04-22-2006, 07:46 AM
வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளை சாடி வெப்ஈழத்தில் வெளிவந்த கட்டுரை
ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத "எழுக தமிழ்"(பாகம் 1)
(25.10.2005)
எழுக தமிழ் எழுச்சிப்பேரணி பெல்யியம் நாட்டில் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் பல நாடுகளிலும் இருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வந்திருந்தார்கள். குழந்தைகள் தொடக்கும் பெரியவர்கள் வரை ஆறு மணித்தியாலங்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் கால் கடுக்க நின்றார்கள். அவர்களெல்லாம் ஒரு நோக்கத்தோடும் நம்பிக்கையோடும் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாது நின்றார்கள். அவர்களுக்கெல்லாம் சாதிக்க வந்திருக்கும் உணர்வு. இவ்வளவு பேர் வந்திருக்கின்றோமே, எப்படியும் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துகொள்ளும் என்கின்ற நம்பிக்கை அவர்களின் முகங்களில். நிகழ்ச்சியை உணர்ச்சி பொங்க தொகுத்து வழங்கியவரும் ஒரு பதிலோடுதான் இன்று வீடு செல்வோம் என்று கூறி மக்களை உசுப்பேற்றிக்கொண்டிருந்தார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பாரளுமன்றத்துக்குள் மனுக் கொடுத்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளே நடந்ததைப் பற்றி எதுவுமே பேசாது வேறு விடயங்களயே பேசினார். அவரால் பேசவும் முடியாது. உள்ளே மனுவை வாங்கிவிட்டு நன்றி சொல்லி அனுப்பினார்கள் என்று பனியிலும் மழையிலும் காத்திருக்கும் மக்களிடம் சொல்லமுடியாது.
என் அன்புக்குரிய தமிழ் உள்ளங்களே! ஒன்றை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பக்கம் நியாயம் உண்டு என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாத்திரம் அல்ல, இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரை எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதும் அவர்களுக்கு தெரியும். தொலைத்தொடர்புத்துறையின் அபரித வளர்ச்சியில் உலகம் ஒரு கிராமம் ஆகிய பிறகு எல்லோருக்கும் எல்லாம் தெரியும்.
பிறகு எதற்கு தடை போடுகிறார்கள்? யார் தடை போட்டாலும் அதற்கான ஒரே காரணம் விடுதலைப் புலிகளை முடிந்தளவு பலவீனப்படுத்துவதே. விடுதலைப் புலிகள் வெல்வதை உலகின் பணக்கார நாடுகள் எதுவுமே விரும்பவில்லை. அண்மைக் காலங்களில் எரித்திரியா நாட்டை தவிர வேற எந்த நாடோ அல்லது இனமோ யுத்தம் மூலம் தங்களின் விடுதலையை அடையவில்லை. பல நாடுகளில் உள்ள விடுதலை இயக்கங்கள் தங்கள் இலக்கை அடைகின்ற பலத்தோடு இல்லை. கடந்த இருபது வருடங்களாக முதலாளித்துவ நாடுகளில் விடுதலை கோரி போராடும் இனங்களை சில சலுகைகளை கொடுத்து அடங்கிப் போக செய்வதுதான் உலக ஒழுங்காக இருக்கின்றது. இன்று உலகிலேயே எதிரியை விட மேலோங்கிய பலத்தோடு இருக்கும் ஒரே ஒரு இயக்கமான விடுதலைப் புலிகள் இந்த உலக ஒழுங்கை சிதைத்து விடுவார்களோ என்கின்ற அச்சம் இந்த நாடுகளுக்கு உண்டு. அதுவும் தற்கொடைப் போராளிகளை ஒரு முக்கிய பலமாக கொண்ட ஒரு இனம் போரில் வெல்லுமானால் அது பல இனங்களுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்கின்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு. உலகிலேயே விடுதலைப்புலிகளே அதிகமான தற்கொடைத்தாக்குதல்களை நடத்தியவர்கள் என்பதையும் அமெரிக்கா தன்னுடைய தடையை நீக்குவதற்கு விடுதலைப்புலிகள் தங்களின் கரும்புலி அணியை கலைக்கவேண்டும் என்கிற நிபந்தனையை விதிப்பதையும் நினைவில் கொள்க. இந்தக் காரணங்களை விட பூகோள நலன் சார்ந்த காரணங்களாலும் இந்த நாடுகள் விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவதை விரும்பாது.
