Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதினம் - தமிழ்நெட் செய்திகள்
#3
விடுதலைப் புலிகள் மீது முப்படையினர் தாக்குதல்: உல்ப் ஹென்றிக்சன் தகவல்
[செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2006, 20:10 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா முப்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் முதலில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர்.

கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிற பதில் நடவடிக்கை இது என்று நம்புகிறோம் என்றார் உல்ப் ஹென்றிக்சன்.

திருகோணமலை கடற்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து படைத்தரப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பிற்பகல் நடத்திய தாக்குதல் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். அரசாங்கமும் செயற்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு வருவார்கள் என்று நம்புகிறோம் என்றார் பாலித கோகென்ன.
Reply


Messages In This Thread
[No subject] - by msuresh - 04-25-2006, 05:32 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 05:43 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 05:45 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 05:46 PM
[No subject] - by msuresh - 04-25-2006, 06:00 PM
[No subject] - by Nitharsan - 04-25-2006, 06:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)