04-24-2006, 08:23 PM
இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்து எனக்கு வாதாட வாய்ப்பழித்த ரசிகை அக்காவுக்கும் நடுவர் பங்கை செவ்வனே ஆற்றிக்கொண்டிருக்கும் இளைஞன் அண்ணாவுக்கும் உண்மை எதுவென்று தெரிந்தும் பொய்ச்செடிக்கு உரம் போட்டுக்கொண்டிருக்கும் எதிரணி வாதிகளுக்கும் இவர்களின் அறியாமை என்னும் இருளை அகற்றி அறிவு புகட்ட வந்திருக்கும் என் அருமைத் தோழர்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இங்கு வாதாட வந்திருப்பது புலம்பெயர் நாடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இடைவெளிக்கு காரணம் பெற்றோர்களே என்று வாதிடுவதற்காகும்.
ஒரு குழந்தை பிறந்து 5 வயது வரும் வரை அந்தக் குழந்தையின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பெற்றோரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு குழந்தை என்ன மொழி பேச வேண்டும் என்ன வகையான் உணவுகளை உண்ண வேண்டும் அதன் நடை உடை பாவனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோரே தீரிமானிக்கின்றனர். சூழல் என்ற ஒன்று குழந்தையின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவது அதற்கு பிறகுதான். அடித்தளம் ஆணித்தரமாக இருந்தால் கட்டிடம் பலமாக இருக்கும். புயலையும் எதிர்த்து நிற்கும். அதுபோலவே அந்த 5 வயது வாழ்கையில் பெற்றோர் சரியான அடித்தளம் இட்டால் அதன்பின் வரும் சூழலால் குழந்தையை அசைக்க முடியாது. இதனை அறிந்துதான் நம்மினத்தவர்கள் ஒரு பிள்ளையின் குறைகளையும் நிறைகளையும் பெற்றோருக்கே சமர்ப்பிக்கின்றனர். எடுத்துக்காட்டாக " கந்தையாவின் பொடியன் சின்னராசாவின் பொட்டையோடு ஒடிப்போட்டான் " அல்லது " கனகலிங்கத்தின் பொடியன் இப்ப இஞ்சினியராம். அந்தக் காலத்தில கனகலிங்கம் டபுள் அடிச்சு எப்படியோ தன் மகனைப் படிப்பிச்சுப்போட்டுது. " என்று கூறுவார்களே தவிர பிள்ளைகளின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் குறைவு. ஆகவே சூழல்தான் பெற்றோர் பிள்ளைகளுக்கான விரிவுக்கு காரணம் என்ற நிதர்சனின் சுத்துமாத்து இங்கு பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இதுவரை சூழல் எவ்வாறு இடைவெளிக்கு காரணம் இல்லை என்று ஆராய்ந்;தோம். இனி பெற்றோர்கள் எவ்வாறெல்லாம் இந்த இடைவெளிக்கு காரணம் என்று விரிவாகப் பார்ப்போம்.
கனடா போன்ற புலம் பெயர் நாடுகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் அனுப்பும் போது சொல்லிவிடுவது இதுதான்: " அப்பு! நீ இசுகூலில தமிழ் ஆக்களோட சேராதே. எல்லாரும் சுத்துமாத்துக்காரன்கள். வெள்ளைக்காரப் பொடியன்களோட சினேகிதம் வைச்சுக்கொள் அப்பதான் இங்கிலீசு கெதியாப் படிக்கலாம்." இப்படிச்சொன்னா பொடியன் என்ன செய்வான். அவன் அவர்களுடன் பழகும்போது அவர்களின் நடை உடை பாவனை தனிமனிதச்சுதந்திரம் போன்றவற்றை பின்பற்றத் தொடங்குவான். தனது அலுவல்களில் பெற்றோர் தலையிடக்கூடாது என்ற எண்ணம் தோன்றும.; பெற்றோரின் சொல்லைக்கேளாமல் நீள்காற்சட்டையை பி~;டபாகத்திற்கு கீழ் போட்டு நடப்பான். திருநீறு இருக்கவேண்டிய இடத்தில் பன்டானாவின் ஆட்சி நிகழும். கடைசில ஒரு வெள்ளைக்கார பொட்டையோட வந்து நிற்பான். அப்பதான் பெற்றோர்களுக்கு உறைக்கும். ஆனால் அப்பொழுதும் தாங்கள் விட்ட தவறை மறைத்து " கூட்டுச் சரியில்லை. அதுதான் பிள்ளை இப்படி மாறிப்போட்டான்" என்பார்கள். ஆனால் இதற்கு உண்மையான காரணம் யார்? பெற்றோர்களே. பெற்றோர்கள் முதலிலேயே சரியான அறிவுரையை கொடுத்திருந்தால் அந்தப் பிள்ளைக்கு தனிமனித சுதந்திரம் என்ற எண்ணம் தோன்றாமல் குடும்பம் என்ற உணர்வு உதித்திருக்கும்.
