04-24-2006, 12:51 AM
புலத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும், அமைப்புகள் செய்வினம் என்று இல்லாமல், எங்களுக்கும் சில கடமைகள் உண்டு. எங்களால் முடிந்தவரை சிலவற்றினை செய்யலாம். எமது வேலைத்தளங்களில், பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், அயலவர்களில் உள்ள தமிழர் அல்லாத இனத்தவர்களுக்கு எமது போராட்டத்தின் உண்மையினைச் சொல்லலாம். புலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாகச் சென்றோ,மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதமூலமாகவோ எமது போராட்டத்தினத் தெரியப்படுத்தலாம்.எமது போராட்டத்திற்கு எதிரான பொய்ச் செய்திகள் தீய சக்திகளினால் பிரச்சாரங்களினால் தமிழர் அல்லாத உடகங்களில் வருமானால் அந்த ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தலாம். முன்பு பி.பிஸி ரெல்ரெக்ஸில் மடுத்தேவலாயத்தில் விடுதலைப்புலிகள் தாக்கி மக்கள் இறந்தார்கள் என்ற செய்தி வந்தது. பிறகு லண்டன் வாழ் தமிழர்கள் சிலர் தொலைபேசியில் பி.பி.ஸிக்கு தெரியப்படுத்த ரெல்ரெக்ஸில் மடுத்தேவலாயத்தில் விடுதலைப்புலிகள் தாக்கி மக்கள் இறந்த செய்திக்குப்பின் இச்செய்திக்கு பல நேயர்கள் தவறானது என்று தெரிவித்தார்கள் என்ற செய்தியினையும் வெளியிட்டார்கள். தமிழர் அல்லாத ஊடகங்களில் எமக்கு ஆதாரவான செய்திகள் வரும் போது சிங்களவர்களும், எட்டப்பர்களும் அவ்வூடகங்களுக்கு செய்திகள் பிழை என்று தெரியப்படுத்துவது வழக்கம். ஆனால் நாங்கள் இச்செய்திகளுக்கு நன்றி சொல்லுவது குறைவு. எமக்கு ஆதாரவான செய்திகள் வரும்போதும் கட்டாயம் அவ்வூடகங்களுக்கு நன்றியினை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

