Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு
#37
[size=18]திருகோணமலைப் பகுதியில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃப்
ஹென்றிக்ஸன் இன்று திருகோணமலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று சேதங்களைப் பார்வையிட்டார்.

மூதூர் கிழக்குப் பிரதேசத்திற்குச் சென்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழவினர் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் புலிகளின் பிரதேச தளபதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

மூதூரில் இந்தக் குழுவினர் அங்கு குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட தக்வா நகர் பகுதிகளைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் குழுவின் தலைவர் உடனடியாகவே கொழும்பு திரும்பியுள்ளார்.



இன்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது வான் தாக்குதல்களோ, ராணுவத் தாக்குதல்களோ நடைபெற்றதாக தகவல் எதுவும் இல்லை.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரின் பயணம் குறித்து கருத்து வெளியிட்ட கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஹெலன் ஒலஃப்தோதிர், தற்போது சம்பூரில் குறிப்பாக நகர்ப்பகுதியில் நிலைமை வழமை நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. பல பள்ளி மாணவ மாணவியர் வழமை போல பள்ளிக்குச் சென்றனர் என்றார்.

மேலும் இந்தத் தாக்குதலினால் இடம் பெயர்ந்தோர் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து பலர் வெளியேறியுள்ளனர் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அந்தப் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறது. நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து விட்டனர் என விடுதலைப் புலிகளும், வேறு சில அமைப்புக்களும் கூறுவது கள நிலவரத்தை விட அதிகமாக மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது போலத் தெரிகிறது என்றார்.

இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், நேற்று புதன்கிழமை அரசுத் தரப்பு கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில், மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியாக தெரிவித்தது. ஆனால் அது உண்மையல்ல, நிச்சயமாக அது இலங்கைப் படையின் வான் தாக்குதல் தவறாகப் போனது என்பதை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரால் உறுதி செய்ய முடிந்தது என்றும் கூறினார் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதிகாரி
-பி.பி.ஸி
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 04-25-2006, 02:20 PM
[No subject] - by Mathuran - 04-25-2006, 02:39 PM
[No subject] - by yarlmohan - 04-25-2006, 02:41 PM
[No subject] - by Mathuran - 04-25-2006, 03:10 PM
[No subject] - by Sriramanan - 04-25-2006, 04:05 PM
[No subject] - by Mathuran - 04-25-2006, 04:12 PM
[No subject] - by Mathuran - 04-25-2006, 04:12 PM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 04:24 PM
[No subject] - by thaiman.ch - 04-25-2006, 04:32 PM
[No subject] - by iruvizhi - 04-25-2006, 04:42 PM
[No subject] - by தூயவன் - 04-26-2006, 03:31 AM
[No subject] - by Mathuran - 04-26-2006, 08:50 AM
[No subject] - by narathar - 04-26-2006, 09:05 AM
[No subject] - by Mathuran - 04-26-2006, 09:20 AM
[No subject] - by Mathuran - 04-26-2006, 09:33 AM
[No subject] - by Mathuran - 04-26-2006, 09:52 AM
[No subject] - by nirmalan - 04-26-2006, 09:56 AM
[No subject] - by Mathuran - 04-26-2006, 10:08 AM
[No subject] - by kurukaalapoovan - 04-26-2006, 01:04 PM
[No subject] - by Bond007 - 04-26-2006, 01:19 PM
[No subject] - by narathar - 04-26-2006, 01:23 PM
[No subject] - by தூயவன் - 04-26-2006, 01:31 PM
[No subject] - by narathar - 04-26-2006, 01:52 PM
[No subject] - by தூயவன் - 04-26-2006, 01:59 PM
[No subject] - by narathar - 04-26-2006, 02:08 PM
[No subject] - by narathar - 04-26-2006, 03:57 PM
[No subject] - by kurukaalapoovan - 04-26-2006, 05:48 PM
[No subject] - by Mathuran - 04-26-2006, 09:28 PM
[No subject] - by Aravinthan - 04-27-2006, 01:35 AM
[No subject] - by kurukaalapoovan - 04-27-2006, 11:27 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:08 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:10 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:17 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 01:58 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 02:03 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 03:03 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 03:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)