Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே
#7
இப்படியான செய்திகளை வெளிக் கொண்டுவர தமிழ்தேசியத்திர்கு ஆதரவான ஊடகங்கள் பின்னிர்ப்பது பின் இந்ததுரோகிகளினால் பாதிப்பு ஏர்ப்பட்டதின் பின் புலம்புவதில் என்ன பயன்?????
டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!

சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பியஇ கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன.

விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இருந்தது. அப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்குள் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. இதற்கு தமிழர்களால் நடத்தப்படுகின்ற விழாக்களையும் பயன்படுத்த முற்பட்டது. சிறிலங்காவின் தூதரகங்களின் ஊடாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன. இது பல பேர் அறியாத ஒரு உண்மை. ஆனால் விழாக்களின் காலம் முடிவடைகின்ற நேரத்திலேயே சிறிலங்கா தூதரகங்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்கியதால்இ அவர்களால் இந்த ஊடுருவல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

இன்று சிறிலங்கா அரசின் ஊடுருவல்கள் ரிபிசி வானொலியிலும் சில இணையத் தளங்களிலும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

ஆனால் இந்த ஊடகங்கள் மூலமும் சிறிலங்கா அரசு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்ல. முக்கியமாக இளம் தலைமுறை மீது இந்த ஊடகங்களால் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதையும் செலுத்த முடியவில்லை. ஆகவே இளம்தலைமுறையினர் மீது ஊடுருவும் வகையில் மீண்டும் விழாக்களை பயன்படுத்து முடிவெடுத்திருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்ற மாதிரியான சம்பவங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.

டென்மார்க்கில் வரும் 29.04.06 அன்று ஒரு திரையிசை நடன விழா நடைபெற உள்ளது. "கலக்கப் போவது யாரு" என்னும் பெயரில் திரையிசை நடனப் போட்டியோடு வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களைக் கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களோடு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சில நடனக் குழுக்கள் இதில் பங்கு பற்ற உள்ளன. மிகவும் ஆராவரமாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதிஇ வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதிஇ வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது.

இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதிஇ வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோஇ அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.

இந்த விழாவில் சேர்க்கப்படும் நிதியில் ஒரு பகுதி அன்னை இல்லத்திற்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த அன்னை இல்லம் கூட குமாரதுரை குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதாக டென்மார்க்கில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல. பிரச்சனை இந்த விழாவின் பின்னணியில் உள்ளவர்களின் உள்நோக்கம் சம்பந்தமானதே. கலையின் பெயரால் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவதுதான் இவர்களின் நோக்கம். பல நாடுகளிலும் இருந்த வரும் இளைஞர்களுடன் நட்பை ஏற்படுத்திஇ தமது பக்கம் ஈர்த்துஇ பின்பு விடுதலைக்கு எதிராக அந்த இளைஞர்களை பயன்படுத்துவதே இவர்களின் திட்டம். பொய்யான பெயர்களில் விழாவை நடத்திஇ பல பார்வையாளர்களைக் கலந்து கொள்ளச் செய்துஇ அவர்களை தம்முடைய ஆதரவாளர்களாக பிரச்சாரம் செய்கின்ற திட்டமும் உள்ளது.

இந்த திட்டங்களை உணர்ந்து கொண்ட பல டென்மார்க் தமிழர்கள் இந்த விழாவின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த தொடங்கி விட்டார்கள். இதையடுத்து அந்த விழாவை தாங்களே நடத்துவதாக சொல்லிக்கொள்பவர்கள் தமது தீய சக்திகளுடனான தொடர்புகளுக்கான ஆதாரங்களை மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். விளம்பரங்களிலும் சிறிது மாற்றம் செய்துள்ளனர். அத்துடன் இந்த விழாவிற்கும் மதிஇ வதனன் ஆகியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதிக்கின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டதன் வெளிப்பாடே.

ஆகவே இளம் தலைமுறையே! மிகவும் விழிப்பாக இருங்கள்! தீய சக்திகளை இனம் கண்டு கொள்ளுங்கள்! கலையின் பெயராலும்இ நட்பின் பெயராலும் தவறான பாதைக்கு சென்று விடாதீர்கள்! இது போன்ற கவர்ச்சிகரமான விழாக்களால் விழுந்து விடாமல் இருங்கள்!


- வி. சபேசன் (20.04.06)
http://www.webeelam.com/
டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! http://www.webeelam.com/TRODenmark.htm
vasan
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-22-2006, 06:15 AM
[No subject] - by நேசன் - 04-22-2006, 07:27 AM
[No subject] - by Ilayathambi - 04-22-2006, 07:46 AM
[No subject] - by agathyan - 04-22-2006, 07:53 AM
[No subject] - by Vasan - 04-22-2006, 07:55 AM
[No subject] - by Vasan - 04-22-2006, 08:01 AM
[No subject] - by MEERA - 04-22-2006, 08:39 AM
[No subject] - by ThamilMahan - 04-22-2006, 09:03 AM
[No subject] - by narathar - 04-22-2006, 09:19 AM
[No subject] - by Ilayathambi - 04-22-2006, 11:09 AM
[No subject] - by Bond007 - 04-22-2006, 04:47 PM
[No subject] - by karu - 04-22-2006, 06:37 PM
[No subject] - by Jude - 04-22-2006, 07:28 PM
[No subject] - by sathiri - 04-22-2006, 10:20 PM
[No subject] - by cannon - 04-23-2006, 07:21 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-23-2006, 08:38 PM
[No subject] - by ThamilMahan - 04-23-2006, 10:21 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 12:51 AM
[No subject] - by kurukaalapoovan - 04-26-2006, 08:07 PM
[No subject] - by putthan - 04-27-2006, 07:32 AM
[No subject] - by Jude - 04-27-2006, 08:28 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 01:47 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 03:37 AM
[No subject] - by narathar - 04-29-2006, 04:45 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 05:03 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:30 AM
[No subject] - by அருவி - 04-29-2006, 07:06 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 08:37 AM
[No subject] - by தூயவன் - 04-29-2006, 03:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)