04-21-2006, 07:00 PM
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என தனது அணியின் வழிநின்று தனது கருத்துக்களை இடித்துரைத்தார் ரமா அவர்கள். </b>
பிள்ளைகள் தம்முடைய சுயநலத் தேவைகளுக்காக தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டு விலகுவதும், அதற்கு போலித்தனமான காரணங்களைக் கூறுவதும், தமது பிழைகளை மறைத்து பெற்றோர் மீதும், சமூகம் மீதும் பழி சுமத்துவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்று தனது மையக் கருத்தை முன்வைத்தார்.
மற்றவர்களிடம் அனுதாபங்களைப் பெறுவதற்காகவே தம்மை பாவப்படவர்களாக மற்றைய அணியினர் காட்டிக்கொள்கிறார்கள் என்று கருத்துரைத்தார். ஏனைய மேலைத்தேய சமூகத்து பெற்றோர் போல் எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்களா என்று கேள்வி எழுப்புகிறார். எமது பெற்றோர்கள் எம்மை அன்போடு பராமரிக்கிறார்கள் என்றார். (நமது) பெற்றோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அந்தப் பெற்றோர்க்கு நாம் என்ன செய்கிறோம் - மற்றவர் பேச்சைக் கேட்டு எமது பெற்றோரை நாம் வெறுக்கவேண்டுமா - என்று கேள்விகளை அடுக்கினார்.
புலம்பெயர் நாட்டில் மட்டுமா பெற்றோர்-பிள்ளை-இடைவெளி இருக்கிறது, தாயகத்திலும் இருக்கிறதே - நிதர்சன் சமூகத்தின் மீது சுமத்திய பழிகள் அங்கு பொருந்துமா? - என்று நிதர்சனிடம் தனது கேள்வியினை முன்வைக்கிறார்.
சமூகத்தின் மீது நிதர்சன் "பெற்றோரிடம் சமூகம் பத்தி வைக்கிறது என்கிற கருத்தை"முன்வைத்த குற்றச்சாட்டை ரமா மறுதலிக்கிறார்: பெற்றோரிடம் பிள்ளைபற்றி கூறுவது பத்திவைப்பதற்காக இல்லை - பிள்ளைகளை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே - ஆனால் பிள்ளைகள் அதைத் தவறாக புரிந்துகொண்டு பெற்றோருடன் முரண்படுகிறார்கள் என்கிறார். (--> உண்மைதானோ. நல்லதைச் சொன்னால் யார் கேட்கிறார்கள். ஏதோ தங்களைக் கொலை செய்வதாகவே எண்ணுகிறார்கள்.)
பிழைவிடும் பிள்ளைகளையும், விலகிச்செல்கிற பிள்ளைகளையும் அரவணைத்து, அன்புசெலுத்தி பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கிறார்கள் பெற்றோர்கள் - அப்படிப்பட்ட பெற்றோரை குறைகூறலாமா என்கிறார். தனது கருத்துக்கு வலுச்சேர்க்க "பைபிளில்" இருந்து உதாரணம் கூறுகிறார்.
இப்படியாக பெற்றோரை உயர்த்தி - பிள்ளைகளின் பெற்றோர் மீதான புரிதலின்மையைக் கண்டித்து - பிள்ளைகளைக் கிள்ளி விடைபெற்றார்.
<b>இனி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் "சுஜீந்தன்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். தொட்டிலை ஆட்ட வாருங்கள் சுஜீந்தன்...</b>
பிள்ளைகள் தம்முடைய சுயநலத் தேவைகளுக்காக தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டு விலகுவதும், அதற்கு போலித்தனமான காரணங்களைக் கூறுவதும், தமது பிழைகளை மறைத்து பெற்றோர் மீதும், சமூகம் மீதும் பழி சுமத்துவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்று தனது மையக் கருத்தை முன்வைத்தார்.
மற்றவர்களிடம் அனுதாபங்களைப் பெறுவதற்காகவே தம்மை பாவப்படவர்களாக மற்றைய அணியினர் காட்டிக்கொள்கிறார்கள் என்று கருத்துரைத்தார். ஏனைய மேலைத்தேய சமூகத்து பெற்றோர் போல் எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்களா என்று கேள்வி எழுப்புகிறார். எமது பெற்றோர்கள் எம்மை அன்போடு பராமரிக்கிறார்கள் என்றார். (நமது) பெற்றோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அந்தப் பெற்றோர்க்கு நாம் என்ன செய்கிறோம் - மற்றவர் பேச்சைக் கேட்டு எமது பெற்றோரை நாம் வெறுக்கவேண்டுமா - என்று கேள்விகளை அடுக்கினார்.
புலம்பெயர் நாட்டில் மட்டுமா பெற்றோர்-பிள்ளை-இடைவெளி இருக்கிறது, தாயகத்திலும் இருக்கிறதே - நிதர்சன் சமூகத்தின் மீது சுமத்திய பழிகள் அங்கு பொருந்துமா? - என்று நிதர்சனிடம் தனது கேள்வியினை முன்வைக்கிறார்.
சமூகத்தின் மீது நிதர்சன் "பெற்றோரிடம் சமூகம் பத்தி வைக்கிறது என்கிற கருத்தை"முன்வைத்த குற்றச்சாட்டை ரமா மறுதலிக்கிறார்: பெற்றோரிடம் பிள்ளைபற்றி கூறுவது பத்திவைப்பதற்காக இல்லை - பிள்ளைகளை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே - ஆனால் பிள்ளைகள் அதைத் தவறாக புரிந்துகொண்டு பெற்றோருடன் முரண்படுகிறார்கள் என்கிறார். (--> உண்மைதானோ. நல்லதைச் சொன்னால் யார் கேட்கிறார்கள். ஏதோ தங்களைக் கொலை செய்வதாகவே எண்ணுகிறார்கள்.)
பிழைவிடும் பிள்ளைகளையும், விலகிச்செல்கிற பிள்ளைகளையும் அரவணைத்து, அன்புசெலுத்தி பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கிறார்கள் பெற்றோர்கள் - அப்படிப்பட்ட பெற்றோரை குறைகூறலாமா என்கிறார். தனது கருத்துக்கு வலுச்சேர்க்க "பைபிளில்" இருந்து உதாரணம் கூறுகிறார்.
இப்படியாக பெற்றோரை உயர்த்தி - பிள்ளைகளின் பெற்றோர் மீதான புரிதலின்மையைக் கண்டித்து - பிள்ளைகளைக் கிள்ளி விடைபெற்றார்.
<b>இனி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் "சுஜீந்தன்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். தொட்டிலை ஆட்ட வாருங்கள் சுஜீந்தன்...</b>

