04-29-2006, 03:37 AM
வணக்கம் கண்ணன் அவர்களே!!
ஈழப்போரட்டத்தில் புலத்தமிழரது ஆக்கம் என்பது குறித்தான் சிவத்தம்பி அவர்களின் கரத்துக்கு முழுமையாக உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் சொன்னதில் தப்பிருப்பதாக புலப்படவில்லை.
இன்று அவுஸ்ரேலியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே புலிகள் மீது தடை விடுக்கப்பட்டு எத்தனை வருடம்? இவ்வளவு காலப்பகுதியில் எவராவது அத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றீர்களா? அல்லது அதற்கு எதிராக எத்தனை பேர் உங்கள் ஆட்சேபனை சொல்லியிருக்கின்றீர்கள்? வெறுமனே தமிழீழ போராட்ட நிதியைக் கொடுத்தால் போதுமானது என்று நினைக்கின்றீர்கள். அதைத் தான் பேராசிரியர் தப்பாகச் சுட்டிக் காட்டுகின்றார்.
அதை நீங்கள் சட்டத்தை காரணம் காட்டி ஒதுக்கிக் கொள்ளவீர்கள். அது தான் உங்களுக்குள்ள இப்போதைய வழி என்பது எமக்குத் தெரியும். அப்படியாயின் இப்போது மோசமாக சிங்கள அரசு வடக்குகிழக்கு பகுதிகளில் தமிழ்மக்களை கொன்று வருகின்றது. இந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை எத்தனை பேர் வெளிநாட்டு தூதரங்களுக்கு சிங்களவரின் அநீதிகளாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அல்லது அதற்கு எதிரான ஆர்பட்டங்கள் எத்தனை செய்திருக்கின்றீர்கள்? ஒன்றுமே இல்லை. இது அவுஸ்ரேலியா மட்டுமல்ல, எல்லா நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
ஆக எம் மக்கள் செய்வது என்னவென்றால், சிங்களவன் வெளிப்படையாக எதுவும் சொன்னால் அதற்கு பதிலாக நமக்குள்ளேயே அடிபட்டுக் கொள்வது தான். உருப்படியானதும் அது மட்டும் தான். சிங்கள அரசாங்கம் பிற்புலத்தில் எத்தனையோ கைங்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புலிகள் செய்ததாக வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதை எவ்வகையில் நாம் எதிர் கொண்டுள்ளோம்?
நண்பரே, பேராசிரியர் சொன்னதற்கு இவ்வளவு துடிப்புள்ள பதில் வருவது மகிழ்ச்சியே. ஆனால் அந்தத் துடிப்பை ஏன் போராட்டத்துக்கு எழுச்சியாக பயன்படுத்தக் கூடாது. இங்கே புலம்பெயர் தமிழ்மக்களைச் சிறப்புற்ற வகையில் சொன்னவிதம் மகிழ்வைத் தருகின்றது. இத்தனை பெரிய நிலையிலுள்ளவர்கள் கனடாவின் தடை நீக்க எவ்வகையில் பயன்படப் போகின்றார்கள்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று இத்தனை காலம் எவ்வாறு இங்கு தடை செய்யப்படாது இருந்தது என உங்களைக் கேட்டுப்பாருங்கள். அதாவது இந்தியாஇ ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பின்னரும்இ கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் பலத்த பிணைப்பு உள்ள போதிலும்இ சிங்களம் மில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து \"சாச்சி அன்ட் சாச்சி\" போன்ற உலகப் புகழ்வாய்ந்த வல்லுனர்கள் வாயிலான டுழடிடிலiபெ இனைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து கனடாவில் செய்து வருகின்ற போதிலும்இ லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோர் இங்கு வந்து பொய்யுரைத்துச் சென்ற போதிலும்இ ஆனந்த சங்கரி அடிக்கடி இங்கு வந்து செல்கின்ற போதிலும்இ இந்தியாவின் இந்து பத்திரிகை ஆசிரியர் றாம் மற்றும் இலங்கையின் றாதிகா குமாரசாமி மற்றும் நீலன் திருச் செல்வம் போன்றோர் தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினை உயர்மட்டங்களில் செய்து வந்திருந்த போதிலும் எவ்வாறு கனடாவில் இத்தனை ஆண்டுகள் தடை வராது இருந்தது என்ற கேள்வியில் உங்களது சிந்தனையைக் குவியுங்கள்...