04-17-2006, 11:39 AM
புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 05
ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ ஜயாசச்சி ஸ
மாலைதீவிலிருந்து தப்பிவரும் தனது இயக்க உறுப்பினர்களை அவர்கள் வரும் கப்பலிருந்து பாதுகாப்பாக கரைசேர்ப்பதற்கு உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்டது. அதுவும் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் வருவதற்கு முன் அதைச் செய்ய வேண்டிய அவசரமும் ஏற்பட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து மிகுந்ததாகவே இருந்தது.
கப்பல் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்துவிட்டால் நிச்சயமாக இந்தியக்கடற்படையும், இலங்கைக்கடற்படையும் கூட்டுச் சேர்ந்து கப்பலையும் அதில் இருப்பவர்களையும் கைப்பற்றிவிடுவார்கள். றோ கதையை மாற்றி உமாமகேஸ்வரன் தான் குற்றவாளி என்று அடித்துச் சொல்லிவிடும் உன்ற பயம் உமாவுக்கு ஏற்பட்டது. முதலில் அவர் நினைத்தபடி ராஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைப்பது என்பது உடனடியாகச் சாத்தியப்படக்கூடிய விடயமாகத் தென்படவில்லை. ஆதனால் கொழும்பிலிருந்து கண்டிக்கோ, கிக்கடுவைக்கோ, அனுராதபுரத்திற்கோ செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை அவர்கள் செல்லும் பஸ்சுடன் சேர்த்துக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை முள்ளிக்குளம் பகுதிக்குக் கொண்டு சேர்க்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.
அவ்வாறு அவர்கள் முள்ளிக்குளத்தில் கரை சேர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், இந்திய அமைதிப்படைக்கும் போக்குக் காட்டிவிட்டு அவர்களை இரகசியமாக நுவரெலியாவுக்குக் கொண்டு சென்று ஜே.வி.பி.யினருடன் தங்கவைக்கலாம் என்று அவர் எண்ணினார்..
எனவே உடனடியாக அவசர அவசரமாக கொழும்பில் வைத்து உல்லாசப் பயணிகளை கடத்துவதற்கு கடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டு திட்டம், ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கடத்தல் குழுவின் தலைவர்களாக மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மூவரில் ஒருவர் ஆயுதம் தரித்த 4 சகாக்களுடன் பஸ்சைக்கடத்தி நீர்கொழும்பிற்கு கொண்டு செல்வது மற்றவர் வேறு இரண்டு சகாக்களுடன் கடத்தல் நாடகம் முடிந்ததும் நீர்கொழும்பிலிருந்து சிலாபத்திற்கு கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தப்பிச் செல்வதற்கு 250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட இயந்திரப் படகுடன் காத்திருப்பது சிலாபத்தில் கரையேறும் குழுவை விரைந்து புத்தளத்திற்குக் கொண்டு சேர்க்க மூன்றாமவர் வாகனமொன்றுடன் அங்கு காத்திருப்பதென்றும் திட்டம் தீட்டப்பட்டது. கொழும்பிலிருந்து புளொட் வசிப்பிடங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பணய நாடகம் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனும், மாலைதீவு கப்பலுடனும் தொடர்பு கொள்வதற்குத் தொலைத் தொடர்பு சாதனமும், தொலைத் தொடர்பாளரும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பணய நாடகத்தின் போது பேச வேண்டிய பேச்சுக்கள், வைக்க வேண்டிய கோரிக்கைகள், எதிர்த்தரப்புப் பேச்சுக்களுக்கும், கேள்விகளுக்கும் பிடிகொடுக்காமல் அளிக்க வேண்டிய பதில்கள் என்பனவும் தயாரிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன.
