04-28-2006, 03:03 AM
[size=18]சிறிலங்காவின் துப்பாக்கிச் சூட்டில்தான் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்- புலிகள் காரணம் அல்ல: கண்காணிப்புக் குழு மூதூர் கிழக்கில் அரசாங்க ஆக்கிரமிப்பில் உள்ள வட்டம் கிராமத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலிலேயே நான்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த புதன்கிழமை நடத்திய தாக்குதலினால் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் ஒன்பது பேர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்ததை உல்ப் ஹென்றிக்சன் நிராகரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறி அப்பாவித் தமிழர்கள் மீது முப்படைகளைக் கொண்டு தாக்கிய கொடூரத்தை உல்ப் ஹென்றிக்சன் நேற்று நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் இதைத் தெரிவித்தார்.
"உயிரிழப்புக்களும் உடைமை இழப்புகளும் சிறிலங்கா இராணுவத்தினரது தாக்குதலினால்தான் நிகழ்ந்ததேயன்றி புதன்கிழமையன்று அரசாங்கம் கூறியது போல் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் அல்ல. சம்பவ இடங்களைப் பார்வையிட்ட உல்ப் ஹென்றிக்சன் இதை உறுதிப்படுத்தியதாக" கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஓல்ப்ஸ்டொட்டிரும் தெரிவித்துள்ளார்.
-புதினம்
சிறிலங்கா கடற்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த புதன்கிழமை நடத்திய தாக்குதலினால் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் ஒன்பது பேர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்ததை உல்ப் ஹென்றிக்சன் நிராகரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறி அப்பாவித் தமிழர்கள் மீது முப்படைகளைக் கொண்டு தாக்கிய கொடூரத்தை உல்ப் ஹென்றிக்சன் நேற்று நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் இதைத் தெரிவித்தார்.
"உயிரிழப்புக்களும் உடைமை இழப்புகளும் சிறிலங்கா இராணுவத்தினரது தாக்குதலினால்தான் நிகழ்ந்ததேயன்றி புதன்கிழமையன்று அரசாங்கம் கூறியது போல் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் அல்ல. சம்பவ இடங்களைப் பார்வையிட்ட உல்ப் ஹென்றிக்சன் இதை உறுதிப்படுத்தியதாக" கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஓல்ப்ஸ்டொட்டிரும் தெரிவித்துள்ளார்.
-புதினம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