பல விடயங்கள் உங்களிற்குப் புரியத் தொடங்கும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த வார்த்தைகள் தப்பித்துக் கொள்ளும் விதமாகத் தான் உங்களை அடையாளப்படுத்துகின்றது. எப்போதுமே வெளிவிவகாரக் கொள்கைகள் உடனே மாற்றம் பெறுவதில்லை என்பதை நீங்கள் அறியாது அல்ல. லக்ஸமன் கதிர்காமர், கனடா அரசுடன் கதைத்தவுடன் சடுதியான மாற்றத்தை கனடா அரசு எடுக்கப் போவதில்லை என நீங்கள் தெரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு எதிராளிகளும் ஒவ்வொரு தடவையும் கொடுக்கும் அழுத்தங்களும், தவறான தகவல்களும் தான் இந்த தடைகளுக்கு தூண்டு கோலக இருக்கும். கனடா இவ்வளவு காலமும் தடையைத் தள்ளிப் போட்டமைக்கு அங்கிருக்கும் தமிழ்மக்கள் காரணமாக இருக்கலாம்.
உலகப் பகழ்பெற்ற வல்லுனர்களை விடுங்கள். பதிலுக்கு நீங்கள் எவ்வகை முயற்சியைச் செய்துள்ளீர்கள்? எங்கள் தரப்பு புூச்சியமாகத் தானே இருக்கின்றது.நான் அறிந்தவரை இன்று வரைக்கும் கனடாவில்.... ஏன் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமெரிக்க நாடுகளில் விடப்பட்ட தடைகளுக்கு பதிலடியாக எம் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை முழுமையாகக் காட்டவில்லை. முக்கியமாக போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் தங்களை அவ்வாறு காட்டுவதில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர்.
தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.
கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.
உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன். nationalpost உள்ள சிங்களப்பத்திரிகையாளருக்கும் கனடாவின் துணைப் பிரதமருக்கும் உள்ள நெருக்கம் எப்படியானது என்று. அந்தச் சிங்கள பத்திரிகை எழுத்தாளர் தனது நட்புரீதியான உறவை புலிகள் மீதான தடைக்கு பயன்படுத்தி இருக்கக் கூடும் என்பதையும் மறுக்கக் கூடாது.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
விவாதத்திற்காக ஒரு கேள்வி: நீங்கள் படித்தவர். கொழும்பைத் தளமாகக் கொண்டவர் ஓரளவிற்கு சிங்கள மொழிப் பரீட்சயம் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன். அவ்வாறாயின் ஏன் உங்களால் சிங்கள பேரின வாதத்தினை கருத்தாடல் செய்து தமிழரைத் தாக்காது செய்ய முடியவில்லை? கொழும்பிலே உங்கள் பணி எவ்வாறு உள்ளது. அறிய ஆவலாய் உள்ளோம். 83 கலவரத்தில் கொழும்பில தமிழர்கள் கொழுத்தப்பட்டது தமிழர் கருத்தாடல் செய்யத் தவறியதால் தான் என்றா கூறுகின்றீர்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இக் கேள்வி கேலியாக இருப்பினும், உங்களை நினைத்து வலிக்கின்றது. போராட்டத்தின் வரலாறுகளைக் கூடத் தெரியாமல் தான் இருக்கின்றீர்களோ என்று உங்கள் குறித்து அச்சம் வருகின்றது. தந்தை செல்வா காலத்திலிருந்து சிங்களத் தலைமைகளுடன் நடந்த கருத்தாடல்கள் என்ன? அறிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் எங்கு போயின? ஒன்றுக்குமே சிங்களத் தலைமைகள் மதிப்பு கொடுக்கவில்லையே. அதன் பிற்பாடு வெளிப்பட்ட ஆயுதரீதியிலான போராட்டமே தேசியத் தலைவர் தலைமையில் நடக்கும் போராட்டம் என்பதை தாங்கள் அறியாதது என்னவோ?
