Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிஞர் நாவண்ணனுக்கு கண்ணீர் வணக்கம்....!!!
#23
[size=18]கிளிநொச்சியில் நாட்டுப்பற்றாளர் கவிஞர் நாவண்ணன் இறுதி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்த்த படைப்பாளி நாட்டுப்பற்றாளர் கவிஞர் நாவண்ணன் இறுதி வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.


நிதர்சனம் நிறுவனத்தில் நாவண்ணன் புகழுடல் வைக்கப்பட்டு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பிரதம செய்தி ஆசிரியர் கருணாகரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மலர்மாலை அணிவித்தார்.



திரைப்பட உருவாக்கல் பிரிவினைச் சேர்ந்த சங்கர், ஓவியர் ராஜன், பேராசிரியர் சண்முகலிங்கன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்

அதன் பின்னர் புலிகளின்குரல் அமலன் அரங்கில் பிற்பகல் 1 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு புலிகளின்குரல் நிர்வாக இணைப்பாளர் இ.இராஜேஸ்வரன் தலைமை வகித்தார்.

பொதுச்சுடரினை நாவண்ணனின் துணைவியார் ஏற்றினார்.

புகழுடலுக்கான மாலைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, புலிகளின்குரல் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஆகியோர் அணிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரங்கல் செய்தியை அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் வாசித்தார்.

கவிஞர் நாவண்ணன் எந்த நேரத்திலும் எந்த உடல்நிலையிலும் படைப்புக்காக உழைப்பவர். அவரின் படைப்புக்கள் தாயக விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பவை என்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தனது வணக்க உரையில் தெரிவித்தார்.

நாட்டுப்பற்றாளர் கவிஞர் நாவண்ணன் தாயக விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவணங்களின் இருப்பிடமாக இருந்தார் என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் வணக்க உரையில் குறிப்பிட்டார்.

நாவண்ணன் தன் படைப்புகளுடாக அடுத்த தலைமுறைக்கும் வாழ்வார் என்று விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை தனதுரையில் தெரிவித்தார்.

செஞ்சோலையின் தொடக்கம் முதல் அதன் வளர்ச்சியில் நாவண்ணன் அவர்களின் பணி அதிகமானது என்று செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் கூறினார்.

புலிகளின்குரல் வானொலியில் தன் படைப்புகளுடாக மக்கள் மனதில் தாயக விடுதலைப் போராட்டக்கருத்தை விதைத்வர் நாவண்ணன் என்று புலிகளின்குரல் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தனதுரையில் தெரிவித்தார்.

பின்னர் நாட்டுப்பற்றாளர் நாவண்ணனின் புகழுடல் அவரது தாய்மண்ணான மன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டது.


Puthinam.com

.
Reply


Messages In This Thread
[No subject] - by வர்ணன் - 04-16-2006, 01:41 AM
[No subject] - by sOliyAn - 04-16-2006, 02:00 AM
[No subject] - by Nitharsan - 04-16-2006, 02:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-16-2006, 06:59 AM
[No subject] - by Selvamuthu - 04-16-2006, 09:22 AM
[No subject] - by Subiththiran - 04-16-2006, 10:04 AM
[No subject] - by tamilini - 04-16-2006, 10:49 AM
[No subject] - by Mathuran - 04-16-2006, 11:31 AM
[No subject] - by Puyal - 04-16-2006, 11:33 AM
[No subject] - by iruvizhi - 04-16-2006, 12:38 PM
[No subject] - by putthan - 04-16-2006, 01:38 PM
[No subject] - by கீதா - 04-16-2006, 02:18 PM
[No subject] - by Nitharsan - 04-16-2006, 04:28 PM
[No subject] - by AJeevan - 04-16-2006, 06:52 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 03:48 AM
[No subject] - by Aravinthan - 04-17-2006, 05:53 AM
[No subject] - by sri - 04-17-2006, 08:35 AM
[No subject] - by வெண்ணிலா - 04-17-2006, 08:43 AM
[No subject] - by அனிதா - 04-17-2006, 10:42 AM
[No subject] - by shanmuhi - 04-17-2006, 07:07 PM
[No subject] - by Subiththiran - 04-17-2006, 07:07 PM
[No subject] - by RaMa - 04-17-2006, 07:25 PM
[No subject] - by Nilavan. - 04-18-2006, 05:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)