04-22-2006, 11:09 AM
ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத எழுக தமிழ் (பாகம் 2)
நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளிற்கு வருகின்ற பொழுது சில துணிமணிகளோடும் காலில் வெறும் செருப்போடும் இந்த குளிர்நாடுகளிற்குள் வந்திறங்கினோம். ஆனால் இன்று எங்களின் வளர்ச்சியை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஐரோப்பாவில் வாழும் மற்றைய இனங்களை விட நாங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நன்றாகவே முன்னேறிவிட்டோம். சொந்த வீடுகள், நிறுவனங்கள், பல்கலைக்கழக படிப்பு என்று எவ்வளவோ முன்னேற்றம்.
ஆயினும் இந்த 20 வருடங்களுக்குள் எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இங்கே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தினோமா என்றால் இல்லை என்பதே பதில். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எமது போராட்டம் குறித்து பரப்புரையில் ஈடுபட்டு சில ஐரோப்பிய மக்களை எம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் 20 வருடமாக வாழுகின்ற மூன்னூறாயிரம் தமிழர்கள் எவ்வளவு ஐரோப்பிய மக்களுக்கு எங்கள் போராட்டம் பற்றிய செய்தியை சென்றடைய செய்திருக்கின்றார்கள் என்பதே என்னுடைய கேள்வி. ஐம்பது சிங்களவர்கள் வந்து சாதித்துவிட்டு போவதை எங்களால் ஏன் சாதிக்க முடியவில்லை?
நான் முதலில் கூறியதைப் போல் பணக்கார நாடுகள் தங்களின் நலனுக்காகவே தடை போடுவதால் தமிழர்கள் இங்கே எதற்காக பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று கேட்கலாம். ஐரோப்பிய நாடுகள் முடிந்தவரை தங்கள் பக்கமே நிற்கும் என்று தெரிந்தும் சிங்கள அரசு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி எமக்கு எதிராக பரப்புரை செய்கிறது. காரணம் முடிந்தவரை அதிக அழுத்தங்களை தமிழர்களுக்கு வழங்குவதே. வருகின்ற தடைகளே முன்கூட்டியே வரச்செய்வதற்கே. அதே போன்று குறைவான அழுத்தங்கள் வரச்செய்வதற்கும், தடைகளை பிற்போடுவதற்கும், தடைகள் வரும் போது அது நெகிழ்ச்சியாக இருப்பதற்கும் எங்களின் பரப்புரை உதவும்.
வீதியில் சென்று கோசம் போடுவது எந்தவிதத்திலும் நல்ல பரப்புரை ஆகாது. எங்களின் ஊர்வலங்களும் கோசங்களும் பலருக்கு புரிவதேயில்லை. ஆகவே நாங்கள் பேரணிகளை நடத்துமுன் சில வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம். எங்கள் வேலைத்திட்டங்களை உயர்மட்டங்களை சென்றடைவது போல் இருக்கவேண்டும். முதலில் நாங்கள் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும் கட்சிகளின் பொறுப்பாளர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அந்தந்த நகரத்தந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அவ்வாறே பத்திரிகையாளர்களோடு பேசுவோம். இதில் நாங்கள் வாழும் நாடுகளின் மொழியை அறிந்தவர்கள் முழு மூச்சோடு ஈடுபடவேண்டும். இப்படியே நாங்கள் படிப்படியாக மேல்மட்டத்தை சென்றடைய வேண்டும். இதில் பாதி வெற்றியை நாங்கள் அடைந்தால்கூட அது பேரணிகளை விட மிகப் பெரிய பலனை அளிக்கும். தடை வந்தால்கூட அப்பொழுது எமக்கிருக்கும் தொடர்புகள் எமது வேலைகளைச் செய்ய உதவியாகவிருக்கும். அத்தோடு ஆசிரியர்கள்> மாணவர்கள்> பொதுமக்கள்> இடதுசாரிக்குழுக்கள் என்று எங்கள் பரப்புரை விரிவடைய வேண்டும். அவர்கள் மூலமும் நாம் பல உபயோகமான தொடர்புகளை பெறலாம். இவைகளை செய்துகொண்டே நாங்கள் ஊர்வலங்கள்> பேரணிகளை நடத்தவேண்டும். ஐரோப்பிய மக்களையும் எங்கள் பேரணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் ஓரளவாவது பலன் பெற முடியும.
அன்பர்களே! நான் பேரணிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஊர்வலம் போகாதீர்கள் என்று சொல்லவில்லை. செய்வதை சரியாக செய்யுங்கள் என்றே சொல்கின்றேன்.
