04-26-2006, 08:07 PM
ஓய்வு நிலைப் பேராசிரியர் க.சிவதம்பி அவர்களிற்கு!
கடந்த வாரம் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் மீது தொடுத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், உங்களது விமர்சனத்தில் உள்ள யதார்த்தங்களை ஆரோக்கியமாக நாம் உள்வாங்குகின்ற அதே வேளை, உங்களது சில வார்த்தைப் பிரயோகங்கள் பற்றியும் அவை கூறும் தவறான செய்தி பற்றியும் உங்களிற்கு உணர்த்தும் நோக்கில் இம்மடல் வரையப்படுகின்றது.
அண்மைக்காலமாக புலம் பெயர்நத தமிழர் பற்றிய இகழ்ச்சிகள் உங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
உங்களது பீஷ்மர் அவதாரம் வாயிலாக தினக்குரலிலும் இதர ஊடகங்களில் இதர அவதாரங்களிலும் நீங்கள் புலம்பெயர்ந்த உங்களின் உறவுகளைக் காய்ந்து வருகின்றீர்கள். சரி உறவுகள் நாம் நமக்குள் மனந்திறந்து கருத்தாடல்கள் மற்றும் விமர்சனங்களை மேற்கொள்வதில் தவறில்லை.
அத்தோடு உரிமை உள்ளவர் தான் உறைக்கும் படி உண்மை கூற முடியும். அந்த வகையில் உங்களது விமர்சனங்களை நாம் மதிப்போடு ஏற்றுக் கொண்டு எமது செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனையில் ஈடுபடுகின்றோம், தேவை ஏற்படுமிடத்து எமது செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். எனினும் கருத்துப் பரிமாற்றமானது எப்போதும் ஒரு திசையில் இருப்பது ஆரோக்கியமற்றது என்ற அடிப்படையில் அக்குறையினை நிவர்த்தி செய்ய இதோ எங்களிடம் இருந்து உங்களிற்கு.
....
......
...........
முடிக்கு முன்னர், எனது கருத்துக்களை சீனி பூசாது நேரடியாகக் கூறியுள்ளேன். தங்களைத் தாக்குவதோ புண்படுத்துவதோ எனது நோக்கம் அன்று. தாயகம் உதயமாகும் இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் போறுப்போடு நடந்து கொள்ளல் அவசியம் என்பதனாலும் எமது கருத்துக்கள் செயற்பாடுகள் என்பன எமது தரவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதனாலும் உங்களின் தரவுகளைச் சரி செய்ய இம்மடலினை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி.
http://www.sooriyan.com/index.php?option=c...id=3067&Itemid=
கடந்த வாரம் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் மீது தொடுத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், உங்களது விமர்சனத்தில் உள்ள யதார்த்தங்களை ஆரோக்கியமாக நாம் உள்வாங்குகின்ற அதே வேளை, உங்களது சில வார்த்தைப் பிரயோகங்கள் பற்றியும் அவை கூறும் தவறான செய்தி பற்றியும் உங்களிற்கு உணர்த்தும் நோக்கில் இம்மடல் வரையப்படுகின்றது.
அண்மைக்காலமாக புலம் பெயர்நத தமிழர் பற்றிய இகழ்ச்சிகள் உங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
உங்களது பீஷ்மர் அவதாரம் வாயிலாக தினக்குரலிலும் இதர ஊடகங்களில் இதர அவதாரங்களிலும் நீங்கள் புலம்பெயர்ந்த உங்களின் உறவுகளைக் காய்ந்து வருகின்றீர்கள். சரி உறவுகள் நாம் நமக்குள் மனந்திறந்து கருத்தாடல்கள் மற்றும் விமர்சனங்களை மேற்கொள்வதில் தவறில்லை.
அத்தோடு உரிமை உள்ளவர் தான் உறைக்கும் படி உண்மை கூற முடியும். அந்த வகையில் உங்களது விமர்சனங்களை நாம் மதிப்போடு ஏற்றுக் கொண்டு எமது செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனையில் ஈடுபடுகின்றோம், தேவை ஏற்படுமிடத்து எமது செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். எனினும் கருத்துப் பரிமாற்றமானது எப்போதும் ஒரு திசையில் இருப்பது ஆரோக்கியமற்றது என்ற அடிப்படையில் அக்குறையினை நிவர்த்தி செய்ய இதோ எங்களிடம் இருந்து உங்களிற்கு.
....
......
...........
முடிக்கு முன்னர், எனது கருத்துக்களை சீனி பூசாது நேரடியாகக் கூறியுள்ளேன். தங்களைத் தாக்குவதோ புண்படுத்துவதோ எனது நோக்கம் அன்று. தாயகம் உதயமாகும் இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் போறுப்போடு நடந்து கொள்ளல் அவசியம் என்பதனாலும் எமது கருத்துக்கள் செயற்பாடுகள் என்பன எமது தரவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதனாலும் உங்களின் தரவுகளைச் சரி செய்ய இம்மடலினை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி.
http://www.sooriyan.com/index.php?option=c...id=3067&Itemid=