உமாமகேஸ்வரன் இவ்வாறு பரபரப்பாகக் கொழும்பில் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவர் கொழும்பில் தங்கியிருக்க உதவி செய்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவருடமன் தொடர்பு கொண்டு மாலைதீவு தாக்குதலை புளொட்தான் செய்ததென்று தனக்குத் தெரியும் என்றும் சதிப்புரட்சியாளர்கள் வரும் கப்பலை இலங்கைக்கடல் எல்லைக்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் கொழும்பில் இருந்து கொண்டு அவர்களை மீட்க எந்தக் காரியமும் செய்யக்கூடாதென்றும் அப்படிச் செய்தால் அது தங்களைப் பெரிய இக்கட்டில் மாட்டிவிடும் என்றும் அதனால் அவரை கைது செய்ய வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
உமாமகேஸ்வரனது நிலை ஆப்பிழுத்த குரங்கின் கதியாகிவிட்டது. அத்துலத்முதலி இப்படிச் செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் இதை கண்டும் காணாமல் இருந்துவிடுவார். அதாவது பெயருக்கு மற்றவர்களின் பார்வைக்காக எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று தான் உமா நினைத்திருந்தார். ஏனென்றால் அடுத்த ஜனாதிபதியாக தான் வருவதற்காக லலித் உமாவைக் கொண்டு திரை மறைவில் சில காரியங்களைச் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்காக உமாவுடன் கலந்து பேசியுமிருந்தார்.
தோல்விக்குமேல் தோல்வி ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம் அடுத்து என்ன செய்வது திட்டமிட்டபடி பயண நாடகத்தை அரசாங்கம் எதிர்த்தாலும் துணிந்து நடத்தி மாலைதீவு சகாக்களை மீட்பதா? அல்லது அரசாங்கத்திற்கு சங்கடமோ பாதிப்போ ஏற்படாத வகையில் வேறு ஏதாவது செய்வதா என்று உமாமகேஸ்வரன் ஊசலாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மாலைதீவு கடல் எல்லைக்குள் வைத்தே தமது விமானப்படையையும், கடற் படையையும் கொண்டு கப்பலைத் தாக்கி நீரில் மூழ்கும் நிலையை உருவாக்கி தான் அனுப்பிய சதிபுரட்சியாளர்களை தானே கைது செய்து தன்னை ஜனநாயக காவலனாக காட்டிக்கொண்டது.
இது ஒரு வகையில் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பெரும் நெருக்கடியை தணித்தது. உடனடியாக அவசரப்பட்டு காரியம் எதையும் செய்து மூக்குடைபட்டுப் போகாமல் நன்கு ஆற அமரத்திட்டமிட்டு அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மீட்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை என்று வரும் பொது தன்னை முதல் குற்றவாளியாக்கிவிட்டால் என்ன செய்வதென்றும் அவருக்குப் பயம் வந்தது. தன்னைக் குற்றவாளியாக்கினால் தன் மூலம் உண்மையான சூத்திரதாரிகள் தாங்கள்தான் என்பதும் வெளிவந்துவிடும் என்பதால் இந்தியா அப்படிச் செய்யாது என்றும் அவர் நம்பினார்.
எதற்கும் தன்னுடைய வதிவிடத்தை இலங்கைக்கு வெளியே வேறு ஒரு நாட்டிற்கு மாற்றி யாருக்கும் தெரியாமல் அங்கே தங்கியிருந்து கொண்டு செயல்படுவது என்று நல்லது என்று அவருக்குத் தோன்றியது. சிங்கப்பூர், பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டில் இருப்பதாக மற்றவர்கள் நம்பும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டம்.
இதன் முதல் கட்டமாக தனது பலஸ்தீன நண்பர்களடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நான் தங்கியிருக்க ஏற்பாடு செய்து தருமாறும் அங்கு தான் இஸ்லாமிய வர்த்தகர் போல் ஏதாவது தொழில்துறையில் முதலீடு செய்து கொண்டு தங்கியிருந்து தனது அடுத்த நடவடிக்கையை தொடரப் போவதாகவும் இந்தியாவின் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரஜீவின் பிள்ளைகளை கடத்த அதை அவர் அவருக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பாகிஸ்தானிலிருந்து உதவக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவரையும் தனக்கு அறிமுகம் செய்யுமாறு கோரியிருந்தார். அவர்களும் மிக விரைவிலேயே செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தனர்.
