தோட்டத்திற்க என்ன நடந்ததோ.. ஆள் வைச்சு தேட்டம் செய்யிறன்.. இந்த ஆள் மினைக்கட்டுப்போய் என்னத்தை புடுங்கி வைச்சிதோ.. ஆண்டவா... திட்டியபடி இருக்கிறார்...
மன்னர்: நல்லது சின்னப்பு.. நீங்கள் தோட்டம் செய்கிறீர்களா.. பாராட்ட வேண்டிய விடயம்.. அதற்காக பொறுப்பில் இருக்கும் தாங்கள் இப்படி தாமதமாய் வரலாமோ..??
சின்னப்பு: இல்லை மன்னா காலையில் இருந்து கஸ்டப்படுகிறேன்.. இந்த விளக்கை அணைக்க முடியவில்லை.. விடிகாலை விடிவெள்ளிக்குமுன் எழுந்து.. என் அன்பு நண்பன் ஆசையாய்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாக தந்த இந்த டோச்லைட்டை கொண்டு சென்றேன்..... ஆனால்..
மன்னர்:என்ன நடந்தது சின்னப்பு... அங்கு என்ன நடந்தது.. தயங்காது சொல்லுங்கள்..
சின்னப்பு: இந்த லைட்டை எப்படி போடுவது என்று சொன்ன முகத்தான்.. எப்படி அணைப்பது என்பதை சொல்லித்தரவில்லை.. போடத்தெரிந்த நான்.. தோட்டம் சென்று.. விடிந்த பின்.. அணைப்பதற்காய்.. ஊதி ஊதி களைச்சுப்போனேன்.. அதன் பின்னர்.. தண்ணி எடுத்து ஊற்றி அணைத்தேன்.. அது அணையவில்லை.. துரவிற்குள் இறங்கி நீண்டநேரமாய் தண்ணீரில மூழ்கி வைத்திருந்தேன் அப்போதும் அணையவில்லை.. அது தான் ஈரதுணியால் போத்திக்கொண்டு வந்திருக்கிறேன்.. (விம்பி வெம்பி நிற்கிறார்)
மன்னர் மந்திரியை பார்க்கிறார்.. மந்திரி சென்று அந்த விளக்கை வாங்கி பட்டனை தட்டி அணைக்கிறார்..
சின்னப்பு: ஓய் கவி.. நீர் கெட்டிக்காரன் தான்.. எப்படி மேன் அணைச்சீர். பொன்ஸ் போட்ட போட்டில.. ஏனோ தானோ என்று லைட்டை தந்து பேக்காட்டீட்டு முகம்ஸ் ஓடீட்டுது சரிவரக்கேக்க முடியல்ல.. (என்று கூறி அசடு வழிகிறார்)
<b>எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்... சின்னாச்சி மட்டும்.. தன்னை நோக்காத சின்னப்புவை நோக்கி பல்லைக்கடித்துக்கொண்டிருந்தார்.. தன் தோட்டம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற ஏக்கத்தில்... ஆனால் குடிமகனோ.. சின்னாச்சி பக்கம் திரும்புவதை தவிர்த்துக்கொண்டு தனது இருக்கையில் அமர்கிறார்.................. </b>
<b>(திடீரென சுற்றுவட்டாரத்தில் உள்ள நாய்கள் குரைக்கின்றன.. என்னாச்சு ஏதாச்சு என்று எல்லோரும் பதட்டப்பட... புலனாய் எஜமானருடன் வருகிறது.. பலத்த சத்தம்.. (என்ன என்று பாக்கிறியளா.. ஒரு நாய் குரைச்சால் தெருவில உள்ள அனைத்து நாய்களும் குரைக்கிறது வழக்கம் தானே) மண்டபம் நிறைந்த நாய்களை காவலாளிகள் கட்டுப்படுத்த.. புலனாய் மட்டும் ஆய்வாளருடன் வந்து அமர்கிறது.</b>
மன்னர்: ஆய்வாளரே என்ன ஏன் தாமதம்?? ஏதாவது புதிய செய்தி கொண்டு வந்தீரா??
டக்: ஆம் மன்னா.. புதிய செய்தி தான்.. உங்களுக்கு வயிற்றில் அடிக்கும் செய்தி..
மன்னர்: ஹா ஹா அப்படி என்ன செய்தி எனக்கு வயிற்றில் அடிக்க.. எங்கே எடுத்து விடும்... (என்ன கல்லைத்தூக்கிப்போடப்போதோ புலனாய்) மனதிற்குள் பயத்துடன் வீரமொழி பேசுகிறார்.
டக்: மன்னா உங்கள் ஆட்சிக்கு ஆபத்து.. உங்கள் அரச சபையை கலைக்க ஆட்சியை கைப்பற்ற.. சிலர் திட்டம் போட்டிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது..
மந்திரி:: மன்னா.. இதென்ன சிறுபிள்ளைத்தனம்.. இராஜதந்திர விடயங்களை இப்படி சபையில பேசுவது.. டக்.. இதை தனிமையில் பேசிக்கொள்ளலாம்.. தற்பொழுது அமைதி காருங்கள்.. இன்று இத்தோடு அவை கலைகிறது.. என்கிறார்..
மன்னரை பயம் சூழ்ந்தது.. டக்கை அமுக்கிய மந்திரி மேல் சந்தேகம் எழ ஒருவாறு பார்க்கிறார். அவையை சுற்றி நோட்டம் விடுகிறார்.. தளபதி தல மெதுவாக நழுவிச்செல்கிறார்... மன்னரின் சந்தேகங்கள் அதிகரிக்க பயம் மனசை பிசைந்தெடுத்தது.. .. உடனடியாக அவை கலைக்கப்படுகிறது..
<i>
அவை முடிந்த கையோடு அவை உறுப்பினர்கள் சின்னாச்சியை பின்தொடர்கிறார்கள். அங்கு தனியாக ஒரு கச்சேரி நடைபெறும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில்...</i>
மன்னரையும் ஆட்சியையும் கவிழ்க்க நினைத்தவர்கள் யார் பொறுத்திருந்து அறியலாம்.... !
தொடரும்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


