04-25-2006, 02:20 PM
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிமுதல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீலங்காவின் முப்படைகளும் இணைந்து பாரிய குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.
<b>(மேலதிக விபரம் இணைப்பு)</b>
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் கிபிர் விமானங்களினால் பாரிய குண்டு வீச்சுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்களிலிருந்து ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. பின்னர் சிறீலங்கா கடற்படையினரும் தமது கடற்கலங்களிலிருந்து பாரிய எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இரவு 7.00 மணியையும் தாண்டி சிறீலங்கா படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 10ற்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
சிங்கள முப்படைகளின் இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பததில் வந்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இதுவரை சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
<b>சங்கதி</b>
<b>(மேலதிக விபரம் இணைப்பு)</b>
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் கிபிர் விமானங்களினால் பாரிய குண்டு வீச்சுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்களிலிருந்து ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. பின்னர் சிறீலங்கா கடற்படையினரும் தமது கடற்கலங்களிலிருந்து பாரிய எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இரவு 7.00 மணியையும் தாண்டி சிறீலங்கா படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 10ற்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
சிங்கள முப்படைகளின் இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பததில் வந்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இதுவரை சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
<b>சங்கதி</b>

