Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?
#1
என்னுடைய Blogல் நான் எழுதியிருந்த கருத்துகள் இவை :

<b>ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? </b>

நான் பல கருத்துக் களங்களில் கருத்தெழுதி வருபவன்... அதுபோல களங்களில் எல்லாம் சில ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக மிக மோசமான கருத்துகளை ஆபாச மொழியில் வைப்பதை பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிரிகளாக நினைக்கிறார்களோ என்று நினைப்பேன்.... எந்த இந்தியனும் ஈழத்தமிழன் மீது வெறுப்பு ஏதும் கொள்ளாத போது அவர்கள் ஏன் இது மாதிரி என்றும் நினைப்பேன்... புலிகள் வேறு, ஈழத்தமிழ் மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இந்தியர்களுக்கு இருக்கும் அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசியல் வேறு, மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாதோ என்றும் நினைப்பேன்...

ஆனால் என் நினைப்புக்கு வேட்டு வைக்கும் வகையிலும் சில மனிதநேயம் கொண்ட ஈழத்தமிழர்களை இணையத்தில் சந்தித்தேன்... அவர்கள் இந்தியா மீதும், தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் பெரும் அன்பு கொண்டிருக்கிறார்கள்... ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் கல்வி கற்று இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் வசதியாக வாழும் அவர்கள் இந்தியாவுக்கு தங்கள் நன்றி கடனை செலுத்தத் தவறுவதில்லை... தங்களுக்கு வாழ்வு கொடுத்த இந்தியாவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் புரிந்து கொண்டேன்....

ஆனாலும், சில ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு ஏன்? என்று சிந்தித்துப் பார்த்தபோது அவர்கள் தரப்பு நியாயமும் எனக்கு புரிந்தது... உதாரணத்திற்கு யாழ் எனும் கருத்துக் களத்தில் பல தோழர்கள் இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மிக மோசமாக அர்ச்சித்து வந்தனர்... அதை கண்ட என் ரத்தம் கொதித்தது... பதிலுக்கு நானும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் அவர்கள் தேசியத்தை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை வைத்தேன்... அந்தக் களத்தின் பொறுப்பாளர் திரு. மோகன் அவர்கள் எனக்கு தனிமடல் மூலம் ஏன் இதுபோல செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்... நான் பதில் அனுப்பும் போது இந்திய தேசியம் அவமானப்படுத்தப்படுவது உங்களுக்கு சந்தோசமா? என்று கேட்டிருந்தேன்.... அதற்கு அவர் கொடுத்த பதிலில் 87 - 90ஆம் ஆண்டுகளில் நடந்த சில சம்பவங்களை (அவரே நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்) எடுத்துச் சொன்னார்... குறிப்பாக அவருக்கு மிகவும் தெரிந்த பெண் ஒருவர் இந்திய ராணுவத்தால் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதை எடுத்துச் சொன்னார்.... அதனாலேயே பல ஈழத்தமிழர்கள் இந்தியா என்றாலே வெறுக்கின்றனர்... அது போல சம்பவங்களை எப்படி மறக்க முடியும் என்றும் கேட்டிருந்தார்....

அவர் தரப்பில் பார்த்தால் அது நியாயம் தான்... 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையே நாம் இன்னும் மறக்கவில்லை... வெள்ளையன் என்றாலே நாம் வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்... 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்? மறக்கச் சொல்லுவதும் நியாயம் இல்லையே?

இருந்தாலும் கூட அவர்கள் அந்த அநியாயங்களை செய்த இந்திய ராணுவத்தில் எந்த தமிழனும் இருந்திருக்க மாட்டான்... தமிழன் இருந்திருந்தால் அதுபோல செய்திருக்கவும் மாட்டான் என்று இன்னமும் குருட்டுத் தனமாக நம்புகிறார்கள்.... இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களின் நியாயம் இது....

