04-23-2006, 07:21 AM
புலத்திலுள்ள மற்றைய நாடுகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தேசியத்திற்க்கான செயற்பாடுகள் அவ்வளவாக தெரியாவிடினும், லண்டனில் நடந்தவைகள்/நடப்பவைகள் மூலம் புலத்திலுள்ள மற்றைய நாடுகளிலும் என்ன நடைபெற்றவைகளையும்/நடப்பவைகளையும் ஊகிக்க முடிகிறது.
லண்டனில் தேசியத்திற்கான செயற்பாடுகளின் சிலவற்றை உதாரணத்திற்கு இங்கு தொடராக தர முயல்கிறேன்:
போராட்ட ஆரம்ப காலத்தில் லண்டனில் "புளொட்.ரெலோ.ஈபி.ஆர்.எல்.எப்" கும்பல்களின் செயற்பாடே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை விட ஓங்கி இருந்தது. அந்நிலைமையை வெற்றிகரமாக சில இளையர்கள் உடைத்தெறிந்தார்கள். அக்கால கட்டத்தில்தான் கிட்டண்ணாவும் லண்டன் வந்து சேர்ந்தார். சிதறிக் கிடந்த தேசியத்திற்கான செயற்பாட்டாளர்களை ஒன்று சேர்த்து தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு புத்துணர்ச்சியூட்டினார். கிட்டண்ணாவின் ஆளுமை லண்டனிலிருந்து ஐரோப்பிய தேசமெங்கும் பரந்தது. என்ன சாபமோ தெரியவில்லை கிட்டண்ணா ஐரோப்பாவில் இருந்து மட்டுமல்ல எம்மைவிட்டே நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார். கிட்டண்ணா லண்டனில் இருந்த காலம் "புலத்தில் தமிழ்த் தேசியத்திற்க்கான பொற்காலம்"!!!
கிட்டண்ணா சென்றதன் பின் லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு சில இடையூறுகள் வந்த போதிலும் "கிட்டண்ணா பாச்சிய இரத்தத்தில்" இருந்த இளையர் படை உறுதியுடன் முகம் கொடுத்தது.
மீண்டும் சிங்களப்படைகள் யாழ்நகரைக் கைப்பற்றியபோது, மீண்டும் சில கூலிகள் ஒரு வானொலியின் துணையுடன் களமிறங்கியது. அக்கூலிக் கும்பல்களின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு உறுதியாகப் பதிலளிப்பதற்காக தமிழ்த்தேசியச் செயற்பாடுகள் லண்டனில் தொடங்கியது. வரலாறு காணாத லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம், தொப்புள் கொடிகளுக்கு உதவ பாரிய நிதி சேகரிப்புக்கள், தேசியத்திற்க்கான பிரச்சாரங்கள், லண்டனில் தேசிய செயற்பாடுகளை ஒருங்கமைக்கவும்/மக்கள் தொடர்பகமாகவும் "ஈழம் இல்லம்" அமைக்கப்பட்டது. இவ்வாறு செயற்பாடுகள் என்று உச்சத்தை அடைந்தது.
ஆனால் .... தொடரும் ....
லண்டனில் தேசியத்திற்கான செயற்பாடுகளின் சிலவற்றை உதாரணத்திற்கு இங்கு தொடராக தர முயல்கிறேன்:
போராட்ட ஆரம்ப காலத்தில் லண்டனில் "புளொட்.ரெலோ.ஈபி.ஆர்.எல்.எப்" கும்பல்களின் செயற்பாடே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை விட ஓங்கி இருந்தது. அந்நிலைமையை வெற்றிகரமாக சில இளையர்கள் உடைத்தெறிந்தார்கள். அக்கால கட்டத்தில்தான் கிட்டண்ணாவும் லண்டன் வந்து சேர்ந்தார். சிதறிக் கிடந்த தேசியத்திற்கான செயற்பாட்டாளர்களை ஒன்று சேர்த்து தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு புத்துணர்ச்சியூட்டினார். கிட்டண்ணாவின் ஆளுமை லண்டனிலிருந்து ஐரோப்பிய தேசமெங்கும் பரந்தது. என்ன சாபமோ தெரியவில்லை கிட்டண்ணா ஐரோப்பாவில் இருந்து மட்டுமல்ல எம்மைவிட்டே நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார். கிட்டண்ணா லண்டனில் இருந்த காலம் "புலத்தில் தமிழ்த் தேசியத்திற்க்கான பொற்காலம்"!!!
கிட்டண்ணா சென்றதன் பின் லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு சில இடையூறுகள் வந்த போதிலும் "கிட்டண்ணா பாச்சிய இரத்தத்தில்" இருந்த இளையர் படை உறுதியுடன் முகம் கொடுத்தது.
மீண்டும் சிங்களப்படைகள் யாழ்நகரைக் கைப்பற்றியபோது, மீண்டும் சில கூலிகள் ஒரு வானொலியின் துணையுடன் களமிறங்கியது. அக்கூலிக் கும்பல்களின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு உறுதியாகப் பதிலளிப்பதற்காக தமிழ்த்தேசியச் செயற்பாடுகள் லண்டனில் தொடங்கியது. வரலாறு காணாத லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம், தொப்புள் கொடிகளுக்கு உதவ பாரிய நிதி சேகரிப்புக்கள், தேசியத்திற்க்கான பிரச்சாரங்கள், லண்டனில் தேசிய செயற்பாடுகளை ஒருங்கமைக்கவும்/மக்கள் தொடர்பகமாகவும் "ஈழம் இல்லம்" அமைக்கப்பட்டது. இவ்வாறு செயற்பாடுகள் என்று உச்சத்தை அடைந்தது.
ஆனால் .... தொடரும் ....
" "