அடுத்ததாக இங்கு வாழும் பெற்றோருக்கு மற்றவர்கள் போல் வசதியாக வாழ வேண்டும் என்ற பேராசை. அந்நாட்டிலே பிறந்து அந்நாட்டிலேயே வளரும் குடும்பங்கள் பெரிய வீடுவைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இன்னும் விமானத்தில் ஏறிய பிரமிப்பில் இருந்து மீளாதவர்களுக்கும் 5 அறையுள்ள மனை பென்சு மகிழுந்து போன்றவற்றை வாங்கவேண்டும் என்ற பேரவா. இந்;த ஆசையை நிறைவேற்றும் முகமாக தாயும் தந்தையும் மாறி மாறி இரண்டு வேலை செய்து விட்டு அலுப்பில் படுத்துவிடுவார்கள். இதனால் அவர்களின் பிள்ளை அவர்களிடமிருந்து தூர இருப்பதுபோல் உணருகின்றது. தனது பெற்றோரைவிட தனது நண்பர்களிடம் நெருக்கமாக இருப்பதை உணருகின்றது. இதனால் தன் நண்பர்கள் சொல்வதையே செய்கின்றது. இறுதியில குழுச்சண்டைகளில ஈடுபட்டு தன் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொலைக்கின்றது. இவ்வாறே பிறந்த குழந்தைகளையும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துவிட்டு பெற்றோர் வேலை செய்கின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பில் வாழாத குழந்தை பெற்றோர்களிடமிருந்து விலகி வேறு உறவுகளைத் தேடிக்கொள்கின்றது. இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் யார்? பெற்றோர் என்பது தெளிவு. இவர்களின் நடவடிக்கை எல்லாம் கார் திறப்பை தேடப்போய் காரையே தொலைத்த போல்தான் உள்ளது. இவர்கள் சாதாரண( ஆடம்பரம் இல்லாத) வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இவை எல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இன்னுமொன்று கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு தாயும் சிறுபிள்ளையும் ஒரு தரிப்பிடத்தில் ஏறினார்கள். அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஒட்டுக்கேட்டதில் இருந்து சில பகுதிகளைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். அந்தப் பிள்ளை கூறியது “ அம்மா என்ட இசுகூலுல இரண்டு பேர் தமிழ் கிளாசுக்கு போறவை. நானும் போகட்டே.” அதற்கு அம்மா கூறுகின்றார் “ தமிழ் படிச்சு என்னத்தை இப்ப கிழிக்கப்போறாய். பிரஞசு படிச்சாலாவது ஏதாவது வேலை எடுக்கலாம்.” இது எவ்வாறு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துகின்றது என்று சிலர் கேட்கலாம். கொஞ்சம் பொறுங்கள் கூறுகின்றேன். தமிழ் இப்பொழுது வேண்டாதது ஒன்று என்று கூறி தாய்மொழியை அந்தப் பிள்ளையிடமிருந்து தாய் அந்நியப்படுத்துகின்றாள். இதையே சிறிது காலத்தில் தாயால் ஒரு பயனும் இல்லை என்று கூறி தாயை கொண்டுசென்று முதியோர் இல்லத்தில் அந்தப் பிள்ளை சேர்க்கும். கடைசியில் தங்கள் இரக்கமான நிலைக்கு தாங்களே காரணமாகின்றார்கள். தமிழில் உள்ள கௌசிகர் கதையைக் கூறி வளர்த்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?
