04-26-2006, 09:28 PM
<b>எமது தலைமைப்பீடம் உத்தரவிட்டால் எதிரிக்குப் பேரழிவுதான்: சி.எழிலன் எச்சரிக்கை</b>
[புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 20:22 ஈழம்] [ச.விமலராஜா]
"எமது படையினர் தயார் நிலையில் உள்ளனர்.- எமது தலைமைப்பீடம் உத்தரவிட்டால் எதிரிக்கு பேரழிவுதான் ஏற்படும்" என்று விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார்.
மூதூர் கிழக்கு நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் எழிலன் இதைத் தெரிவித்தார்.
"சிறிலங்கா படையினரின் வான் தாக்குதல், ஆர்ட்டிலறித் தாக்குதல், பீரங்கிப் படகுத் தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரை பதில் தாக்குதல் நடத்தவில்லை. அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்க வேண்டாம் என்பதில் விடுதலைப் புலிகள் முனைப்புடன் உள்ளனர். இருப்பினும் எமது தலைமைப்பீடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்றார் எழிலன்.
இதனிடையே சிறிலங்கா படையினரால் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய மூன்று தமிழர்களை மேலதிக சிகிச்சைக்காக அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்ல முயன்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை படையினர் தடுத்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் மூதூர் கிழக்கிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எழிலன் கூறினார்.
சிறிலங்காவின் முப்படையினர் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் படுகாயமடைந்துள்லதாகவும் எழிலன் மேலும் கூறினார்.
மூதூர் கிழக்கு கிராமங்கள் மீது இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கும் அதன் பின்னர் 11.50 மணிக்கும் விமானப் படை தாக்குதலும் ஆர்ட்டிலறித் தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் எழிலன் தெரிவித்தார்.
கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மூடப்படிருப்பதால் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள்ளோ அல்லது அப்பகுதியிலிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
<b>நன்றி: புதினம்</b>
[புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 20:22 ஈழம்] [ச.விமலராஜா]
"எமது படையினர் தயார் நிலையில் உள்ளனர்.- எமது தலைமைப்பீடம் உத்தரவிட்டால் எதிரிக்கு பேரழிவுதான் ஏற்படும்" என்று விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார்.
மூதூர் கிழக்கு நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் எழிலன் இதைத் தெரிவித்தார்.
"சிறிலங்கா படையினரின் வான் தாக்குதல், ஆர்ட்டிலறித் தாக்குதல், பீரங்கிப் படகுத் தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரை பதில் தாக்குதல் நடத்தவில்லை. அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்க வேண்டாம் என்பதில் விடுதலைப் புலிகள் முனைப்புடன் உள்ளனர். இருப்பினும் எமது தலைமைப்பீடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்றார் எழிலன்.
இதனிடையே சிறிலங்கா படையினரால் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய மூன்று தமிழர்களை மேலதிக சிகிச்சைக்காக அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்ல முயன்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை படையினர் தடுத்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் மூதூர் கிழக்கிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எழிலன் கூறினார்.
சிறிலங்காவின் முப்படையினர் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் படுகாயமடைந்துள்லதாகவும் எழிலன் மேலும் கூறினார்.
மூதூர் கிழக்கு கிராமங்கள் மீது இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கும் அதன் பின்னர் 11.50 மணிக்கும் விமானப் படை தாக்குதலும் ஆர்ட்டிலறித் தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் எழிலன் தெரிவித்தார்.
கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மூடப்படிருப்பதால் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள்ளோ அல்லது அப்பகுதியிலிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
<b>நன்றி: புதினம்</b>