உதாரணத்திற்கு நாங்கள் எழுக தமிழ் பேரணியில் செய்யத் தவறியவற்றை பார்ப்போம். ஜேர்மனியை எடுத்துக்கொள்வோம். ஜேர்மனியிலிருந்து ஏழாயிரம் மக்கள் ஒரு பேரணியிலிருந்து கலந்துகொள்ளச் செல்கிறார்கள். ஒவ்வொரு நகரங்களிலிருந்து நூறு> இருநூறு என பேருந்துகளில் புறப்படுகிறார்கள். இது ஜேர்மனியப் பத்திரிகளை பொறுத்துவரை ஒரு செய்தி. ஆனால் நாங்கள் யாருமே பத்திரிகைகளுக்கு அதை அறிவிக்கவில்லை. அறிவித்திருந்தால் அவர்கள் காலையில் வந்து எங்களை பேட்டி எடுத்து தங்கள் பத்திரிகைகளில் ஒரு சிறு பத்தியாவது போட்டிருப்பார்கள். ஒரு நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கில் இன்னொரு நாட்டிற்கு பயணம் போவதென்பது நி;ச்சயமாக பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி. ஆகக் குறைந்தது நாங்கள் இங்கிருந்து புறப்பட்ட நகரங்களின் பத்திரிகைகளிலாவது இந்த செய்தியை வரச் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அது மட்டுமா? பெல்ஜியத்தின் புருஸ்ஸில் நகரிலும் பேரணியில் எந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களையும் காணவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையென்பது எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு தோல்வி. ஐரோப்பிய நாட்டு மொழியை அறி;ந்த என் போன்றவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி. நாட்டு விடுதலைக்காக அல்லும் பகலும் உழைக்கும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வி.
ஆகவே இளம் சமுதாயமே! புதிய சிந்தனையோடு வாருங்கள். நிச்சயமாக உங்களிடம் மேலும் சிறந்து யோசனைகள் இருக்கும். இந்த ஐரோப்பிய சமூகத்தை நன்கு அறிந்தவர்கள் நீங்கள். உங்களால் முடியும். நெல்சன் மண்டெலாவை விட பிரபாகரன் உயர்ந்தவர் என்று எமக்கு நாமே சொல்வதில் அர்த்தமில்லை. அந்த ஒப்பற்ற தலைவனை வீதியில் செல்லும் ஐரோப்பியன் வரை அறிமுகப்படுத்துங்கள். ஆனால் நாங்கள் மொழியறியாது இலக்கணப்பிழைகளோடு போட்ட கோசங்களை மொழியறிந்த நீங்களும் அதே இலக்கணப்பிழைகளோடு கோசிப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. தோற்றுப்போன நாங்கள் செய்ததையே நீங்களும் செய்யாதீர்கள். கிளிப்பிள்ளைகளாக இருக்காதீர்கள். வழி காட்டுபவர்களாக இருங்கள். கிளம்புங்கள்.
-சபேசன் (27.10.2005)
நன்றி www.webeelam.com
நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளிற்கு வருகின்ற பொழுது சில துணிமணிகளோடும் காலில் வெறும் செருப்போடும் இந்த குளிர்நாடுகளிற்குள் வந்திறங்கினோம். ஆனால் இன்று எங்களின் வளர்ச்சியை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஐரோப்பாவில் வாழும் மற்றைய இனங்களை விட நாங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நன்றாகவே முன்னேறிவிட்டோம். சொந்த வீடுகள், நிறுவனங்கள், பல்கலைக்கழக படிப்பு என்று எவ்வளவோ முன்னேற்றம்.
ஆயினும் இந்த 20 வருடங்களுக்குள் எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இங்கே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தினோமா என்றால் இல்லை என்பதே பதில். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எமது போராட்டம் குறித்து பரப்புரையில் ஈடுபட்டு சில ஐரோப்பிய மக்களை எம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் 20 வருடமாக வாழுகின்ற மூன்னூறாயிரம் தமிழர்கள் எவ்வளவு ஐரோப்பிய மக்களுக்கு எங்கள் போராட்டம் பற்றிய செய்தியை சென்றடைய செய்திருக்கின்றார்கள் என்பதே என்னுடைய கேள்வி. ஐம்பது சிங்களவர்கள் வந்து சாதித்துவிட்டு போவதை எங்களால் ஏன் சாதிக்க முடியவில்லை?
நான் முதலில் கூறியதைப் போல் பணக்கார நாடுகள் தங்களின் நலனுக்காகவே தடை போடுவதால் தமிழர்கள் இங்கே எதற்காக பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று கேட்கலாம். ஐரோப்பிய நாடுகள் முடிந்தவரை தங்கள் பக்கமே நிற்கும் என்று தெரிந்தும் சிங்கள அரசு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி எமக்கு எதிராக பரப்புரை செய்கிறது. காரணம் முடிந்தவரை அதிக அழுத்தங்களை தமிழர்களுக்கு வழங்குவதே. வருகின்ற தடைகளே முன்கூட்டியே வரச்செய்வதற்கே. அதே போன்று குறைவான அழுத்தங்கள் வரச்செய்வதற்கும், தடைகளை பிற்போடுவதற்கும், தடைகள் வரும் போது அது நெகிழ்ச்சியாக இருப்பதற்கும் எங்களின் பரப்புரை உதவும்.