அடுத்து ஒருபிள்ளை தான் 94 புள்ளிகள் எடுத்துவிட்டதை சந்தோசத்துடன் வந்து தாயிடம் சொல்கின்றான். அதற்கு தாய் சொல்கின்றாள் "மிகுதி ஆறு புள்ளிகள் எங்கே?" இது அந்தப் பிள்ளைக்கு எவ்வளவு வேதனை தரும் விடயம். பெற்றோரும் பிள்ளைகளின் பாடங்களைப்பற்றி கேட்டு பிள்ளைகளிடன் அக்கறை இருப்பதைக் காட்டிக்கொண்டால்தானே அந்தப் பிள்ளையும் தனது தாய் தந்தையிடம் பாசமாக இருக்கம். இதைவிட்டு இவ்வாறு பொறுப்பில்லாமல் கேட்டால் இடைவெளி கூடாமல் வேறு என்ன நடக்கும். அதைவிட புலம்பெயர் நாடுகளில் குடும்பத்துடன் கூடி உணவருந்துவதோ அல்லது சுற்றுலா செல்வதோ மிகக்குறைவு. இதற்கும் காரணம் பெற்றோரின் இடைவிடாத வேலை. இவையெல்லாம் பிள்ளைகளின் மனநிலையைப் பாதிக்கக் கூடிய விடயங்கள். மனநிலை பாதிப்பால் அந்த பிள்ளை சிறிது சிறிதாக தனது பெற்றோரிடமிருந்து விலகுகின்றது. எனவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் இடைவெளிக்குக் காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்களே என்று கூறி என் வாதத்தை சில கேள்விகளுடன் நிறைவு செய்கின்றேன்.
1 பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்குக் காரணம் சூழல் என்றால் ஏன் அந்தச் சூழலில் உள்ள அத்தனை குடும்பங்களிலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை?
2 பிள்ளைகள்தான் காரணம் என்றால் ஏன் பாடசாலைகளில் பிள்ளைகள் விடும் தவறுகளுக்கு பெற்றோரை வரவழைத்து கதைக்கின்றனர்?
3 இங்கு வாதாட வந்திருக்கும் எதிரணி உறுப்பினர்களே!!!!!1 நீங்கள் புலம் பெயர் நாடுகளுக்கு வந்தவுடன் சூழல் காரணமாக உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவெளி வந்துள்ளதா? அவ்வாறு வராவிடின் அதற்கு காரணம் உங்கள் பெற்றோர்களின் வளர்ப்பு என்பதை ஓத்துக்கொள்கின்றீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அங்கால் நகருங்கள். முடியாவிடின் பட்டிமன்றத்தைவிட்டு ஓடிவிடுங்கள். ஓடாவிடின் உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். நான் வெறும் தென்றல்தான் எனக்குப்பின்னே இருப்பது புயல். புயலில் சிக்கினால் மீளுவது கடினம்.
ஒரு குழந்தை பிறந்து 5 வயது வரும் வரை அந்தக் குழந்தையின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பெற்றோரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு குழந்தை என்ன மொழி பேச வேண்டும் என்ன வகையான் உணவுகளை உண்ண வேண்டும் அதன் நடை உடை பாவனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோரே தீரிமானிக்கின்றனர். சூழல் என்ற ஒன்று குழந்தையின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவது அதற்கு பிறகுதான். அடித்தளம் ஆணித்தரமாக இருந்தால் கட்டிடம் பலமாக இருக்கும். புயலையும் எதிர்த்து நிற்கும். அதுபோலவே அந்த 5 வயது வாழ்கையில் பெற்றோர் சரியான அடித்தளம் இட்டால் அதன்பின் வரும் சூழலால் குழந்தையை அசைக்க முடியாது. இதனை அறிந்துதான் நம்மினத்தவர்கள் ஒரு பிள்ளையின் குறைகளையும் நிறைகளையும் பெற்றோருக்கே சமர்ப்பிக்கின்றனர். எடுத்துக்காட்டாக " கந்தையாவின் பொடியன் சின்னராசாவின் பொட்டையோடு ஒடிப்போட்டான் " அல்லது " கனகலிங்கத்தின் பொடியன் இப்ப இஞ்சினியராம். அந்தக் காலத்தில கனகலிங்கம் டபுள் அடிச்சு எப்படியோ தன் மகனைப் படிப்பிச்சுப்போட்டுது. " என்று கூறுவார்களே தவிர பிள்ளைகளின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் குறைவு. ஆகவே சூழல்தான் பெற்றோர் பிள்ளைகளுக்கான விரிவுக்கு காரணம் என்ற நிதர்சனின் சுத்துமாத்து இங்கு பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இதுவரை சூழல் எவ்வாறு இடைவெளிக்கு காரணம் இல்லை என்று ஆராய்ந்;தோம். இனி பெற்றோர்கள் எவ்வாறெல்லாம் இந்த இடைவெளிக்கு காரணம் என்று விரிவாகப் பார்ப்போம்.
