04-17-2006, 01:11 PM
<b>சந்திவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை</b>
மட்டக்களப்பு சந்திவெளியில் துணை இராணுவக் குழுவினரால் ஈசன் (வயது 24) என்ற இளைஞர் இன்று திங்கட்கிழமை சுட்டுப் ப டுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாகனம் ஒன்றில் வந்த கருணா குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈசனின் வீட்டுக்குள் உள்நுழைந்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருணா குழுவைச் சேர்ந்த அந்த ஆயுததாரிக்கு சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பு அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் வடபகுதியில் சந்திவெளி அமைந்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல் மாவட்டத்துக்குட்பட்டது சந்திவெளி.
இதனிடையே வாழைச்சேனை கறுவாக்கேணி பாடசாலை முன்பாக நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது வான் ஒன்றில் வந்த ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கணபதிபிள்ளை கோனேஸ்வரன் (வயது 24) மற்றும் குணபால் சுரேஸ் (வயது 24) அகியோர் தமது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது வானில் வந்த ஆயுதக் குழுவினர் இன்று காலை 9.45 மணிக்கு இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்
தகவல்:புதினம்
மட்டக்களப்பு சந்திவெளியில் துணை இராணுவக் குழுவினரால் ஈசன் (வயது 24) என்ற இளைஞர் இன்று திங்கட்கிழமை சுட்டுப் ப டுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாகனம் ஒன்றில் வந்த கருணா குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈசனின் வீட்டுக்குள் உள்நுழைந்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருணா குழுவைச் சேர்ந்த அந்த ஆயுததாரிக்கு சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பு அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் வடபகுதியில் சந்திவெளி அமைந்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல் மாவட்டத்துக்குட்பட்டது சந்திவெளி.
இதனிடையே வாழைச்சேனை கறுவாக்கேணி பாடசாலை முன்பாக நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது வான் ஒன்றில் வந்த ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கணபதிபிள்ளை கோனேஸ்வரன் (வயது 24) மற்றும் குணபால் சுரேஸ் (வயது 24) அகியோர் தமது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது வானில் வந்த ஆயுதக் குழுவினர் இன்று காலை 9.45 மணிக்கு இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்
தகவல்:புதினம்
[size=14] ' '

