04-28-2006, 12:10 AM
[size=18]தொடரும் தமிழர் படுகொலை: சர்வதேச மன்னிப்புச் சபை கவலை
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த இருவாரங்களாக வன்முறைகள் தொடரும் நிலையில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை முழுமையாக மதிக்க வேண்டும்.
கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் ஏப்ரல் 25 ஆம் நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டு இராணுவ தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் என்று கூறப்படுகிறது.
இத்தற்கொலைத் தாக்குதல், அதற்குப் பதில் நடவடிக்கையாக சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் விமானக் குண்டுவீச்சு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் மேற்கொள்வதானது மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தத்துக்குத் திரும்புவதையே வெளிப்படுத்துகிறது.
இதன் விளைவாக இலங்கையில் பொதுமக்களின் மனித உரிமை மீறல்களுக்கு பேராபத்து ஏற்படும்.
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மூதூர் கிழக்கில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை சந்தைப் பகுதியில் ஏப்ரல் 12 ஆம் நாள் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர்களால் 20 தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பெரும் எண்ணிக்கையிலான வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் நிர்மூலமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். சிறிலங்கா அரச படையினர் பொதுமக்களை உரிய நேரத்தில் பாதுகாக்கத் தவறியமை தொடர்பில் கவலை கொள்கிறோம்.
கடந்த இருவார கால யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களில் மொத்தம் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்களுக்குத் துன்பமேற்படுவதைக் குறைக்கவும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து நடக்கவும் அனைத்து தரப்பினரையும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கிறது. இருதரப்பு படையினரும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதையோ பாகுபாடான தாக்குதல் மேற்கொள்வதையோ நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கிறது.
-புதினம்
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த இருவாரங்களாக வன்முறைகள் தொடரும் நிலையில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை முழுமையாக மதிக்க வேண்டும்.
கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் ஏப்ரல் 25 ஆம் நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டு இராணுவ தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் என்று கூறப்படுகிறது.
இத்தற்கொலைத் தாக்குதல், அதற்குப் பதில் நடவடிக்கையாக சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் விமானக் குண்டுவீச்சு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் மேற்கொள்வதானது மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தத்துக்குத் திரும்புவதையே வெளிப்படுத்துகிறது.
இதன் விளைவாக இலங்கையில் பொதுமக்களின் மனித உரிமை மீறல்களுக்கு பேராபத்து ஏற்படும்.
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மூதூர் கிழக்கில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை சந்தைப் பகுதியில் ஏப்ரல் 12 ஆம் நாள் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர்களால் 20 தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பெரும் எண்ணிக்கையிலான வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் நிர்மூலமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். சிறிலங்கா அரச படையினர் பொதுமக்களை உரிய நேரத்தில் பாதுகாக்கத் தவறியமை தொடர்பில் கவலை கொள்கிறோம்.
கடந்த இருவார கால யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களில் மொத்தம் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்களுக்குத் துன்பமேற்படுவதைக் குறைக்கவும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து நடக்கவும் அனைத்து தரப்பினரையும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கிறது. இருதரப்பு படையினரும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதையோ பாகுபாடான தாக்குதல் மேற்கொள்வதையோ நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கிறது.
-புதினம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