தான் கராச்சிக்கு தனது வதிவிடத்தை மாற்றப் போகும் விடயத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காகத் தான் சிங்கப்பூருக்குப் போய் தங்கியிருக்கப் போவதாக ஒரு வதந்தியை வெளியில் பரவவிட்டார். அவரது மிக நெருங்கிய நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களாக இருந்த சக்திவேல், ராபின் (சமீபத்தில் சுவிஸில் கொலை செய்யப்பட்டவர்.) ஆகிய இருவருக்கு மட்டும் தான் அவர் கராச்சி செல்லும் விடயம் தெரியும்.
மற்ற அனைவரும் உமா சிங்கப்பூருக்குப் போவதாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் பலஸ்தீன தொடர்பாளியிடமிருந்து இருந்து கராச்சியில் அவர் தங்கியிருக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதென்றும் அங்கே தங்களுடைய நண்பரான பாருக் தாதாவை தொடர்பு கொள்ளும்படியும் அவர் உமாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்றும் உடனடியாக அவரை தொடர்பு கொள்ளுமாறும் தகவல் வந்தது. உமாமகேஸ்வரன் காலம்கடத்தாது விரைந்து கராச்சிக்குச் செல்ல போலிப் பாஸ்போட் விசாவுக்கும், விமானடிக்கற்றுக்கும் ஒழுங்கு செய்தார். ரஜீவ்காந்திக்கும், றோவுக்கும் விரைவில் பாடம் படிப்பிக்கின்றேன் என்று அவர் கறுவிக் கொண்டார். ஆனால் பாவம் அவர் கராச்சியில் சென்று சந்திக்கப் போகின்ற பாருக் தாதா றோவினுடைய ஆளென்பது அவருக்குத் தெரியாது.
மாறுவேடத்தில் பாகிஸ்தான் நோக்கி உமாவின் பயணம்
தொடரும்………….
முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர்.
http://www.nitharsanam.com/?art=16506
ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ ஜயாசச்சி ஸ
மாலைதீவிலிருந்து தப்பிவரும் தனது இயக்க உறுப்பினர்களை அவர்கள் வரும் கப்பலிருந்து பாதுகாப்பாக கரைசேர்ப்பதற்கு உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்டது. அதுவும் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் வருவதற்கு முன் அதைச் செய்ய வேண்டிய அவசரமும் ஏற்பட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து மிகுந்ததாகவே இருந்தது.
கப்பல் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்துவிட்டால் நிச்சயமாக இந்தியக்கடற்படையும், இலங்கைக்கடற்படையும் கூட்டுச் சேர்ந்து கப்பலையும் அதில் இருப்பவர்களையும் கைப்பற்றிவிடுவார்கள். றோ கதையை மாற்றி உமாமகேஸ்வரன் தான் குற்றவாளி என்று அடித்துச் சொல்லிவிடும் உன்ற பயம் உமாவுக்கு ஏற்பட்டது. முதலில் அவர் நினைத்தபடி ராஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைப்பது என்பது உடனடியாகச் சாத்தியப்படக்கூடிய விடயமாகத் தென்படவில்லை. ஆதனால் கொழும்பிலிருந்து கண்டிக்கோ, கிக்கடுவைக்கோ, அனுராதபுரத்திற்கோ செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை அவர்கள் செல்லும் பஸ்சுடன் சேர்த்துக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை முள்ளிக்குளம் பகுதிக்குக் கொண்டு சேர்க்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.
அவ்வாறு அவர்கள் முள்ளிக்குளத்தில் கரை சேர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், இந்திய அமைதிப்படைக்கும் போக்குக் காட்டிவிட்டு அவர்களை இரகசியமாக நுவரெலியாவுக்குக் கொண்டு சென்று ஜே.வி.பி.யினருடன் தங்கவைக்கலாம் என்று அவர் எண்ணினார்..
