04-17-2006, 11:29 AM
<b>இந்த பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்த ரசிகைக்கும், நீதியான தீர்ப்பை வழங்க எமது கருத்துக்களை கணக்கு பார்த்துக்கொண்டிருக்கும் நடுவர் அவர்கட்கும், மற்றும் எமதணி, எதிரணி நண்பர்களுக்கும், இப்பட்டிமன்றத்தை ரசித்துக்கொண்டு... எமக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? என்ற தலைப்பில் இடைவெளி உருவாவதற்கு காரணம் பிள்ளைகளே என்று வாதிட வந்திருக்கிறேன்.. இதனூடாக " பிள்ளைகள் தமது சுயநலங்களுக்காக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் விலகிசெல்வதும், அதற்காக அவர்கள் கூறும் விளக்கங்கள்" பற்றிய தவறான விடயங்களை சுட்டிக்காட்ட எனக்கு வாய்ப்பு ஒன்று கிடைத்தமைக்காக மகிழ்ச்சி அடைக்கிறேன்.
எனது கருத்தை கூறும் அதே நேரத்தில், எதிரணியினரின் சில பிழையான கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அதன் மேலே எனது சரியான கருத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன். பிள்ளைகள் சுயநல தேவைகளுக்காக பலகாரணங்களை கூறி பெற்றோரின் மீது பிழையை போட்டு விட்டு விலகிவிடுகின்றனர், தமது பிழையை மறைப்பதற்கு, தமது குற்ற உணர்வை குறைத்துக்கொளுவதற்கு, மற்றவர்களிடத்தில் தமது அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கூறும் காரணங்களை தான் எதிரணியினரும் கூறியிருக்கிறார்கள். நிதர்சன் ஒரு உதாரணம் சொன்னார்... வருவாயை பெற்றோரிடம் கொடுத்தல்... அப்புறம் விருந்துபசாரத்துக்கு செல்வதற்கு பெற்றோரை கேட்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் சமுதாயத்தின் மீது பழியை போட்டு விட்டு தனது குற்ற உணர்வை குறைக்க முற்பட்டிருக்கிறார்.
ஆனால் நான் கூறுகிறேன்.. வெள்ளையின பெற்றோர் போலவா எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்கள்?? ஒரு வெள்ளையின பிள்ளையின் பேட்டி பார்த்தேன். புதுவருடத்தில் உனது ஆசை என்ன?? பதில் கூறியது அந்த பிள்ளை. இந்த வருடத்திலாவது எனது அம்மா அப்பா வேளைக்கு எழும்ப வேண்டும். என்னை கவனிக்கவேண்டும். இப்படியா எமது பெற்றோர் எம்மை பராமரித்தார்கள். அப்படியான எமது பெற்றோருக்கு அவர்கள் செய்ததை திருப்பி காட்ட வேண்டுமா?? அல்லது வெள்ளையின நண்பன் காசை கொடுக்காதே என்று கூறினால் அதை கேட்டு நம் பெற்றோரை வெறுக்க வேண்டுமா?? காசை கொடுக்க கூடாதா?
அத்துடன் நிதர்சனின் சமுதாய கருத்தை மறுப்பதுக்கு நான் ஒன்று கூறுகிறேன். புலம் பெயர்நாடுகளில் மட்டுமா பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி வருகின்றது?? எமது தாய்நாட்டில் இடைவெளி வரவில்லையா?? புலம்பெயர் நாடுகளை மையமாக வைத்து நீங்கள் கூறிய 2..3 காரணங்கள் இல்லாதபோதும் தாயகத்திலும் இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்??