வீதியில் சென்று கோசம் போடுவது எந்தவிதத்திலும் நல்ல பரப்புரை ஆகாது. எங்களின் ஊர்வலங்களும் கோசங்களும் பலருக்கு புரிவதேயில்லை. ஆகவே நாங்கள் பேரணிகளை நடத்துமுன் சில வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம். எங்கள் வேலைத்திட்டங்களை உயர்மட்டங்களை சென்றடைவது போல் இருக்கவேண்டும். முதலில் நாங்கள் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும் கட்சிகளின் பொறுப்பாளர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அந்தந்த நகரத்தந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அவ்வாறே பத்திரிகையாளர்களோடு பேசுவோம். இதில் நாங்கள் வாழும் நாடுகளின் மொழியை அறிந்தவர்கள் முழு மூச்சோடு ஈடுபடவேண்டும். இப்படியே நாங்கள் படிப்படியாக மேல்மட்டத்தை சென்றடைய வேண்டும். இதில் பாதி வெற்றியை நாங்கள் அடைந்தால்கூட அது பேரணிகளை விட மிகப் பெரிய பலனை அளிக்கும். தடை வந்தால்கூட அப்பொழுது எமக்கிருக்கும் தொடர்புகள் எமது வேலைகளைச் செய்ய உதவியாகவிருக்கும். அத்தோடு ஆசிரியர்கள்> மாணவர்கள்> பொதுமக்கள்> இடதுசாரிக்குழுக்கள் என்று எங்கள் பரப்புரை விரிவடைய வேண்டும். அவர்கள் மூலமும் நாம் பல உபயோகமான தொடர்புகளை பெறலாம். இவைகளை செய்துகொண்டே நாங்கள் ஊர்வலங்கள்> பேரணிகளை நடத்தவேண்டும். ஐரோப்பிய மக்களையும் எங்கள் பேரணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் ஓரளவாவது பலன் பெற முடியும.
அன்பர்களே! நான் பேரணிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஊர்வலம் போகாதீர்கள் என்று சொல்லவில்லை. செய்வதை சரியாக செய்யுங்கள் என்றே சொல்கின்றேன்.
உதாரணத்திற்கு நாங்கள் எழுக தமிழ் பேரணியில் செய்யத் தவறியவற்றை பார்ப்போம். ஜேர்மனியை எடுத்துக்கொள்வோம். ஜேர்மனியிலிருந்து ஏழாயிரம் மக்கள் ஒரு பேரணியிலிருந்து கலந்துகொள்ளச் செல்கிறார்கள். ஒவ்வொரு நகரங்களிலிருந்து நூறு> இருநூறு என பேருந்துகளில் புறப்படுகிறார்கள். இது ஜேர்மனியப் பத்திரிகளை பொறுத்துவரை ஒரு செய்தி. ஆனால் நாங்கள் யாருமே பத்திரிகைகளுக்கு அதை அறிவிக்கவில்லை. அறிவித்திருந்தால் அவர்கள் காலையில் வந்து எங்களை பேட்டி எடுத்து தங்கள் பத்திரிகைகளில் ஒரு சிறு பத்தியாவது போட்டிருப்பார்கள். ஒரு நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கில் இன்னொரு நாட்டிற்கு பயணம் போவதென்பது நி;ச்சயமாக பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி. ஆகக் குறைந்தது நாங்கள் இங்கிருந்து புறப்பட்ட நகரங்களின் பத்திரிகைகளிலாவது இந்த செய்தியை வரச் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அது மட்டுமா? பெல்ஜியத்தின் புருஸ்ஸில் நகரிலும் பேரணியில் எந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களையும் காணவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையென்பது எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு தோல்வி. ஐரோப்பிய நாட்டு மொழியை அறி;ந்த என் போன்றவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி. நாட்டு விடுதலைக்காக அல்லும் பகலும் உழைக்கும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வி.
ஆகவே இளம் சமுதாயமே! புதிய சிந்தனையோடு வாருங்கள். நிச்சயமாக உங்களிடம் மேலும் சிறந்து யோசனைகள் இருக்கும். இந்த ஐரோப்பிய சமூகத்தை நன்கு அறிந்தவர்கள் நீங்கள். உங்களால் முடியும். நெல்சன் மண்டெலாவை விட பிரபாகரன் உயர்ந்தவர் என்று எமக்கு நாமே சொல்வதில் அர்த்தமில்லை. அந்த ஒப்பற்ற தலைவனை வீதியில் செல்லும் ஐரோப்பியன் வரை அறிமுகப்படுத்துங்கள். ஆனால் நாங்கள் மொழியறியாது இலக்கணப்பிழைகளோடு போட்ட கோசங்களை மொழியறிந்த நீங்களும் அதே இலக்கணப்பிழைகளோடு கோசிப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. தோற்றுப்போன நாங்கள் செய்ததையே நீங்களும் செய்யாதீர்கள். கிளிப்பிள்ளைகளாக இருக்காதீர்கள். வழி காட்டுபவர்களாக இருங்கள். கிளம்புங்கள்.
-சபேசன் (27.10.2005)
நன்றி www.webeelam.com

