04-13-2006, 03:31 AM
அருவி Wrote:உங்களின் கணிப்பில் ஏற்பட்டிருக்கும் தவறு என்னவென்றால், அவ்வார்த்தைகள் காலம் காலமாகப் பாவிக்கப்பட்டு வந்ததுதான் காரணம். அவ்வார்த்தைகளின் தோற்றப்பாடு, அதாவது அவை எவ்வாறு மக்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என உற்று நோக்கினால் பல வரலாற்றுக் குறிப்புக்களையும் நோக்க வேண்டும். இன்று தம்மை American, Canadian, Australian என்கூறும் மக்களின் நாட்டு வரலாறுகள் இங்கு தம்மொழிமூலம் அடையாளப்படுத்தும் மக்களின் நாடுகளின் வரலாற்றைவிட மிகவும் குறுகியது. அதைவிட அவ் நாடுகளினைத் தம் காலாதிக்க நாடுகளாகவும் கொண்டிருந்தார்கள். இவ்வாறு நோக்கும் போது தமிழர்கள் தங்கள் மொழி கொண்டெ தம்மை அடையாளப்படுத்தலாமே. மற்றும் ஒரு வார்த்தையின் வரைவிலக்கணம் அதன் பயன் பாட்டைக் கொண்டே வரைவிலக்கணம் அளிக்கப்படுகிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடித்து விட்டு அதற்கு எந்தவொரு சொல்லை இட்டாலும் அதைத்தான் அதன் பெயராகக் கொள்வார்களே தவிர அதற்குப் புதிய ஓர் பெயர் கொடுக்கமாட்டார்கள்.
அருவி சொல்வது போல மொழி நீரியாக அடையாளப்படுத்துவது தான் சிறந்தது. ஏனென்றால் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு நாடு உள்ளது போல தமிழனுக்கு தமிழீழம் தவிர வேறு இடம் என்று ஏதும் இல்லை.
எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்தாலும் தமிழன் என்று அடையாளப்படுத்துவது தான் ஒரு புரிந்துணர்வை எமக்கிடையே ஏற்படுத்தும்
[size=14] ' '