சமுதாயத்துக்கு வலுச்சேர்க்க நிதர்சன் இன்னொரு கருத்தை சொன்னார். சமுதாயம் பெற்றோரிடம் பத்திவைக்கிறது என்று. நிட்சயமாக பெற்றோரிடம் சென்று நேரடியாக உங்கள் பிள்ளை செய்கிறது என்று சொல்ல கூடியவர் இன்னும் ஒரு பெற்றோராகத்தான் இருப்பார். அதுவும் பத்திவைப்பதற்காக அவர் சொல்ல மாட்டார். அந்த பிள்ளையை நெறிப்படுத்த வேண்டும் என்ற நல்நோக்கிலேயே அவர் சொல்லுவார் என்பது என் கருத்து. ஆனால் பிள்ளைகள் அதை பத்திவைப்பதாக எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் சண்டை போடுகிறார்கள். சரி இப்போது பிள்ளைகளை தான் போன போக்கில் விட்டு விட்டால்... பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலக மாட்டார்களா?? பெற்றோர் மீது பிழை சொல்லமாட்டார்களா?? அதுவுமில்லை. புலர்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் பெற்றோர்களிடத்திலிருந்து விலகி.. பலவிதமான குற்ற செயல்களை செய்து விட்டு பெற்றோரின் முகங்களின் முகத்திலேயே முழிக்கமுடியாத அளவுக்கு ஒழிந்துவாழ்கிறார்கள். ஆனால் பெற்றோர் அந்த வேளையில் கூட பிள்ளைகளை அரவணைத்து, காவல்துறையினரின் உதவியுடன் பிள்ளைகளை மீண்டும் ஒரு வளமான வாழ்வை கொடுக்க முற்படுகிறார்கள். அதை நாம் அன்றாடம் புலம் பெயர்நாடுகளில் காண்கிறோம். இவ்வேளையில் பைபிளில் இடம்பெறும் ஒரு கதை அனைவருக்கும் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். வீட்டில் இருக்கும் தனது மகனைவிட விலகிசென்ற மகன் திரும்பிவானா என்று ஒரு தந்தை ஏங்குவது போல அக்கதையில் வருகின்றது. ஆகவே பெற்றோர் பிள்ளைகள் விலகிச்செல்வதற்கு காரணமாக அமைவதில்லை.
எதிரணி நண்பர் தலா கூறிய கருத்துக்கள் அனேகமாக பெற்றோர்கள் அன்பு செய்யவில்லை, பிள்ளைகளை நல்வழிப்படுத்தவில்லை. அதனால் தான் பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கிறார்கள், விலகிச்செல்கிறார்கள் என்று கூறினார். ஒரு சம்பவத்தை கூறி எனது கருத்துக்கு வலுச்சேர்க்க நினைக்கிறென்.. சிறிது காலத்துக்கு முன்பு களத்தில் ஒரு கவிதையை உறவுகள் பார்த்திருக்கலாம். விலகிப்போகும் பிள்ளையை நினைத்து கவலையில் எழுதிய கவிதை அது. புலம் பெயர்நாடுகளில் உள்ள ஒவ்வொரு பெற்றோரது ஏக்கம் கவலையை பிரதிபலிக்க கூடியதாய்... ஒரு பெத்தமனம் எழுதிய கவிதை இது. இது தான் யதார்த்ததில் நடைபெறுகிறது. இவ்வாறு பெற்றோர் எபோதும் பிள்ளைகளின் நன்மைக்காகவே செயற்படுகின்ற போதிலும்.... முதுமையடைந்த பெற்றோருக்கு உதவி செய்யவிரும்பாத பிள்ளைகள், தமது ஆசைகளை நிறைவேற்றுக்கொள்வதற்காக சுயநலமாக செயல்படும் பிள்ளைகள், பெற்றோரின் மீதும் சமுதாயத்தின் மீதும் பிழைகளை போட்டு விட்டு தப்பித்து கொள்ள முற்படுகிறார்கள். என்று கூறி.. இப்பட்டி மன்றத்தைப் பார்த்து இனியாவது பிள்ளைகள் சரியாக நடப்பதற்கு வழிசமைக்கும்படி ஒரு தீர்ப்பை நடுவரவர்கள் வழங்குவார் என்ற எதிர்பார்ப்போடு விடைபெறுக்கிறேன். நன்றி வணக்கம்.
இன்னுமொன்றை கூறுகிறேன் நடுவரவர்களே.... எதிரணியினதின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டி அவர்களின் கருத்தை வெட்டுவதும், எமதணிக்காக ஒரு கருத்தைக் கூறி எமதணிக்கு ஒரு கருத்தை சேர்ப்பதும் ஒன்று தான். சில வேளையில் கருத்துக்களை சரியாக வாசிக்காத சிலபேர் எங்கே உங்கள் கருத்தை காணவில்லை என்று கேட்க முற்படுகிறார்கள். அதற்காகத்தான் சொன்னேன்.