பேச்சுரீதியான செயற்பாடுகள் சரிவரவில்லை என்ற பின்பு தான் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தோம். அப்படியிருக்க மீண்டும் கருத்தாடல் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வியை நீர் கேட்பதன் மாயம் என்னவென்றால் போரசிரியர் சுட்டிக்காட்டிய விடயங்களில் இருந்து தப்புக்களை மறைக்கும் பொதுவான செயற்பாடாகும்.
கடைசியில் பேராசிரியரின் மனதைப் புண்படுத்தும் எண்ணம் எமக்கில்லை என்று தாங்கள் கூறினாலும், சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.
ஏதோ பேராசிரியர் புலம்பெயர்ந்தவர்களை பத்தாம் பசலிகளாகவும், அவர்களை உயர்த்தி கூறுவது பேராசிரியருக்கு பிடிக்கவில்லை என்ற விதத்திலும் கூறியிருக்கின்றீர்கள். அதில் உள்ள உள் அர்த்தம் என்ன வென்றால் ஏதோ அவர் வெளிநாட்டுக்கு வரமுடியாமை காரணமாக பொறாமையில் புலம்பெயர்வாளர்களைப் பழிப்பதாகக் காட்டுவதாகத் தான் தெரிகின்றது.
உங்களுக்கு தெரியும். அவ்வாறான நிலை அவருக்கில்லை என்பதையும், அவர் நினைத்தால் "சட்டரீதியாகக்" கூட வந்து செல்லும் தகுதி கொண்டவர் என்பதும். யுத்த காலத்தில் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இங்கே தொழில்பெற்ற பேராசிரியர்களை விட, அவர் தாயகத்தில் இருந்தே வாழ்வை நடத்தினார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலும், அவர் கடிதத்துக்கு துரோகக் கும்பல்களின் தளங்கள் கடுமையான மிரட்டல்தொனியில் பதில் கடிதங்கள் வருகின்றன என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். கொழும்பில் இருந்தபடியே அவ்வாறன அறிக்கைகள் வெளியிட்டு ஏற்படும் சங்கடங்கள் அதிகமானவை. இப்போது படித்தவர்களையே சிங்கள இனம் வாதம் குறி வைக்கும்போது இவ்வாறன செயற்பாடுகள் அவருக்கு அவசியமானதல்ல.
எனவே புலத்தில் இருந்து வெளியிடப்பட்ட செயற்பாடுகள் போதுமாதாக இல்லதால் ஏற்பட்ட ஆதங்கங்களின் வெளிப்பாடுகள் தான் இவை என நான் கருதுகின்றேன். ஏன் என்றால் அவ்வாறான நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். பேராசிரியருக்கு பதில் கடிதம் வந்த அளவு வேகம் கூட, 103 தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தபேர் அது குறித்து என்னும் வரவில்லை என்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால் செத்தவர்கள் உங்களின் தன்மானத்தையோ, அல்லது தனிப்பட்ட வாழ்வையோ தாக்கவில்லை என்பதே உண்மை.
கண்ணன், இது உங்களுக்கு என்ற வித்திலேயே பதில் எழுதியிருக்கின்றேன். அது உங்களிடம் இருந்து வந்த மடல் என்பதால் தான். ஆனால் இவை புலம்பெயர்ந்த அனைத்து தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.
எதையுமே முடியாது என்ற வார்த்தைகளால் மூட வேண்டாம். அப்படியான நிலை என்றால் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்ததித்த சவால்களால் என்றோ பணிந்திருக்கும்.