இதன் காரணமாகவே யுத்தம் மூலம் எமை வெல்வதற்கு முதலில் உதவி புரிந்தவர்கள், எம்மை வெல்ல முடியாதபோது பேச்சுவார்த்தை மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் கருணாவின் பிளவு, மக்களிடம் எழுச்சி குன்றியமை போன்ற சில வெற்றிகளை கண்டவர்கள் அதன் பிறகு இன்று தமிழினமே தன்னை யுத்தத்திற்கு தயார்படுத்தி பயிற்சி எடுக்கின்ற பொழுது ஒரு தற்காலிக தடையை போட்டிருக்கிறார்கள். ஈழத்தில் யுத்தம் மூளும் பொழுத தடை நிரந்தரம் ஆக்கப்படும். காரணம் நடக்கப்பொவது கடைசி யுத்தம். உலகிலே உள்ள அடக்கப்படும் இனங்களின் சார்பாக நடக்கப்போகும் யுத்தம். உலக நாடுகள் எம்மை தோற்கடிப்பதற்கு நேரடித் தலையீட்டை தவிர மற்ற அனைத்தையும் செய்யும். நாங்கள் ஒரு கடினமான அரசியல் போருக்கும் முகம் கொடுக்கவேண்டி வரும்.
இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் யாரும் இல்லாத ஒரு வீதியில் நின்று பேரணி செய்வதால் நாங்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. ரி.ரி.என் தொலைக்காட்சியும் ஐ.பி.சி வானோலியும் புருஸ்ஸில் நகரின் உள்ள+ர் பத்திரிகையும் செய்தி போடுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. வருடா வருடம் தொழிலாளர் தினத்தன்று நூற்றுக் கணக்கிலும் ஜெனிவாவில் ஆயிரக்கணக்கிலும் ஊர்வலம் போவதால் ஏற்படும் பலனே பெல்ஜியம் போவதாலும் ஏற்படும். ஆகவே ஓரளவாவது பலன் ஏற்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்??
(தொடர்ச்சி பாகம் 2இல்)
-சபேசன்
ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத "எழுக தமிழ்"(பாகம் 1)
(25.10.2005)
எழுக தமிழ் எழுச்சிப்பேரணி பெல்யியம் நாட்டில் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் பல நாடுகளிலும் இருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வந்திருந்தார்கள். குழந்தைகள் தொடக்கும் பெரியவர்கள் வரை ஆறு மணித்தியாலங்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் கால் கடுக்க நின்றார்கள். அவர்களெல்லாம் ஒரு நோக்கத்தோடும் நம்பிக்கையோடும் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாது நின்றார்கள். அவர்களுக்கெல்லாம் சாதிக்க வந்திருக்கும் உணர்வு. இவ்வளவு பேர் வந்திருக்கின்றோமே, எப்படியும் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துகொள்ளும் என்கின்ற நம்பிக்கை அவர்களின் முகங்களில். நிகழ்ச்சியை உணர்ச்சி பொங்க தொகுத்து வழங்கியவரும் ஒரு பதிலோடுதான் இன்று வீடு செல்வோம் என்று கூறி மக்களை உசுப்பேற்றிக்கொண்டிருந்தார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பாரளுமன்றத்துக்குள் மனுக் கொடுத்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளே நடந்ததைப் பற்றி எதுவுமே பேசாது வேறு விடயங்களயே பேசினார். அவரால் பேசவும் முடியாது. உள்ளே மனுவை வாங்கிவிட்டு நன்றி சொல்லி அனுப்பினார்கள் என்று பனியிலும் மழையிலும் காத்திருக்கும் மக்களிடம் சொல்லமுடியாது.
என் அன்புக்குரிய தமிழ் உள்ளங்களே! ஒன்றை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பக்கம் நியாயம் உண்டு என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாத்திரம் அல்ல, இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரை எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதும் அவர்களுக்கு தெரியும். தொலைத்தொடர்புத்துறையின் அபரித வளர்ச்சியில் உலகம் ஒரு கிராமம் ஆகிய பிறகு எல்லோருக்கும் எல்லாம் தெரியும்.
