Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள்
#1
விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள்

[29 - April - 2006]

விடுதலைப் புலிகள் அமைப்பு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள தமது அரசியல் நிர்வாக அடிப்படையும் யுத்ததள வசதிகளும் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ வகையில் சிறி லங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் மேற்படி கிளிநொச்சியிலுள்ள அரசியல் நிர்வாக, யுத்தத் தள வசதிகள் எல்லாமே அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் இறுதியான வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு விடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தனியான இராச்சியத்தை அமைக்கும் பயணம் பின் தள்ளப்பட்டுவிடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு நன்கறியும்.
மேலும், யுத்தத்தைத் தொடரும் பட்சத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் உட்பூசல்கள் கிளம்பக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. புலிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் இயக்கத்தை விட்டுத்தப்பியோடும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஆயினும், இவ்வாறான நிலைமைகளை தவிர்த்துக் கொள்ள புலிகள் இயக்கத்துக்கு வழி கிடையாது. - லங்காதீப:27.4.2006 -
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள் - by aathipan - 04-29-2006, 01:15 PM
[No subject] - by Netfriend - 04-29-2006, 04:25 PM
[No subject] - by Thala - 04-29-2006, 07:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)