நன்றி வணக்கம்.</b>
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? என்ற தலைப்பில் இடைவெளி உருவாவதற்கு காரணம் பிள்ளைகளே என்று வாதிட வந்திருக்கிறேன்.. இதனூடாக " பிள்ளைகள் தமது சுயநலங்களுக்காக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் விலகிசெல்வதும், அதற்காக அவர்கள் கூறும் விளக்கங்கள்" பற்றிய தவறான விடயங்களை சுட்டிக்காட்ட எனக்கு வாய்ப்பு ஒன்று கிடைத்தமைக்காக மகிழ்ச்சி அடைக்கிறேன்.
எனது கருத்தை கூறும் அதே நேரத்தில், எதிரணியினரின் சில பிழையான கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அதன் மேலே எனது சரியான கருத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன். பிள்ளைகள் சுயநல தேவைகளுக்காக பலகாரணங்களை கூறி பெற்றோரின் மீது பிழையை போட்டு விட்டு விலகிவிடுகின்றனர், தமது பிழையை மறைப்பதற்கு, தமது குற்ற உணர்வை குறைத்துக்கொளுவதற்கு, மற்றவர்களிடத்தில் தமது அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கூறும் காரணங்களை தான் எதிரணியினரும் கூறியிருக்கிறார்கள். நிதர்சன் ஒரு உதாரணம் சொன்னார்... வருவாயை பெற்றோரிடம் கொடுத்தல்... அப்புறம் விருந்துபசாரத்துக்கு செல்வதற்கு பெற்றோரை கேட்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் சமுதாயத்தின் மீது பழியை போட்டு விட்டு தனது குற்ற உணர்வை குறைக்க முற்பட்டிருக்கிறார்.
ஆனால் நான் கூறுகிறேன்.. வெள்ளையின பெற்றோர் போலவா எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்கள்?? ஒரு வெள்ளையின பிள்ளையின் பேட்டி பார்த்தேன். புதுவருடத்தில் உனது ஆசை என்ன?? பதில் கூறியது அந்த பிள்ளை. இந்த வருடத்திலாவது எனது அம்மா அப்பா வேளைக்கு எழும்ப வேண்டும். என்னை கவனிக்கவேண்டும். இப்படியா எமது பெற்றோர் எம்மை பராமரித்தார்கள். அப்படியான எமது பெற்றோருக்கு அவர்கள் செய்ததை திருப்பி காட்ட வேண்டுமா?? அல்லது வெள்ளையின நண்பன் காசை கொடுக்காதே என்று கூறினால் அதை கேட்டு நம் பெற்றோரை வெறுக்க வேண்டுமா?? காசை கொடுக்க கூடாதா?
அத்துடன் நிதர்சனின் சமுதாய கருத்தை மறுப்பதுக்கு நான் ஒன்று கூறுகிறேன். புலம் பெயர்நாடுகளில் மட்டுமா பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி வருகின்றது?? எமது தாய்நாட்டில் இடைவெளி வரவில்லையா?? புலம்பெயர் நாடுகளை மையமாக வைத்து நீங்கள் கூறிய 2..3 காரணங்கள் இல்லாதபோதும் தாயகத்திலும் இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்??