பிறகு எதற்கு தடை போடுகிறார்கள்? யார் தடை போட்டாலும் அதற்கான ஒரே காரணம் விடுதலைப் புலிகளை முடிந்தளவு பலவீனப்படுத்துவதே. விடுதலைப் புலிகள் வெல்வதை உலகின் பணக்கார நாடுகள் எதுவுமே விரும்பவில்லை. அண்மைக் காலங்களில் எரித்திரியா நாட்டை தவிர வேற எந்த நாடோ அல்லது இனமோ யுத்தம் மூலம் தங்களின் விடுதலையை அடையவில்லை. பல நாடுகளில் உள்ள விடுதலை இயக்கங்கள் தங்கள் இலக்கை அடைகின்ற பலத்தோடு இல்லை. கடந்த இருபது வருடங்களாக முதலாளித்துவ நாடுகளில் விடுதலை கோரி போராடும் இனங்களை சில சலுகைகளை கொடுத்து அடங்கிப் போக செய்வதுதான் உலக ஒழுங்காக இருக்கின்றது. இன்று உலகிலேயே எதிரியை விட மேலோங்கிய பலத்தோடு இருக்கும் ஒரே ஒரு இயக்கமான விடுதலைப் புலிகள் இந்த உலக ஒழுங்கை சிதைத்து விடுவார்களோ என்கின்ற அச்சம் இந்த நாடுகளுக்கு உண்டு. அதுவும் தற்கொடைப் போராளிகளை ஒரு முக்கிய பலமாக கொண்ட ஒரு இனம் போரில் வெல்லுமானால் அது பல இனங்களுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்கின்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு. உலகிலேயே விடுதலைப்புலிகளே அதிகமான தற்கொடைத்தாக்குதல்களை நடத்தியவர்கள் என்பதையும் அமெரிக்கா தன்னுடைய தடையை நீக்குவதற்கு விடுதலைப்புலிகள் தங்களின் கரும்புலி அணியை கலைக்கவேண்டும் என்கிற நிபந்தனையை விதிப்பதையும் நினைவில் கொள்க. இந்தக் காரணங்களை விட பூகோள நலன் சார்ந்த காரணங்களாலும் இந்த நாடுகள் விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவதை விரும்பாது.
இதன் காரணமாகவே யுத்தம் மூலம் எமை வெல்வதற்கு முதலில் உதவி புரிந்தவர்கள், எம்மை வெல்ல முடியாதபோது பேச்சுவார்த்தை மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் கருணாவின் பிளவு, மக்களிடம் எழுச்சி குன்றியமை போன்ற சில வெற்றிகளை கண்டவர்கள் அதன் பிறகு இன்று தமிழினமே தன்னை யுத்தத்திற்கு தயார்படுத்தி பயிற்சி எடுக்கின்ற பொழுது ஒரு தற்காலிக தடையை போட்டிருக்கிறார்கள். ஈழத்தில் யுத்தம் மூளும் பொழுத தடை நிரந்தரம் ஆக்கப்படும். காரணம் நடக்கப்பொவது கடைசி யுத்தம். உலகிலே உள்ள அடக்கப்படும் இனங்களின் சார்பாக நடக்கப்போகும் யுத்தம். உலக நாடுகள் எம்மை தோற்கடிப்பதற்கு நேரடித் தலையீட்டை தவிர மற்ற அனைத்தையும் செய்யும். நாங்கள் ஒரு கடினமான அரசியல் போருக்கும் முகம் கொடுக்கவேண்டி வரும்.
இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் யாரும் இல்லாத ஒரு வீதியில் நின்று பேரணி செய்வதால் நாங்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. ரி.ரி.என் தொலைக்காட்சியும் ஐ.பி.சி வானோலியும் புருஸ்ஸில் நகரின் உள்ள+ர் பத்திரிகையும் செய்தி போடுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. வருடா வருடம் தொழிலாளர் தினத்தன்று நூற்றுக் கணக்கிலும் ஜெனிவாவில் ஆயிரக்கணக்கிலும் ஊர்வலம் போவதால் ஏற்படும் பலனே பெல்ஜியம் போவதாலும் ஏற்படும். ஆகவே ஓரளவாவது பலன் ஏற்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்??
(தொடர்ச்சி பாகம் 2இல்)
-சபேசன்

