04-28-2006, 02:40 AM
விஜய காந்துக்கு 5 சதவீத ஆதரவில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்ததில் தி.மு.க, அ.தி.மு.க அணிகள் குழப்பம் அடைந்துள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க தேர்தலில் ஆசனங்கள் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாலும் அ.தி.மு.க,தி.மு.கவின் வாக்குகளினைக் குறைக்கும். பாண்டிருட்டி ராமச்சந்திரன் போட்டியிடும் தொகுதியிலும், விருத்தச்சலம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த தொகுதியிலும் தே.மு.தி.க வெல்வதற்கு சாதகமாக உள்ளது. ஜெயலலிதா வெற்றி பெறக்கூடிய தொகுதியான ஆண்டிப்பட்டி,பாரூர் தொகுதிகளிலே போட்டியிட்டு வந்தவர். கலைஜர் வெற்றி பெறக்கூடிய துரைமுகம் மற்றும் வடசென்னைத்தொகுதியிலே போட்டியிட்டு வருகிறார். ஆனால் மதுரையில் போட்டியிடுவார் என எதிர்பாக்கப்பட்ட விஜயகாந்த் வன்னியர் அதிகமுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவான தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்துக்கு அவரது ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று மற்றைய கட்சியினை விட அதிகளவில் பிரச்சாரம் செய்கிறாரர்கள். மற்றைய கட்சியினர் விஜயகாந்துக்கு எதிராக 3 விஜயகாந்த் பெயருள்ள சுயேட்சை வேட்பாளர்களினை மக்களுக்கு குழப்பம் விளைவிக்க நிறுத்தியுள்ளார்கள். விஜயகாந்துக்கு எதிராக பாட்டாளிமக்களுக்கு ஆதரவாக சீமான், அறிவுமதி, தங்கர்பச்சான் போன்ற தமிழ் பாதுகாப்பினர் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழன் தங்கர் பச்சானுக்கு மன்னிப்புச் செய்யச் சொன்ன விஜயகாந்த் முஸ்லிம் வடனாட்டு குஸ்புவுக்கு எதிராக ஒன்றும் செய்யாது இருந்தவர் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் கலந்து கொண்டது ஆச்சரியம். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க கூட்டணியில் உள்ள பாட்டாளிமக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது உண்மையில் ஆச்சரியம் தான். உண்மையில் எதிர் எதிர் கூட்டணியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தை அணிகளும், விடுதலைச் சிறுத்தை போட்டியிடும் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர் எதிர் கூட்டணியில் இருந்தாலும் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒரு தொகுதி மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாகப் போட்டியிடுகின்றன.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

