Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெல்லியடியில் ஓட்டோ சாரதிகள் இருவர் சுட்டுக் கொலை
#4
யாழில் மேலும் ஒரு ஓட்டோ சாரதி சுட்டுக்கொலை

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டோ சாரதியான குருநாதன் ஜனார்த்தனன் (வயது 23) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதான வீதீயில் இருபாலை சந்தியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தனது வாகனத்திற்குள் உள்ளே ஜனார்த்தனன் அமர்ந்திருந்தபோது ஆயுததாரிகள் அவரை நெருங்கியுள்ளனர். இதையடுத்து ஜனார்த்தனன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரைத் தொடர்ந்து விரட்டிய ஆயுததாரிகள் வைரவர் ஆலயம் அருகே சுட்டுப் படுகொலை செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இருபாலை சந்தியில் அமைந்துள்ள பாரிய சிறிலங்கா இராணுவ முகாம் அருகே 100 மீற்றர் தொலைவில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஜனார்த்தனன் வலிகாமம் பிரதேசம் இருபாலையைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் நேற்று இரு ஓட்டோ சாரதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நெல்லியடி சந்தையில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு சோகக் கீதங்கள் இசைக்கப்பட்டன.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் முன்னாள் புளொட் உறுப்பினரான அமிர்தநாதன் கென்னடி (வயது 35) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

யாழ். நாவாந்துறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனியார் மிதிவண்டி நிறுத்துமிடத்தில் அவர் அமர்ந்திருந்தபோது இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. படுகாயமடைந்த அமிர்தநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் அமிர்தநாதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தகவல் புதினம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 04-23-2006, 08:03 AM
[No subject] - by kurukaalapoovan - 04-23-2006, 08:17 AM
[No subject] - by sri - 04-23-2006, 12:07 PM
[No subject] - by Thala - 04-23-2006, 12:17 PM
[No subject] - by Subiththiran - 04-23-2006, 12:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)