ஆனாலும் இவர்கள் இன்னமும் இந்தியா ஈழத்துக்கு எதிரானது... இந்திய "ரா" உளவு அமைப்பு அவர்களுக்கு எதிராக 5,000 பேரை பணியில் அமர்த்தி இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்போதைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறது.... சிங்கள ராணுவத்துக்கோ, அல்லது ஈழச் சுதந்திரத்துக்கு போராடும் எந்த ஒரு அமைப்புக்கோ ஆதரவு தருவதில்லை... நாடு மலர்ந்தாலும் மகிழ்ச்சி என்ற நிலையிலேயே (மக்களின் பெருவாரியான நினைப்பும் இது தான்) நம் நாடு இருக்கிறது...

என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இலங்கை அரசை விட விடுதலைப்புலிகளே இந்தியாவுக்கு இப்போதைக்கு நம்பகமானவர்கள்... இலங்கை அரசு எத்தனையோ முறை அமெரிக்க ராணுவத்தளத்தை திரிகோணமலையில் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து, இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் அது நடக்காமல் போய் வருவதை நாம் அறிவோம்....

சரி... ஈழத்தமிழர்களில் இன்னொரு வகையினரைப் பார்ப்போம்.... 83க்கு பிறகு ஈழத்தில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்தவர்கள் ஒரு வகை.... 89ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அங்கு கல்வியை பாதியில் விட்டு வந்தவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் தமிழகத்தில் அவர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது.... வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்த ஈழ இளைஞர்கள் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்தி நன்கு கல்வி கற்று ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்....

இது போன்றவர்கள் இன்னமும் இந்தியாவை மறக்க முடியாமல் வருடம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இங்கு வந்துப் போகிறார்கள்... இவர்களுக்கு ஈழத்தை விட இந்தியாவின் மீதே ஈர்ப்பு அதிகம்... இந்திய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.... உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...

கருத்து.காம் என்ற வெப்சைட்டை நடத்தி வருபவரும் ஒரு ஈழத்தமிழரே... ஆனால் அவர் நடத்தும் கருத்துக் களத்தில் இந்தியப் பிரச்சினைகளும், தமிழக அரசியல், சினிமா என்றே விவாதிக்க இடம் அளித்துள்ளார்... தமிழக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் கொண்டவர்.... விடுமுறையில் இந்தியா வந்திருக்கும் இவர் தன் விடுமுறையை ஜாலி டூராக எண்ணாமல் இந்திய மக்களைப் பற்றிய Case Study ஆக எடுத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறார்.... அதைப் போலவே கனடாவில் வசிக்கும் மணிவண்ணன் என்ற நண்பரும் கூட (83க்கு முன்னாலேயே ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்) இந்தியா மீது பெரும் பற்று கொண்டவராக இருக்கிறார்...

இவ்வாறாக இரு வேறு கருத்துக் கொண்ட மக்களாகவே ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.... ஒட்டு மொத்தமாக இந்தியாவை அவர்கள் வெறுக்கிறார்கள் என்று கூறுவது தவறு... 87 - 90ஆம் ஆண்டைய சம்பவங்களே ஒரு சிலருக்கு இந்தியா மீது வெறுப்பு வர காரணம்... ஆனால் அவர்களும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

விரைவில் ஈழம் மலர்ந்தால் இந்தியாவும் அவர்களுக்கு தகுந்த கவுரவம் கொடுக்கும்.... இந்தியா மீது அவர்களுக்கு இருக்கும் கசப்புணர்வும் குறையக்கூடும்.... ஈழம் மலரட்டும்....
,
......
Reply