ஈழப்போரட்டத்தில் புலத்தமிழரது ஆக்கம் என்பது குறித்தான் சிவத்தம்பி அவர்களின் கரத்துக்கு முழுமையாக உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் சொன்னதில் தப்பிருப்பதாக புலப்படவில்லை.
இன்று அவுஸ்ரேலியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே புலிகள் மீது தடை விடுக்கப்பட்டு எத்தனை வருடம்? இவ்வளவு காலப்பகுதியில் எவராவது அத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றீர்களா? அல்லது அதற்கு எதிராக எத்தனை பேர் உங்கள் ஆட்சேபனை சொல்லியிருக்கின்றீர்கள்? வெறுமனே தமிழீழ போராட்ட நிதியைக் கொடுத்தால் போதுமானது என்று நினைக்கின்றீர்கள். அதைத் தான் பேராசிரியர் தப்பாகச் சுட்டிக் காட்டுகின்றார்.
அதை நீங்கள் சட்டத்தை காரணம் காட்டி ஒதுக்கிக் கொள்ளவீர்கள். அது தான் உங்களுக்குள்ள இப்போதைய வழி என்பது எமக்குத் தெரியும். அப்படியாயின் இப்போது மோசமாக சிங்கள அரசு வடக்குகிழக்கு பகுதிகளில் தமிழ்மக்களை கொன்று வருகின்றது. இந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை எத்தனை பேர் வெளிநாட்டு தூதரங்களுக்கு சிங்களவரின் அநீதிகளாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அல்லது அதற்கு எதிரான ஆர்பட்டங்கள் எத்தனை செய்திருக்கின்றீர்கள்? ஒன்றுமே இல்லை. இது அவுஸ்ரேலியா மட்டுமல்ல, எல்லா நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
ஆக எம் மக்கள் செய்வது என்னவென்றால், சிங்களவன் வெளிப்படையாக எதுவும் சொன்னால் அதற்கு பதிலாக நமக்குள்ளேயே அடிபட்டுக் கொள்வது தான். உருப்படியானதும் அது மட்டும் தான். சிங்கள அரசாங்கம் பிற்புலத்தில் எத்தனையோ கைங்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புலிகள் செய்ததாக வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதை எவ்வகையில் நாம் எதிர் கொண்டுள்ளோம்?
நண்பரே, பேராசிரியர் சொன்னதற்கு இவ்வளவு துடிப்புள்ள பதில் வருவது மகிழ்ச்சியே. ஆனால் அந்தத் துடிப்பை ஏன் போராட்டத்துக்கு எழுச்சியாக பயன்படுத்தக் கூடாது. இங்கே புலம்பெயர் தமிழ்மக்களைச் சிறப்புற்ற வகையில் சொன்னவிதம் மகிழ்வைத் தருகின்றது. இத்தனை பெரிய நிலையிலுள்ளவர்கள் கனடாவின் தடை நீக்க எவ்வகையில் பயன்படப் போகின்றார்கள்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று இத்தனை காலம் எவ்வாறு இங்கு தடை செய்யப்படாது இருந்தது என உங்களைக் கேட்டுப்பாருங்கள். அதாவது இந்தியாஇ ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பின்னரும்இ கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் பலத்த பிணைப்பு உள்ள போதிலும்இ சிங்களம் மில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து \"சாச்சி அன்ட் சாச்சி\" போன்ற உலகப் புகழ்வாய்ந்த வல்லுனர்கள் வாயிலான டுழடிடிலiபெ இனைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து கனடாவில் செய்து வருகின்ற போதிலும்இ லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோர் இங்கு வந்து பொய்யுரைத்துச் சென்ற போதிலும்இ ஆனந்த சங்கரி அடிக்கடி இங்கு வந்து செல்கின்ற போதிலும்இ இந்தியாவின் இந்து பத்திரிகை ஆசிரியர் றாம் மற்றும் இலங்கையின் றாதிகா குமாரசாமி மற்றும் நீலன் திருச் செல்வம் போன்றோர் தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினை உயர்மட்டங்களில் செய்து வந்திருந்த போதிலும் எவ்வாறு கனடாவில் இத்தனை ஆண்டுகள் தடை வராது இருந்தது என்ற கேள்வியில் உங்களது சிந்தனையைக் குவியுங்கள்...