சமுதாயத்துக்கு வலுச்சேர்க்க நிதர்சன் இன்னொரு கருத்தை சொன்னார். சமுதாயம் பெற்றோரிடம் பத்திவைக்கிறது என்று. நிட்சயமாக பெற்றோரிடம் சென்று நேரடியாக உங்கள் பிள்ளை செய்கிறது என்று சொல்ல கூடியவர் இன்னும் ஒரு பெற்றோராகத்தான் இருப்பார். அதுவும் பத்திவைப்பதற்காக அவர் சொல்ல மாட்டார். அந்த பிள்ளையை நெறிப்படுத்த வேண்டும் என்ற நல்நோக்கிலேயே அவர் சொல்லுவார் என்பது என் கருத்து. ஆனால் பிள்ளைகள் அதை பத்திவைப்பதாக எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் சண்டை போடுகிறார்கள். சரி இப்போது பிள்ளைகளை தான் போன போக்கில் விட்டு விட்டால்... பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலக மாட்டார்களா?? பெற்றோர் மீது பிழை சொல்லமாட்டார்களா?? அதுவுமில்லை. புலர்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் பெற்றோர்களிடத்திலிருந்து விலகி.. பலவிதமான குற்ற செயல்களை செய்து விட்டு பெற்றோரின் முகங்களின் முகத்திலேயே முழிக்கமுடியாத அளவுக்கு ஒழிந்துவாழ்கிறார்கள். ஆனால் பெற்றோர் அந்த வேளையில் கூட பிள்ளைகளை அரவணைத்து, காவல்துறையினரின் உதவியுடன் பிள்ளைகளை மீண்டும் ஒரு வளமான வாழ்வை கொடுக்க முற்படுகிறார்கள். அதை நாம் அன்றாடம் புலம் பெயர்நாடுகளில் காண்கிறோம். இவ்வேளையில் பைபிளில் இடம்பெறும் ஒரு கதை அனைவருக்கும் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். வீட்டில் இருக்கும் தனது மகனைவிட விலகிசென்ற மகன் திரும்பிவானா என்று ஒரு தந்தை ஏங்குவது போல அக்கதையில் வருகின்றது. ஆகவே பெற்றோர் பிள்ளைகள் விலகிச்செல்வதற்கு காரணமாக அமைவதில்லை.
எதிரணி நண்பர் தலா கூறிய கருத்துக்கள் அனேகமாக பெற்றோர்கள் அன்பு செய்யவில்லை, பிள்ளைகளை நல்வழிப்படுத்தவில்லை. அதனால் தான் பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கிறார்கள், விலகிச்செல்கிறார்கள் என்று கூறினார். ஒரு சம்பவத்தை கூறி எனது கருத்துக்கு வலுச்சேர்க்க நினைக்கிறென்.. சிறிது காலத்துக்கு முன்பு களத்தில் ஒரு கவிதையை உறவுகள் பார்த்திருக்கலாம். விலகிப்போகும் பிள்ளையை நினைத்து கவலையில் எழுதிய கவிதை அது. புலம் பெயர்நாடுகளில் உள்ள ஒவ்வொரு பெற்றோரது ஏக்கம் கவலையை பிரதிபலிக்க கூடியதாய்... ஒரு பெத்தமனம் எழுதிய கவிதை இது. இது தான் யதார்த்ததில் நடைபெறுகிறது. இவ்வாறு பெற்றோர் எபோதும் பிள்ளைகளின் நன்மைக்காகவே செயற்படுகின்ற போதிலும்.... முதுமையடைந்த பெற்றோருக்கு உதவி செய்யவிரும்பாத பிள்ளைகள், தமது ஆசைகளை நிறைவேற்றுக்கொள்வதற்காக சுயநலமாக செயல்படும் பிள்ளைகள், பெற்றோரின் மீதும் சமுதாயத்தின் மீதும் பிழைகளை போட்டு விட்டு தப்பித்து கொள்ள முற்படுகிறார்கள். என்று கூறி.. இப்பட்டி மன்றத்தைப் பார்த்து இனியாவது பிள்ளைகள் சரியாக நடப்பதற்கு வழிசமைக்கும்படி ஒரு தீர்ப்பை நடுவரவர்கள் வழங்குவார் என்ற எதிர்பார்ப்போடு விடைபெறுக்கிறேன். நன்றி வணக்கம்.
இன்னுமொன்றை கூறுகிறேன் நடுவரவர்களே.... எதிரணியினதின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டி அவர்களின் கருத்தை வெட்டுவதும், எமதணிக்காக ஒரு கருத்தைக் கூறி எமதணிக்கு ஒரு கருத்தை சேர்ப்பதும் ஒன்று தான். சில வேளையில் கருத்துக்களை சரியாக வாசிக்காத சிலபேர் எங்கே உங்கள் கருத்தை காணவில்லை என்று கேட்க முற்படுகிறார்கள். அதற்காகத்தான் சொன்னேன்.
நன்றி வணக்கம்.</b>