Messages In This Thread
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? - by Luckyluke - 04-20-2006, 06:59 AM
[No subject] - by Ilayathambi - 04-20-2006, 08:47 AM
[No subject] - by Luckyluke - 04-20-2006, 09:10 AM
[No subject] - by Mathuran - 04-20-2006, 09:21 AM
[No subject] - by sinnakuddy - 04-20-2006, 09:25 AM
[No subject] - by அருவி - 04-20-2006, 10:03 AM
[No subject] - by aathipan - 04-20-2006, 10:30 AM
[No subject] - by Danklas - 04-20-2006, 11:03 AM
[No subject] - by Danklas - 04-20-2006, 11:04 AM
[No subject] - by Kishaan - 04-20-2006, 11:11 AM
[No subject] - by Ilayathambi - 04-20-2006, 11:15 AM
[No subject] - by Kishaan - 04-20-2006, 11:57 AM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:13 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:16 PM
[No subject] - by Aaruran - 04-20-2006, 12:22 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:22 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:26 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:31 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:33 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:34 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:40 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:43 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:49 PM
[No subject] - by Luckyluke - 04-20-2006, 01:10 PM
[No subject] - by தூயவன் - 04-20-2006, 01:30 PM
[No subject] - by pepsi - 04-20-2006, 02:26 PM
[No subject] - by Mathuran - 04-20-2006, 02:54 PM
[No subject] - by Aaruran - 04-20-2006, 05:21 PM
[No subject] - by Nilavan. - 04-20-2006, 05:47 PM
[No subject] - by angali - 04-20-2006, 06:00 PM
[No subject] - by angali - 04-20-2006, 06:10 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 06:19 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 06:25 PM
[No subject] - by Thala - 04-20-2006, 06:39 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 06:49 PM
[No subject] - by Thala - 04-20-2006, 06:55 PM
[No subject] - by angali - 04-20-2006, 06:57 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 06:58 PM
[No subject] - by Thala - 04-20-2006, 07:03 PM
[No subject] - by Mathuran - 04-20-2006, 07:03 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 07:04 PM
[No subject] - by வினித் - 04-20-2006, 08:39 PM
[No subject] - by nirmalan - 04-21-2006, 12:02 AM
[No subject] - by paandiyan - 04-21-2006, 02:10 AM
[No subject] - by paandiyan - 04-21-2006, 02:23 AM
[No subject] - by paandiyan - 04-21-2006, 02:36 AM
[No subject] - by rajathiraja - 04-21-2006, 04:36 AM
[No subject] - by rajathiraja - 04-21-2006, 04:42 AM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 04:53 AM
[No subject] - by rajathiraja - 04-21-2006, 04:56 AM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 05:01 AM
[No subject] - by வர்ணன் - 04-21-2006, 05:08 AM
[No subject] - by angali - 04-21-2006, 06:04 AM
[No subject] - by mathanarasa - 04-21-2006, 06:09 AM
[No subject] - by வர்ணன் - 04-21-2006, 06:27 AM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 07:17 AM
[No subject] - by kurukaalapoovan - 04-21-2006, 08:22 AM
[No subject] - by Mathuran - 04-21-2006, 08:44 AM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 09:21 AM
[No subject] - by Mathuran - 04-21-2006, 10:39 AM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 11:18 AM
[No subject] - by Vasampu - 04-21-2006, 01:28 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 01:32 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 01:35 PM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 02:02 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 02:14 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 02:18 PM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 03:21 PM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 03:22 PM
[No subject] - by Subiththiran - 04-21-2006, 03:29 PM
[No subject] - by நேசன் - 04-21-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 03:45 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 03:46 PM
[No subject] - by Subiththiran - 04-21-2006, 03:47 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 03:50 PM
[No subject] - by Mathuran - 04-21-2006, 09:25 PM
[No subject] - by Luckyluke - 04-24-2006, 06:37 AM
[No subject] - by Danklas - 04-24-2006, 06:55 AM
[No subject] - by Luckyluke - 04-24-2006, 10:52 AM
[No subject] - by Mathuran - 04-24-2006, 06:01 PM
[No subject] - by paandiyan - 04-25-2006, 01:26 AM
[No subject] - by Maruthankerny - 04-25-2006, 02:00 AM
[No subject] - by Maruthankerny - 04-25-2006, 04:39 AM
[No subject] - by putthan - 04-25-2006, 05:01 AM
[No subject] - by thaiman.ch - 04-25-2006, 06:55 AM
[No subject] - by Luckyluke - 04-25-2006, 07:45 AM
[No subject] - by Mathuran - 04-25-2006, 08:35 AM
[No subject] - by narathar - 04-25-2006, 08:39 AM
[No subject] - by Thala - 04-25-2006, 09:25 AM
[No subject] - by Luckyluke - 04-25-2006, 11:23 AM
[No subject] - by Maruthankerny - 04-25-2006, 10:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)