பல விடயங்கள் உங்களிற்குப் புரியத் தொடங்கும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த வார்த்தைகள் தப்பித்துக் கொள்ளும் விதமாகத் தான் உங்களை அடையாளப்படுத்துகின்றது. எப்போதுமே வெளிவிவகாரக் கொள்கைகள் உடனே மாற்றம் பெறுவதில்லை என்பதை நீங்கள் அறியாது அல்ல. லக்ஸமன் கதிர்காமர், கனடா அரசுடன் கதைத்தவுடன் சடுதியான மாற்றத்தை கனடா அரசு எடுக்கப் போவதில்லை என நீங்கள் தெரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு எதிராளிகளும் ஒவ்வொரு தடவையும் கொடுக்கும் அழுத்தங்களும், தவறான தகவல்களும் தான் இந்த தடைகளுக்கு தூண்டு கோலக இருக்கும். கனடா இவ்வளவு காலமும் தடையைத் தள்ளிப் போட்டமைக்கு அங்கிருக்கும் தமிழ்மக்கள் காரணமாக இருக்கலாம்.
உலகப் பகழ்பெற்ற வல்லுனர்களை விடுங்கள். பதிலுக்கு நீங்கள் எவ்வகை முயற்சியைச் செய்துள்ளீர்கள்? எங்கள் தரப்பு புூச்சியமாகத் தானே இருக்கின்றது.நான் அறிந்தவரை இன்று வரைக்கும் கனடாவில்.... ஏன் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமெரிக்க நாடுகளில் விடப்பட்ட தடைகளுக்கு பதிலடியாக எம் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை முழுமையாகக் காட்டவில்லை. முக்கியமாக போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் தங்களை அவ்வாறு காட்டுவதில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர்.
தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.
கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.
உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன். nationalpost உள்ள சிங்களப்பத்திரிகையாளருக்கும் கனடாவின் துணைப் பிரதமருக்கும் உள்ள நெருக்கம் எப்படியானது என்று. அந்தச் சிங்கள பத்திரிகை எழுத்தாளர் தனது நட்புரீதியான உறவை புலிகள் மீதான தடைக்கு பயன்படுத்தி இருக்கக் கூடும் என்பதையும் மறுக்கக் கூடாது.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
விவாதத்திற்காக ஒரு கேள்வி: நீங்கள் படித்தவர். கொழும்பைத் தளமாகக் கொண்டவர் ஓரளவிற்கு சிங்கள மொழிப் பரீட்சயம் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன். அவ்வாறாயின் ஏன் உங்களால் சிங்கள பேரின வாதத்தினை கருத்தாடல் செய்து தமிழரைத் தாக்காது செய்ய முடியவில்லை? கொழும்பிலே உங்கள் பணி எவ்வாறு உள்ளது. அறிய ஆவலாய் உள்ளோம். 83 கலவரத்தில் கொழும்பில தமிழர்கள் கொழுத்தப்பட்டது தமிழர் கருத்தாடல் செய்யத் தவறியதால் தான் என்றா கூறுகின்றீர்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இக் கேள்வி கேலியாக இருப்பினும், உங்களை நினைத்து வலிக்கின்றது. போராட்டத்தின் வரலாறுகளைக் கூடத் தெரியாமல் தான் இருக்கின்றீர்களோ என்று உங்கள் குறித்து அச்சம் வருகின்றது. தந்தை செல்வா காலத்திலிருந்து சிங்களத் தலைமைகளுடன் நடந்த கருத்தாடல்கள் என்ன? அறிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் எங்கு போயின? ஒன்றுக்குமே சிங்களத் தலைமைகள் மதிப்பு கொடுக்கவில்லையே. அதன் பிற்பாடு வெளிப்பட்ட ஆயுதரீதியிலான போராட்டமே தேசியத் தலைவர் தலைமையில் நடக்கும் போராட்டம் என்பதை தாங்கள் அறியாதது என்னவோ?
