04-25-2006, 04:12 PM
திருகோணமலையில் ஸ்ரீ லங்காவின் முப்படையினரும் தமிழ் பிரதேசங்களை நோக்கி பாரிய அளவில் கண்மூடித்தனமாக குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து இந்தச் செய்தி பதி வாகும் வரை ஸ்ரீ லங்காவின் முப்படையினரும் தமிழ் பிரதேசங்களை நோக்கி பாரிய அளவில் கண்மூடித்தனமாக குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேசம் அயல்நாடான இந்தியா இணைத்தலைமை நாடுகள் மற்றும் அனுசரணைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நோர்வே போன்றவற்றின் அவதானிப்பு சர்வதேச சமுகத்தின் பார்வை என்ற எதையும் பொருட்படத்தாது தமது இனவாத விஸ்பரூபத்தினை இன்று ஸ்ரீ லங்கா சிங்கள அரச படைகள் தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன.
இன்று மாலை ஆரம்பமான இந்த தாக்குதல் தற்போதும் இடம்பெற்றுக ;கொண்டிருக்கின்றது.
திருகோணமலை கடற்படைத்தளம் வான்படைத்தளம் மற்றும் மங்கிபிரிச் இராணுவ முகாம் போன்ற தளங்களில் இருந்து இன்று மாலை 6.35 மணியில் இருந்து இந்தச் செய்தி பதியப்படும் 8.10 மணிவரை 96 அதிகமான தனி ரகச் ஆட்டிலறி எறிகணைகள் திருமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் குடிமனைகளை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் மாலை 6.35 மணியில் இருந்து இரவு 8.10 மணிவரைக்குள் 5 தடவைகள் ஸ்ரீ லங்கா கடற்படையனரால் 'மல்ரி பரல் ' தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போதும் இத்தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதே நேரம் இன்று மாலை 5.45 மணியளவில் இருந்து மாலை 6.15 வரை ஸ்ரீலங்கா வான்படையின் 'கிபிர்' ரக விமானங்கள் ஐந்து தடவைகள் குண்டுகளை வீசியுள்ளதுடன் 6.15 மணிக்கு பின்னர் ஆறாவது குண்டையும் வீசியுள்ளது.
அத்துடன் ஸ்ரீ லங்கா இராணுவத்தினரின் முன்னரங்க காவல் நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீது தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்தாக்குதல்கள்; காரணமாக சேனையூர் மத்திய கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடப்பகுதி பெரும் சேதடைந்துள்ளதாக இறுதியாகக்கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் இறால்குளி கடற்கரைச்சேனை சேனையூர் சம்பூர் இலக்கந்தை சூடைக்குடா பாட்டாளிபுரம் உப்பாறு உள்ளிட்ட பிரதேசங்கள் மீதே ஸ்ரீ லங்கா சிங்கள இராணுவத்தின் முப்படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக செய்வதறியாத மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நிலத்தில் பதுங்கி தற்பாதுகாப்புத் தேடிவருகின்றனர். எனினும் அவர்கள் பாதுகாப்பான இடங் களுக்கு கூட ஓட முடியாத நிலையில் உள்ளதாகவும் தாக்குதல்கள் இடைவிடாது நடைபெறுவதுடன் பல்வேறு பிரதேசங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் இடம்பெறுவதாலும் பெரும் இன்னல்களை அனுபவித்தவருகின்றனர்.
இத்தாக்குதல்காரணமாக தமிழ் மக்களின் வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளதாக அறியயமுடிகின்றது
உயிரிழப்புகள் காயங்கள் தொடர்பாக இது வரை தெரியவரவில்லை. எனினும் சிறுமி ஒருவர் இதன்போது படுகாயமடைந்ததாக ஆரம்பத் தகவலகள் தெரிக்கின்றன.
<b>பரபரப்பு</b>
திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து இந்தச் செய்தி பதி வாகும் வரை ஸ்ரீ லங்காவின் முப்படையினரும் தமிழ் பிரதேசங்களை நோக்கி பாரிய அளவில் கண்மூடித்தனமாக குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேசம் அயல்நாடான இந்தியா இணைத்தலைமை நாடுகள் மற்றும் அனுசரணைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நோர்வே போன்றவற்றின் அவதானிப்பு சர்வதேச சமுகத்தின் பார்வை என்ற எதையும் பொருட்படத்தாது தமது இனவாத விஸ்பரூபத்தினை இன்று ஸ்ரீ லங்கா சிங்கள அரச படைகள் தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன.
இன்று மாலை ஆரம்பமான இந்த தாக்குதல் தற்போதும் இடம்பெற்றுக ;கொண்டிருக்கின்றது.
திருகோணமலை கடற்படைத்தளம் வான்படைத்தளம் மற்றும் மங்கிபிரிச் இராணுவ முகாம் போன்ற தளங்களில் இருந்து இன்று மாலை 6.35 மணியில் இருந்து இந்தச் செய்தி பதியப்படும் 8.10 மணிவரை 96 அதிகமான தனி ரகச் ஆட்டிலறி எறிகணைகள் திருமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் குடிமனைகளை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் மாலை 6.35 மணியில் இருந்து இரவு 8.10 மணிவரைக்குள் 5 தடவைகள் ஸ்ரீ லங்கா கடற்படையனரால் 'மல்ரி பரல் ' தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போதும் இத்தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதே நேரம் இன்று மாலை 5.45 மணியளவில் இருந்து மாலை 6.15 வரை ஸ்ரீலங்கா வான்படையின் 'கிபிர்' ரக விமானங்கள் ஐந்து தடவைகள் குண்டுகளை வீசியுள்ளதுடன் 6.15 மணிக்கு பின்னர் ஆறாவது குண்டையும் வீசியுள்ளது.
அத்துடன் ஸ்ரீ லங்கா இராணுவத்தினரின் முன்னரங்க காவல் நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீது தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்தாக்குதல்கள்; காரணமாக சேனையூர் மத்திய கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடப்பகுதி பெரும் சேதடைந்துள்ளதாக இறுதியாகக்கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் இறால்குளி கடற்கரைச்சேனை சேனையூர் சம்பூர் இலக்கந்தை சூடைக்குடா பாட்டாளிபுரம் உப்பாறு உள்ளிட்ட பிரதேசங்கள் மீதே ஸ்ரீ லங்கா சிங்கள இராணுவத்தின் முப்படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக செய்வதறியாத மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நிலத்தில் பதுங்கி தற்பாதுகாப்புத் தேடிவருகின்றனர். எனினும் அவர்கள் பாதுகாப்பான இடங் களுக்கு கூட ஓட முடியாத நிலையில் உள்ளதாகவும் தாக்குதல்கள் இடைவிடாது நடைபெறுவதுடன் பல்வேறு பிரதேசங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் இடம்பெறுவதாலும் பெரும் இன்னல்களை அனுபவித்தவருகின்றனர்.
இத்தாக்குதல்காரணமாக தமிழ் மக்களின் வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளதாக அறியயமுடிகின்றது
உயிரிழப்புகள் காயங்கள் தொடர்பாக இது வரை தெரியவரவில்லை. எனினும் சிறுமி ஒருவர் இதன்போது படுகாயமடைந்ததாக ஆரம்பத் தகவலகள் தெரிக்கின்றன.
<b>பரபரப்பு</b>