எனவே உடனடியாக அவசர அவசரமாக கொழும்பில் வைத்து உல்லாசப் பயணிகளை கடத்துவதற்கு கடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டு திட்டம், ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கடத்தல் குழுவின் தலைவர்களாக மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மூவரில் ஒருவர் ஆயுதம் தரித்த 4 சகாக்களுடன் பஸ்சைக்கடத்தி நீர்கொழும்பிற்கு கொண்டு செல்வது மற்றவர் வேறு இரண்டு சகாக்களுடன் கடத்தல் நாடகம் முடிந்ததும் நீர்கொழும்பிலிருந்து சிலாபத்திற்கு கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தப்பிச் செல்வதற்கு 250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட இயந்திரப் படகுடன் காத்திருப்பது சிலாபத்தில் கரையேறும் குழுவை விரைந்து புத்தளத்திற்குக் கொண்டு சேர்க்க மூன்றாமவர் வாகனமொன்றுடன் அங்கு காத்திருப்பதென்றும் திட்டம் தீட்டப்பட்டது. கொழும்பிலிருந்து புளொட் வசிப்பிடங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பணய நாடகம் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனும், மாலைதீவு கப்பலுடனும் தொடர்பு கொள்வதற்குத் தொலைத் தொடர்பு சாதனமும், தொலைத் தொடர்பாளரும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பணய நாடகத்தின் போது பேச வேண்டிய பேச்சுக்கள், வைக்க வேண்டிய கோரிக்கைகள், எதிர்த்தரப்புப் பேச்சுக்களுக்கும், கேள்விகளுக்கும் பிடிகொடுக்காமல் அளிக்க வேண்டிய பதில்கள் என்பனவும் தயாரிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன.
உமாமகேஸ்வரன் இவ்வாறு பரபரப்பாகக் கொழும்பில் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவர் கொழும்பில் தங்கியிருக்க உதவி செய்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவருடமன் தொடர்பு கொண்டு மாலைதீவு தாக்குதலை புளொட்தான் செய்ததென்று தனக்குத் தெரியும் என்றும் சதிப்புரட்சியாளர்கள் வரும் கப்பலை இலங்கைக்கடல் எல்லைக்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் கொழும்பில் இருந்து கொண்டு அவர்களை மீட்க எந்தக் காரியமும் செய்யக்கூடாதென்றும் அப்படிச் செய்தால் அது தங்களைப் பெரிய இக்கட்டில் மாட்டிவிடும் என்றும் அதனால் அவரை கைது செய்ய வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
உமாமகேஸ்வரனது நிலை ஆப்பிழுத்த குரங்கின் கதியாகிவிட்டது. அத்துலத்முதலி இப்படிச் செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் இதை கண்டும் காணாமல் இருந்துவிடுவார். அதாவது பெயருக்கு மற்றவர்களின் பார்வைக்காக எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று தான் உமா நினைத்திருந்தார். ஏனென்றால் அடுத்த ஜனாதிபதியாக தான் வருவதற்காக லலித் உமாவைக் கொண்டு திரை மறைவில் சில காரியங்களைச் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்காக உமாவுடன் கலந்து பேசியுமிருந்தார்.
தோல்விக்குமேல் தோல்வி ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம் அடுத்து என்ன செய்வது திட்டமிட்டபடி பயண நாடகத்தை அரசாங்கம் எதிர்த்தாலும் துணிந்து நடத்தி மாலைதீவு சகாக்களை மீட்பதா? அல்லது அரசாங்கத்திற்கு சங்கடமோ பாதிப்போ ஏற்படாத வகையில் வேறு ஏதாவது செய்வதா என்று உமாமகேஸ்வரன் ஊசலாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மாலைதீவு கடல் எல்லைக்குள் வைத்தே தமது விமானப்படையையும், கடற் படையையும் கொண்டு கப்பலைத் தாக்கி நீரில் மூழ்கும் நிலையை உருவாக்கி தான் அனுப்பிய சதிபுரட்சியாளர்களை தானே கைது செய்து தன்னை ஜனநாயக காவலனாக காட்டிக்கொண்டது.