பேச்சுரீதியான செயற்பாடுகள் சரிவரவில்லை என்ற பின்பு தான் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தோம். அப்படியிருக்க மீண்டும் கருத்தாடல் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வியை நீர் கேட்பதன் மாயம் என்னவென்றால் போரசிரியர் சுட்டிக்காட்டிய விடயங்களில் இருந்து தப்புக்களை மறைக்கும் பொதுவான செயற்பாடாகும்.
கடைசியில் பேராசிரியரின் மனதைப் புண்படுத்தும் எண்ணம் எமக்கில்லை என்று தாங்கள் கூறினாலும், சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.
ஏதோ பேராசிரியர் புலம்பெயர்ந்தவர்களை பத்தாம் பசலிகளாகவும், அவர்களை உயர்த்தி கூறுவது பேராசிரியருக்கு பிடிக்கவில்லை என்ற விதத்திலும் கூறியிருக்கின்றீர்கள். அதில் உள்ள உள் அர்த்தம் என்ன வென்றால் ஏதோ அவர் வெளிநாட்டுக்கு வரமுடியாமை காரணமாக பொறாமையில் புலம்பெயர்வாளர்களைப் பழிப்பதாகக் காட்டுவதாகத் தான் தெரிகின்றது.
உங்களுக்கு தெரியும். அவ்வாறான நிலை அவருக்கில்லை என்பதையும், அவர் நினைத்தால் "சட்டரீதியாகக்" கூட வந்து செல்லும் தகுதி கொண்டவர் என்பதும். யுத்த காலத்தில் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இங்கே தொழில்பெற்ற பேராசிரியர்களை விட, அவர் தாயகத்தில் இருந்தே வாழ்வை நடத்தினார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலும், அவர் கடிதத்துக்கு துரோகக் கும்பல்களின் தளங்கள் கடுமையான மிரட்டல்தொனியில் பதில் கடிதங்கள் வருகின்றன என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். கொழும்பில் இருந்தபடியே அவ்வாறன அறிக்கைகள் வெளியிட்டு ஏற்படும் சங்கடங்கள் அதிகமானவை. இப்போது படித்தவர்களையே சிங்கள இனம் வாதம் குறி வைக்கும்போது இவ்வாறன செயற்பாடுகள் அவருக்கு அவசியமானதல்ல.
எனவே புலத்தில் இருந்து வெளியிடப்பட்ட செயற்பாடுகள் போதுமாதாக இல்லதால் ஏற்பட்ட ஆதங்கங்களின் வெளிப்பாடுகள் தான் இவை என நான் கருதுகின்றேன். ஏன் என்றால் அவ்வாறான நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். பேராசிரியருக்கு பதில் கடிதம் வந்த அளவு வேகம் கூட, 103 தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தபேர் அது குறித்து என்னும் வரவில்லை என்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால் செத்தவர்கள் உங்களின் தன்மானத்தையோ, அல்லது தனிப்பட்ட வாழ்வையோ தாக்கவில்லை என்பதே உண்மை.
கண்ணன், இது உங்களுக்கு என்ற வித்திலேயே பதில் எழுதியிருக்கின்றேன். அது உங்களிடம் இருந்து வந்த மடல் என்பதால் தான். ஆனால் இவை புலம்பெயர்ந்த அனைத்து தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.
எதையுமே முடியாது என்ற வார்த்தைகளால் மூட வேண்டாம். அப்படியான நிலை என்றால் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்ததித்த சவால்களால் என்றோ பணிந்திருக்கும்.
[size=14] ' '

