04-20-2006, 03:18 AM
[size=18]விடுதலைப் புலிகளை ஆதரிப்பதால் தி.மு.கவில் இணைய மாட்டேன்: கருணாநிதியிடம் சு.ப.வீரபாண்டியன் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிற நிலைப்பாடு கொண்டிருப்பதால் தன்னால் தி.மு.க.வில் இணைய முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சு.ப.வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக தேர்தலில் நடுநிலை வகிப்பது என்ற பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தின் முடிவை அக்கட்சியின் பொதுச்செயலாளரான சு.ப.வீரபாண்டியன் ஏற்கவில்லை. இதையடுத்து அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் சு.ப.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை அம்பத்தூரில் நேற்று புதன்கிழமை இரவு தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தென்னவன் கலைமன்றம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், கவிஞர் அறிவுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று சு.ப.வீரபாண்டியன் பேசியதாவது:
"பொடா" எனும் கொடூரச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டோரில் ஜெயலலிதாவை எதிர்க்கிற ஒற்றைக் குரலாக நான் பேச வந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்கான நான் பேச வந்திருக்கிறேன்.
ஜுனியர் விகடன் ஏட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. எனக்கு வாகன வசதிகளையும் பெரிய பதவி ஒன்றையும் தி.மு.க. தர உள்ளதாக சொல்லியிருக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் தொண்டன் என்பதை விட- தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவன் என்பதை விட எனக்கு வேறு எந்த பெரிய பதவியும் தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கலைஞர் அவர்களைச் சந்தித்து அரை மணிநேரம் உரையாடினேன். அப்போது அருகில் இருந்தவர்கள் தி.மு.க.வில் சேருகிறீர்களா? என்று கேட்டனர்.
நான் பார்ப்பன எதிர்ப்பாளன்- தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிறவன். இந்த இரண்டு கொள்கைகளோடு உள்ள நான் தி.மு.க.வில் இணைய முடியாது. தி.மு.க.வுக்கும் அது முடியாதது என்று சொல்லிவிட்டேன்.
அதற்குப் பதிலளித்த கலைஞர், எங்கிருந்தாலும் என்ன.. நீ...இராம.சுப்பையாவின் மகன்...என் பிள்ளைதான் நீ என்று சொன்னார். இதைவிட பெரும் பதவி எனக்கு வேறு என்ன தேவை? என்றைக்கும் தந்தை பெரியாரின் தொண்டனாகவும் தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் நானும் சீமானும் அறிவுமதியும் இருப்போம். பதவிகளை எதிர்பார்த்து செயற்படுகிறவர்கள் அல்ல நாங்கள் என்றார் சுப.வீரபண்டியன்.
-புதினம்
தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிற நிலைப்பாடு கொண்டிருப்பதால் தன்னால் தி.மு.க.வில் இணைய முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சு.ப.வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக தேர்தலில் நடுநிலை வகிப்பது என்ற பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தின் முடிவை அக்கட்சியின் பொதுச்செயலாளரான சு.ப.வீரபாண்டியன் ஏற்கவில்லை. இதையடுத்து அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் சு.ப.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை அம்பத்தூரில் நேற்று புதன்கிழமை இரவு தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தென்னவன் கலைமன்றம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், கவிஞர் அறிவுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று சு.ப.வீரபாண்டியன் பேசியதாவது:
"பொடா" எனும் கொடூரச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டோரில் ஜெயலலிதாவை எதிர்க்கிற ஒற்றைக் குரலாக நான் பேச வந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்கான நான் பேச வந்திருக்கிறேன்.
ஜுனியர் விகடன் ஏட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. எனக்கு வாகன வசதிகளையும் பெரிய பதவி ஒன்றையும் தி.மு.க. தர உள்ளதாக சொல்லியிருக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் தொண்டன் என்பதை விட- தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவன் என்பதை விட எனக்கு வேறு எந்த பெரிய பதவியும் தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கலைஞர் அவர்களைச் சந்தித்து அரை மணிநேரம் உரையாடினேன். அப்போது அருகில் இருந்தவர்கள் தி.மு.க.வில் சேருகிறீர்களா? என்று கேட்டனர்.
நான் பார்ப்பன எதிர்ப்பாளன்- தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிறவன். இந்த இரண்டு கொள்கைகளோடு உள்ள நான் தி.மு.க.வில் இணைய முடியாது. தி.மு.க.வுக்கும் அது முடியாதது என்று சொல்லிவிட்டேன்.
அதற்குப் பதிலளித்த கலைஞர், எங்கிருந்தாலும் என்ன.. நீ...இராம.சுப்பையாவின் மகன்...என் பிள்ளைதான் நீ என்று சொன்னார். இதைவிட பெரும் பதவி எனக்கு வேறு என்ன தேவை? என்றைக்கும் தந்தை பெரியாரின் தொண்டனாகவும் தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் நானும் சீமானும் அறிவுமதியும் இருப்போம். பதவிகளை எதிர்பார்த்து செயற்படுகிறவர்கள் அல்ல நாங்கள் என்றார் சுப.வீரபண்டியன்.
-புதினம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