கனடா போன்ற புலம் பெயர் நாடுகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் அனுப்பும் போது சொல்லிவிடுவது இதுதான்: " அப்பு! நீ இசுகூலில தமிழ் ஆக்களோட சேராதே. எல்லாரும் சுத்துமாத்துக்காரன்கள். வெள்ளைக்காரப் பொடியன்களோட சினேகிதம் வைச்சுக்கொள் அப்பதான் இங்கிலீசு கெதியாப் படிக்கலாம்." இப்படிச்சொன்னா பொடியன் என்ன செய்வான். அவன் அவர்களுடன் பழகும்போது அவர்களின் நடை உடை பாவனை தனிமனிதச்சுதந்திரம் போன்றவற்றை பின்பற்றத் தொடங்குவான். தனது அலுவல்களில் பெற்றோர் தலையிடக்கூடாது என்ற எண்ணம் தோன்றும.; பெற்றோரின் சொல்லைக்கேளாமல் நீள்காற்சட்டையை பி~;டபாகத்திற்கு கீழ் போட்டு நடப்பான். திருநீறு இருக்கவேண்டிய இடத்தில் பன்டானாவின் ஆட்சி நிகழும். கடைசில ஒரு வெள்ளைக்கார பொட்டையோட வந்து நிற்பான். அப்பதான் பெற்றோர்களுக்கு உறைக்கும். ஆனால் அப்பொழுதும் தாங்கள் விட்ட தவறை மறைத்து " கூட்டுச் சரியில்லை. அதுதான் பிள்ளை இப்படி மாறிப்போட்டான்" என்பார்கள். ஆனால் இதற்கு உண்மையான காரணம் யார்? பெற்றோர்களே. பெற்றோர்கள் முதலிலேயே சரியான அறிவுரையை கொடுத்திருந்தால் அந்தப் பிள்ளைக்கு தனிமனித சுதந்திரம் என்ற எண்ணம் தோன்றாமல் குடும்பம் என்ற உணர்வு உதித்திருக்கும்.
அடுத்ததாக இங்கு வாழும் பெற்றோருக்கு மற்றவர்கள் போல் வசதியாக வாழ வேண்டும் என்ற பேராசை. அந்நாட்டிலே பிறந்து அந்நாட்டிலேயே வளரும் குடும்பங்கள் பெரிய வீடுவைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இன்னும் விமானத்தில் ஏறிய பிரமிப்பில் இருந்து மீளாதவர்களுக்கும் 5 அறையுள்ள மனை பென்சு மகிழுந்து போன்றவற்றை வாங்கவேண்டும் என்ற பேரவா. இந்;த ஆசையை நிறைவேற்றும் முகமாக தாயும் தந்தையும் மாறி மாறி இரண்டு வேலை செய்து விட்டு அலுப்பில் படுத்துவிடுவார்கள். இதனால் அவர்களின் பிள்ளை அவர்களிடமிருந்து தூர இருப்பதுபோல் உணருகின்றது. தனது பெற்றோரைவிட தனது நண்பர்களிடம் நெருக்கமாக இருப்பதை உணருகின்றது. இதனால் தன் நண்பர்கள் சொல்வதையே செய்கின்றது. இறுதியில குழுச்சண்டைகளில ஈடுபட்டு தன் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொலைக்கின்றது. இவ்வாறே பிறந்த குழந்தைகளையும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துவிட்டு பெற்றோர் வேலை செய்கின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பில் வாழாத குழந்தை பெற்றோர்களிடமிருந்து விலகி வேறு உறவுகளைத் தேடிக்கொள்கின்றது. இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் யார்? பெற்றோர் என்பது தெளிவு. இவர்களின் நடவடிக்கை எல்லாம் கார் திறப்பை தேடப்போய் காரையே தொலைத்த போல்தான் உள்ளது. இவர்கள் சாதாரண( ஆடம்பரம் இல்லாத) வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இவை எல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இன்னுமொன்று கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு தாயும் சிறுபிள்ளையும் ஒரு தரிப்பிடத்தில் ஏறினார்கள். அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஒட்டுக்கேட்டதில் இருந்து சில பகுதிகளைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். அந்தப் பிள்ளை கூறியது “ அம்மா என்ட இசுகூலுல இரண்டு பேர் தமிழ் கிளாசுக்கு போறவை. நானும் போகட்டே.” அதற்கு அம்மா கூறுகின்றார் “ தமிழ் படிச்சு என்னத்தை இப்ப கிழிக்கப்போறாய். பிரஞசு படிச்சாலாவது ஏதாவது வேலை எடுக்கலாம்.” இது எவ்வாறு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துகின்றது என்று சிலர் கேட்கலாம். கொஞ்சம் பொறுங்கள் கூறுகின்றேன். தமிழ் இப்பொழுது வேண்டாதது ஒன்று என்று கூறி தாய்மொழியை அந்தப் பிள்ளையிடமிருந்து தாய் அந்நியப்படுத்துகின்றாள். இதையே சிறிது காலத்தில் தாயால் ஒரு பயனும் இல்லை என்று கூறி தாயை கொண்டுசென்று முதியோர் இல்லத்தில் அந்தப் பிள்ளை சேர்க்கும். கடைசியில் தங்கள் இரக்கமான நிலைக்கு தாங்களே காரணமாகின்றார்கள். தமிழில் உள்ள கௌசிகர் கதையைக் கூறி வளர்த்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?
அடுத்து ஒருபிள்ளை தான் 94 புள்ளிகள் எடுத்துவிட்டதை சந்தோசத்துடன் வந்து தாயிடம் சொல்கின்றான். அதற்கு தாய் சொல்கின்றாள் "மிகுதி ஆறு புள்ளிகள் எங்கே?" இது அந்தப் பிள்ளைக்கு எவ்வளவு வேதனை தரும் விடயம். பெற்றோரும் பிள்ளைகளின் பாடங்களைப்பற்றி கேட்டு பிள்ளைகளிடன் அக்கறை இருப்பதைக் காட்டிக்கொண்டால்தானே அந்தப் பிள்ளையும் தனது தாய் தந்தையிடம் பாசமாக இருக்கம். இதைவிட்டு இவ்வாறு பொறுப்பில்லாமல் கேட்டால் இடைவெளி கூடாமல் வேறு என்ன நடக்கும். அதைவிட புலம்பெயர் நாடுகளில் குடும்பத்துடன் கூடி உணவருந்துவதோ அல்லது சுற்றுலா செல்வதோ மிகக்குறைவு. இதற்கும் காரணம் பெற்றோரின் இடைவிடாத வேலை. இவையெல்லாம் பிள்ளைகளின் மனநிலையைப் பாதிக்கக் கூடிய விடயங்கள். மனநிலை பாதிப்பால் அந்த பிள்ளை சிறிது சிறிதாக தனது பெற்றோரிடமிருந்து விலகுகின்றது. எனவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் இடைவெளிக்குக் காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்களே என்று கூறி என் வாதத்தை சில கேள்விகளுடன் நிறைவு செய்கின்றேன்.
1 பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்குக் காரணம் சூழல் என்றால் ஏன் அந்தச் சூழலில் உள்ள அத்தனை குடும்பங்களிலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை?
2 பிள்ளைகள்தான் காரணம் என்றால் ஏன் பாடசாலைகளில் பிள்ளைகள் விடும் தவறுகளுக்கு பெற்றோரை வரவழைத்து கதைக்கின்றனர்?
3 இங்கு வாதாட வந்திருக்கும் எதிரணி உறுப்பினர்களே!!!!!1 நீங்கள் புலம் பெயர் நாடுகளுக்கு வந்தவுடன் சூழல் காரணமாக உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவெளி வந்துள்ளதா? அவ்வாறு வராவிடின் அதற்கு காரணம் உங்கள் பெற்றோர்களின் வளர்ப்பு என்பதை ஓத்துக்கொள்கின்றீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அங்கால் நகருங்கள். முடியாவிடின் பட்டிமன்றத்தைவிட்டு ஓடிவிடுங்கள். ஓடாவிடின் உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். நான் வெறும் தென்றல்தான் எனக்குப்பின்னே இருப்பது புயல். புயலில் சிக்கினால் மீளுவது கடினம்.
.

