04-28-2006, 12:08 AM
<span style='color:red'>சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடுகள்: ஆசிய மனித உரிமை அமைப்பு கண்டனம்
திருகோணமலை படுகொலைச் சம்பவம் மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடுகளை ஆசிய மனித உரிமை அமைப்பு வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.
தாய்லாந்தின் பாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் ஃபோரம் ஏசியா என்ற மனித உரிமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி போரைத் தவிர்த்து உடனே பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்.
கொழும்புத் தாக்குதல் மற்றும் அதையடுத்து கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சு உள்ளிட்ட இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து எமது அமைப்பு கவலை கொள்கிறது.
அனைத்து இலங்கை மக்களினது பாதுகாப்புக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பானது. திருகோணமலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளின் போது சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடானது கடும் கண்டனத்துக்குரியது.
இனப் படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது அதை அரச படைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதானது முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதது.
கொழும்புத் தாக்குதலையடுத்து பதில் நடவடிக்கையாக கிழக்குப் பகுதியில் விமானக் குண்டு வீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருப்பது அரச படையினரின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல்கள், சிங்களவர்கள் படுகொலைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணமாக கூறப்படுகிற தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பதில் நடவடிக்கைகள் என்பது வன்முறையை அதிகரிக்கவே செய்யும். பிரச்சனைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தாது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும்.
சர்வதேச சமூகத்தினரால் சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனில் மனித உரிமைகளை மதிக்க வேண்டும். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை உறுப்பினராக தனது வேட்பாளரை சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதனது அரச படைகளானது இன வேறுபாடின்றி அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். பாரபட்சத்தோடு பதில் நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-புதினம்
[size=18]</span>
திருகோணமலை படுகொலைச் சம்பவம் மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடுகளை ஆசிய மனித உரிமை அமைப்பு வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.
தாய்லாந்தின் பாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் ஃபோரம் ஏசியா என்ற மனித உரிமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி போரைத் தவிர்த்து உடனே பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்.
கொழும்புத் தாக்குதல் மற்றும் அதையடுத்து கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சு உள்ளிட்ட இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து எமது அமைப்பு கவலை கொள்கிறது.
அனைத்து இலங்கை மக்களினது பாதுகாப்புக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பானது. திருகோணமலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளின் போது சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடானது கடும் கண்டனத்துக்குரியது.
இனப் படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது அதை அரச படைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதானது முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதது.
கொழும்புத் தாக்குதலையடுத்து பதில் நடவடிக்கையாக கிழக்குப் பகுதியில் விமானக் குண்டு வீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருப்பது அரச படையினரின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல்கள், சிங்களவர்கள் படுகொலைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணமாக கூறப்படுகிற தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பதில் நடவடிக்கைகள் என்பது வன்முறையை அதிகரிக்கவே செய்யும். பிரச்சனைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தாது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும்.
சர்வதேச சமூகத்தினரால் சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனில் மனித உரிமைகளை மதிக்க வேண்டும். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை உறுப்பினராக தனது வேட்பாளரை சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதனது அரச படைகளானது இன வேறுபாடின்றி அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். பாரபட்சத்தோடு பதில் நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-புதினம்
[size=18]</span>
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

