04-27-2006, 01:35 AM
[size=18]புலிகள் எந்நேரமும் பாய்வர்!
நேற்று எமது செய்திகளின் பர்வையில் கூறப்பட்டது போன்று சிறிலங்கா அரசு தன்னுடைய இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. நேற்று காலையிலும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குண்டு வீச்சினையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்திய சிறிலங்கா அரசு நேற்று பிற்பகல் கண்காணிப்புக் குழுவிடம் தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை முடிவுற்றதாக தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் தாக்கினால் மீண்டும் இராணுவ நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளது. இரண்டு நாட்களாக நடந்த இராணுவத் தாக்குதல்களில் 20இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் தமிழர்களை அச்சுறுத்துவதும் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதும் ஆகும். ஆனால் அதே வேளை விடுதலைப்புலிகள் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவது தோல்வியில் முடிந்துவிடலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது குண்டுமாரி பொழிந்துள்ளது. இதன் மூலம் விடுதலைப்புலிகளுடன் நேரடி மோதலைத் தவிர்த்தும், சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தியும் உள்ளது. ஆனால் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கான பதிலடியை சிறிலங்கா அரசு வரும் நாட்களில் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று
இதே வேளை நாளை தற்பொழுது இலங்கைத்தீவில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து விவாதிக்க நோர்வேயில் இணைத் தலைமை நாடுகளாகிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகியன கூட உள்ளன. இந்தக் கூட்டத்தில் தாக்குதல்களை நிறுத்தும்படி இருதரப்பையும் கோரியும், கொழும்பில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளையும் கண்டித்து அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கா அரசு நடத்திவரும் தமிழர் மீதான தாக்குதலை எந்த ஒரு நாடும் இதுவரை கண்டிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது சிறிலங்கா அரசு திருகோணமலையில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு மேற்குலகின் மறைமுகமான ஆசீர்வாதம் இருக்கின்றதா என்றும் சந்தேகிக்க வைக்கிறது.
எதுவாயிருப்பினும் சிறிலங்கா அரசு முன்னறிவித்தல் இன்றி வெளிப்படையாக தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கும் அதற்கான உரிமையை வழங்கி உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே அறிவித்தல் எதையும் கொடுக்கத் தேவையில்லை. ஆகவே இனிமேல் சிறிலங்கா இராணுவம் நிம்மதியாக தூங்காது எந்த நேரமும் புலிகளின் பாய்ச்சலை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான்.
- வெப்பிளம்
நேற்று எமது செய்திகளின் பர்வையில் கூறப்பட்டது போன்று சிறிலங்கா அரசு தன்னுடைய இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. நேற்று காலையிலும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குண்டு வீச்சினையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்திய சிறிலங்கா அரசு நேற்று பிற்பகல் கண்காணிப்புக் குழுவிடம் தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை முடிவுற்றதாக தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் தாக்கினால் மீண்டும் இராணுவ நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளது. இரண்டு நாட்களாக நடந்த இராணுவத் தாக்குதல்களில் 20இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் தமிழர்களை அச்சுறுத்துவதும் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதும் ஆகும். ஆனால் அதே வேளை விடுதலைப்புலிகள் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவது தோல்வியில் முடிந்துவிடலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது குண்டுமாரி பொழிந்துள்ளது. இதன் மூலம் விடுதலைப்புலிகளுடன் நேரடி மோதலைத் தவிர்த்தும், சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தியும் உள்ளது. ஆனால் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கான பதிலடியை சிறிலங்கா அரசு வரும் நாட்களில் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று
இதே வேளை நாளை தற்பொழுது இலங்கைத்தீவில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து விவாதிக்க நோர்வேயில் இணைத் தலைமை நாடுகளாகிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகியன கூட உள்ளன. இந்தக் கூட்டத்தில் தாக்குதல்களை நிறுத்தும்படி இருதரப்பையும் கோரியும், கொழும்பில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளையும் கண்டித்து அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கா அரசு நடத்திவரும் தமிழர் மீதான தாக்குதலை எந்த ஒரு நாடும் இதுவரை கண்டிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது சிறிலங்கா அரசு திருகோணமலையில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு மேற்குலகின் மறைமுகமான ஆசீர்வாதம் இருக்கின்றதா என்றும் சந்தேகிக்க வைக்கிறது.
எதுவாயிருப்பினும் சிறிலங்கா அரசு முன்னறிவித்தல் இன்றி வெளிப்படையாக தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கும் அதற்கான உரிமையை வழங்கி உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே அறிவித்தல் எதையும் கொடுக்கத் தேவையில்லை. ஆகவே இனிமேல் சிறிலங்கா இராணுவம் நிம்மதியாக தூங்காது எந்த நேரமும் புலிகளின் பாய்ச்சலை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான்.
- வெப்பிளம்
,
,
,