இது ஒரு வகையில் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பெரும் நெருக்கடியை தணித்தது. உடனடியாக அவசரப்பட்டு காரியம் எதையும் செய்து மூக்குடைபட்டுப் போகாமல் நன்கு ஆற அமரத்திட்டமிட்டு அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மீட்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை என்று வரும் பொது தன்னை முதல் குற்றவாளியாக்கிவிட்டால் என்ன செய்வதென்றும் அவருக்குப் பயம் வந்தது. தன்னைக் குற்றவாளியாக்கினால் தன் மூலம் உண்மையான சூத்திரதாரிகள் தாங்கள்தான் என்பதும் வெளிவந்துவிடும் என்பதால் இந்தியா அப்படிச் செய்யாது என்றும் அவர் நம்பினார்.
எதற்கும் தன்னுடைய வதிவிடத்தை இலங்கைக்கு வெளியே வேறு ஒரு நாட்டிற்கு மாற்றி யாருக்கும் தெரியாமல் அங்கே தங்கியிருந்து கொண்டு செயல்படுவது என்று நல்லது என்று அவருக்குத் தோன்றியது. சிங்கப்பூர், பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டில் இருப்பதாக மற்றவர்கள் நம்பும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டம்.
இதன் முதல் கட்டமாக தனது பலஸ்தீன நண்பர்களடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நான் தங்கியிருக்க ஏற்பாடு செய்து தருமாறும் அங்கு தான் இஸ்லாமிய வர்த்தகர் போல் ஏதாவது தொழில்துறையில் முதலீடு செய்து கொண்டு தங்கியிருந்து தனது அடுத்த நடவடிக்கையை தொடரப் போவதாகவும் இந்தியாவின் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரஜீவின் பிள்ளைகளை கடத்த அதை அவர் அவருக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பாகிஸ்தானிலிருந்து உதவக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவரையும் தனக்கு அறிமுகம் செய்யுமாறு கோரியிருந்தார். அவர்களும் மிக விரைவிலேயே செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தனர்.
தான் கராச்சிக்கு தனது வதிவிடத்தை மாற்றப் போகும் விடயத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காகத் தான் சிங்கப்பூருக்குப் போய் தங்கியிருக்கப் போவதாக ஒரு வதந்தியை வெளியில் பரவவிட்டார். அவரது மிக நெருங்கிய நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களாக இருந்த சக்திவேல், ராபின் (சமீபத்தில் சுவிஸில் கொலை செய்யப்பட்டவர்.) ஆகிய இருவருக்கு மட்டும் தான் அவர் கராச்சி செல்லும் விடயம் தெரியும்.
மற்ற அனைவரும் உமா சிங்கப்பூருக்குப் போவதாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் பலஸ்தீன தொடர்பாளியிடமிருந்து இருந்து கராச்சியில் அவர் தங்கியிருக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதென்றும் அங்கே தங்களுடைய நண்பரான பாருக் தாதாவை தொடர்பு கொள்ளும்படியும் அவர் உமாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்றும் உடனடியாக அவரை தொடர்பு கொள்ளுமாறும் தகவல் வந்தது. உமாமகேஸ்வரன் காலம்கடத்தாது விரைந்து கராச்சிக்குச் செல்ல போலிப் பாஸ்போட் விசாவுக்கும், விமானடிக்கற்றுக்கும் ஒழுங்கு செய்தார். ரஜீவ்காந்திக்கும், றோவுக்கும் விரைவில் பாடம் படிப்பிக்கின்றேன் என்று அவர் கறுவிக் கொண்டார். ஆனால் பாவம் அவர் கராச்சியில் சென்று சந்திக்கப் போகின்ற பாருக் தாதா றோவினுடைய ஆளென்பது அவருக்குத் தெரியாது.
மாறுவேடத்தில் பாகிஸ்தான் நோக்கி உமாவின் பயணம்
தொடரும்………….
முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர்.
http://www.nitharsanam.com/?art=16506

