04-22-2006, 10:00 PM
kurukaalapoovan Wrote:பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் 1 வருடபூர்த்தி ஒட்டி நடந்த சிறப்பு நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவர் பங்கு பற்றிய ஆய்வு 2 பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது. அதன் போதும் lobbying எமது பலவீனமானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
களத்தில் வேறொரு பகுதியில் ஒருவர் குறைப்பட்டிருந்தார் (அல்லது ஒரு வகையில் திருப்த்திப்பட்டுக் கொண்டார்) "ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் அதன் முன்னாள் காலணித்துவ நாடுகளிலும் தான் புலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று.
உண்மைதான் இலங்கை அரசாங்கத்தின் lobbying ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் மும்மரமாக இருக்கிறது. படித்த சிங்கள மக்கள் புலம் பெயர்ந்து பெருமளவில் இருப்பதும் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமொரிக்கா, கனடா, நியூஸ்லாந்து போன்ற இடங்களில். நோர்வேயில் சிங்களவர்களின் lobbying கடந்த 2...3 வருடங்களாக அதிகரிகத்து கொண்டு வருகிறது. நோர்வே சமூகத்தோடு அடிமட்ட உறவுகளை உருவாக்கி பலமாக்கி வருகிறார்கள்.
ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலிகளிற்கு தடைக்கு காரணம் அவர்களிற்கு தமிழ்மொழியிலை இருக்கிற பொறாமையால் இல்லை. அங்கு எமது பரப்புரை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மற்ற நாடுகளில் பொதுவாக uncontested ஆக இருக்கிறம், ஆனால் அது மாறிக் கொண்டு வருகுது.
சிங்களவர்களை விட கனடாவில் தமிழர்கள் அதிகம் படிப்பறிவு கூடிய மிக பெரும் பதிவிகளில் இருந்தாலும் அவர்கள் எங்கள் சமூதாயத்தோடு ஒன்றித்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஒன்றில் தமிழன் வெல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டிய நேரத்தில்.. என் பக்க ஆள் தான் வெல்ல வேண்டும் என்று ஒரே பதிவிக்கு இரு தமிழர்கள் போட்டியிட்ட காலமும் கனடாவில் இருத்தது என்பது வருத்த மான செயலாகும். அனால் இதை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்க வேண்டும்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

