Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்.கோண்டாவில் + ஆரியகுளத்தில் கைக்குண்டுவீச்சு
#1
யாழ்.கோண்டாவில்ப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுச் சம்பவத்தில் சிறீலங்காப்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த ஆனைப்பந்திச் சந்திப்பகுதியிலும் படையினர் மீது கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஸ்ரீலங்காப் படையாளி ஒருவர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.

படையாளியும், 20 அகவையுடைய ஜெகதீஸ்வரி, 21 அகவையுடைய கந்தையா விமலன், 15அகவையுடைய அருட்செல்வம் சாஜிராஜ் ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர்

நன்றி: புதினம்
Reply


Messages In This Thread
யாழ்.கோண்டாவில் + ஆரியகுளத்தில் கைக்குண்டுவீச்சு - by yarlmohan - 04-25-2006, 01:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)